அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் சிறியரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய இரண்டரை வயது குழந்தை எவ்விதமான காயங்களும் இன்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்னையில் இருந்து சுமார் 53 கிலோ மீற்றர் தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குருதுகஹ ஹடேகம அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஐஸ்கிரீம் விற்பனை செய்துவிட்டு கடவத்தை நுழைவாயிலில் இருந்து அம்பலாந்தோட்டைக்கு சென்ற சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலகத்தால் விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
லொறி வீதியின் இடது பக்கமாக இழுத்துச் சென்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் முன் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த சாரதியின் மனைவி மற்றும் சிறு குழந்தை ஆகியோர்
வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதன் பின்னர் லொறி கவிழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
















