Tag: யாழ்ப்பாண
உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை
உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை
உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை
நீதிமன்ற சுதந்திரத்தில் தலையிடக்கூடும்
நீதிமன்ற சுதந்திரத்தில் தலையிடக்கூடும் என்ற கவலைகளை எழுப்பி, யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி ஏ. ஜி. அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றம்
குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு யாழ்ப்பாண சட்டத்தரணி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிபதி அலெக்ஸ்ராஜா 2026, ஏப்ரல் 22 அன்று யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார் என்றும், பின்னர் பதவியேற்ற ஒரு
மாதத்திற்கும் சற்று அதிகமான காலத்திற்குள் பதுளையில் உள்ள உரிமையியல் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இடமாற்றம் 2026, மே 31 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
2026, மே 29 அன்று நடைபெற்ற சங்கத்தின் விசேஷ பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக, ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சங்கம் கூறியுள்ளது.
யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கத்தின்படி
யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கத்தின்படி, இந்த இடமாற்றத்தின் திடீர் தன்மையானது, வழக்கமான நிர்வாக நடைமுறைகளுடன் தொடர்பில்லாத காரணங்கள் இருக்கலாம் என்பது குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.
வட மாகாண ஆளுநர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த நீதிப்பேராணை மனுக்களில், நீதிபதி அலெக்ஸ்ராஜா பிறப்பித்த சில இடைக்கால
உத்தரவுகளுடன் இந்த இடமாற்றம் தொடர்புடையதாக இருக்கலாம் என்று உறுப்பினர்களிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் மேலும் தெரிவித்தது.
“வட மாகாண ஆளுநருக்கு எதிராக மாண்புமிகு நீதிபதி பிறப்பித்திருந்த சில இடைக்கால உத்தரவுகளாலேயே இந்த இடமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று
எங்கள் உறுப்பினர்களிடமிருந்து நாங்கள் நம்பகமான முறையில் கேள்விப்பட்டிருக்கிறோம்,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்விஷயம் தொடர்பாகத் தலையிடுமாறு கோரி, ஆளுநர் அரசாங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட சில அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் சங்கம் மேலும் கூறியது.
நீதிமன்ற அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டாலும், திடீர் மற்றும் விளக்கப்படாத இடமாற்றங்கள்,
குறிப்பாக நிர்வாகத் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் எழும்போது, நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடும் என்று சங்கம் வலியுறுத்தியது.
நீதித்துறை விவகாரங்களில் தலையீடு இருப்பதாகத் தோன்றுவது கூட மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்று அந்தக் கடிதம் வலியுறுத்தியதுடன், நாட்டின்
தலைவர் என்ற முறையில், நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் “சகிப்புத்தன்மையற்ற” அணுகுமுறையை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டது.
இவ்விவகாரம் குறித்து மேலும் விவாதிப்பதற்காக, ஜனாதிபதி திசாநாயக்கவை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குமாறு சங்கம்
கோரியுள்ளதுடன், விரைவான பதிலை எதிர்பார்க்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

யாழ்ப்பாண குயிலே இங்க கொஞ்சம் வாடி |Jaffna Kuyile Inge Konjam Vaadi |வன்னி மைந்தன் பாடல்
யாழ்ப்பாண குயிலே இங்க கொஞ்சம் வாடி |Jaffna Kuyile Inge Konjam Vaadi |வன்னி மைந்தன் பாடல்
யாழ்ப்பாண குயிலே இங்க கொஞ்சம் வாடி என்ற பாடலை வன்னிமைந்தன் எழுதியுள்ளார் .
யாழ்ப்பாண குயிலே இங்க கொஞ்சம் வாடி இணையத்தில் பட்டையை கிளப்புகிறது.
யாழ்பாணத்து பாடல்கள் |
Jaffna Kuyile Inge Konjam Vaadi | Vanni Mainthan Song
The song Jaffna Kuyile Inge Konjam Vaadi has been written by Vanni Mainthan. Jaffna Kuyile Inge Konjam Vaadi is making waves on the internet
Jaffna Songs |Jaffna Kuyile Inge Konjam Vaadi
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சுழலில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளது
யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்
யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்
யாழில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .வீடு ஒன்றில் இருந்து இவர் சடலமாக மீட்க பட்டார் .
இவ்வாறு இறந்தவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுளளார் .
இவரது மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்கிறது .
யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள் என்று நிறுத்த படும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசியரையர் அறுவர் உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துணை துறை தலைவர் பதவியில் உள்ள ஒருவர் வெளிநாடு சென்று கல்வி கற்க முனைந்துள்ளார் .
ஆனால் அந்த பதவி பறிபோய் விடும் என்ற பீதியில் ,அவர் வெளிநாடு செல்லாது அங்கே கல்வியை தொடர்ந்துள்ளார் .
யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
இதனால புதிதாக துறை தலைவர் கிடைக்க பெறவிருந்த பேராசிரியர் , யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் முன்னிலையில் ,உடலில் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார் .
இவரால் இதே பல்கலைக்கழகத்தில் ,18 மாணவர்கள்பகிடிவதை புரிந்தனர் எனவும் ,அதில் சில மாணவர்கள் பெயரை குறிப்பிட்டு, இவர்களே மாபியாக்கள் என திட்டிய நிலையில் ,
மாணவர் ஒருவனும் ,மாணவியும் வீட்டிற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்திட முனைந்துள்ளனர்.
மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்
இலங்கை ; யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரி பொருள் வாங்கிட வரிசையில் காத்து நின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
எரிபொருள் பெற்றிட காத்திருக்கும் மக்களுக்குள் இடையில் புகுந்திட மேற்கொள்ளும் செயல்பாடுகளினால்
மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது.
மருத்துவர்,தாதியரை , கட்டாய விடுமுறையில் அனுப்பும் யாழ் மருத்துவமனை
மருத்துவர்,தாதியரை , கட்டாய விடுமுறையில் அனுப்பும் யாழ் மருத்துவமனை
தமிழர் தாயகமாக விளங்கும் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரச மருத்துவ மனைகளில் பணி புரியும் தாதிமார் ,மற்றும்
மருத்துவர்களை அதன் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது
மாதத்தில் பதின் ஐந்து நாட்கள் பணிபுரிந்தால் ,ஏனைய நாட்கள் பணிபுரிய தேவை இல்லை என்ற வகையில் இந்த நகர்வு நகர்த்த படுகிறது ,
இதனால் மேலதிக நோயாளர் பராமரிப்பு வேலையை புரிந்தவர்கள் வேலைக்கும் ஆப்பு அடிக்க பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்க
படுகின்றனர் ,ஊரடங்கு வேளையை பயன் படுத்தி மக்கள் மருத்துவ மனைகளுக்கு வந்திட மாட்டார்கள் என்ற நிலையை மேற்கோள் காட்டி தாதிமார்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர்
ஓசை படாமல் உள்ளகத்தே நடக்கும் இந்த விளையாட்டு சுகாதார அமைச்சர் ,கோட்டாவின் நேரடி கட்டு பாட்டில் ,அரச பணத்தை மீத
படுத்தி கொடுக்கும் நடவடிக்கையின் முன் மாதிரி செயலாக இது பார்க்க படுகிறது
நோயாளர்கள் உரிய முறையில் கவனிக்க படாமல் உள்ளதும் அம்பல மாகியுள்ளது ,எனினும் இதனை மருத்துவர் சத்திய மூர்த்தி
போன்றவர்கள் மறைத்து வருவதாகவும் குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன .
உதாரணமாக இன்று வேலை செய்தால் நாளை கட்டாய விடுப்பு வழங்க படுகிறது ,அதற்கு அளிக்க படும் விளக்கம் இந்த நோயில்
இருந்து தாதிமார்களை ,மருத்துவர்களை காப்பாற்றி கொள்ளும் நடவடிக்கையாம் .
நேரடி பார்வைக்கு இது சரியான ஒன்றாக இருக்கும் ,ஆனால் உள்ளகத்தே பணத்தை மீத படுத்தி அரசை காப்பாற்றும் தந்திர நகர்வு என பாதிக்க பட்டவர்கள் கருத்துரைக்கின்றனர்
கொரனோ நோயை முதன்மை படுத்தி ,இந்த ஓசை படாத கழுத்தறுப்பு நிகழ்வு இடம்பெற்று வருகிறது ,இதனை ஊடங்கள்
வெளியிடாத வண்ணம் வாய்ப்பூட்டு போட பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது













