Tag: மோட்டார்சைக்கிள்
மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேவிந்த ருக்ஷன் என்ற 30 வயது இளைஞர் விபத்தில் படுகாயமடைந்து
ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தேகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது ,வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியில் ஐந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபன் ஒருவரே ,தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் வவுனியா வீர பெரியகுளம், மதவாச்சி ,வவுனியா ,முதலாம் குறுக்குத்தெரு ,மதவாச்சி அட்விரக்கட ,செட்டிகுளம் ,ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.
குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபரை தற்பொழுது மடக்கிப் படிக்கப்பட்டுள்ளார்.
தற் பொழுது சிதம்பர புறம் வீதி ஈரம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பொழுது ஐந்து மோட்ட சைக்கிள்களும் முறையே, 5,802,99 5 லட்சம் மூன்று லட்சம் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .
குறித்த வாலிபன் தற்பொழுது கைது செய்யப்பட்ட நிலையில் ,போலீசார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (09) பதிவாகியுள்ளது.
பணத்தை பறிகொடுத்த குரவில் பகுதியினை சேர்ந்த குறித்த பெண் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
தன்னிடம் இருந்த பணம் உட்பட 2 இலட்சத்து 80,000 ரூபாய் வரையான பணத்தினை கைப்பையில் கொண்டு சென்றவேளை இந்த கொள்ளை சபம்வம் இடம்பெற்றுள்ளது.

















