மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை

மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (09) பதிவாகியுள்ளது.

பணத்தை பறிகொடுத்த குரவில் பகுதியினை சேர்ந்த குறித்த பெண் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

தன்னிடம் இருந்த பணம் உட்பட 2 இலட்சத்து 80,000 ரூபாய் வரையான பணத்தினை கைப்பையில் கொண்டு சென்றவேளை இந்த கொள்ளை சபம்வம் இடம்பெற்றுள்ளது.

Error: View 9293b2au4w may not exist