இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு அரபி செய்தி வெளியிட்டு இஸ்ரேலிய முதுகில் ஏறி குத்தி உள்ளது.

யூத நாட்டின் தலைமை விமான நிலையம் மீது ஏமன் ஹவுதி அன்சர்அல்லா படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தி விமான தளத்தை மூடு விழா செய்தனர்.

இதனால் சர்வதேச விமானங்கள் குறித்த விமான நிலையத்தில் வந்து இறங்குவதற்கு அச்சம் கொண்டு தடை செய்யப்பட்டன.

யூத நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச விமானங்கள் வந்து இறங்குவதற்கு ,அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து இந்த மூடு விழா இடம் பெற்றது.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ,தொடர் தாக்குதலுக்கு பதிலடியாகவே ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள், திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தி ,குறித்த விமான நிலையத்தை அடித்து பூட்டினர்.

அதனை அடுத்து ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகளின் பேச்சாளர் ,அவர்கள் தரை மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் நாட்டை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .

ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் நடத்திவரும், இந்த தாக்குதலினால் நிலை குலைந்து போன இஸ்ரேல் படைகள், ஏமன் நாட்டினுடைய முக்கிய தலைவரை இல்லாத அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் அவர்களுக்கு எதிரான அழித்தொழிப்பு தாக்குதலை, இஸ்ரேல் நடத்தும் என, சர்வதேச உளவுத்துறை ஊடகங்கள் சில இப்பொழுது ஊளையிட ஆரம்பித்திருக்கின்றன.

வல்லாதிக்க அரசாக தம்மை நினைத்து, பலஸ்தீன மக்களை அடக்கி ஒடுக்கி வந்த இஸ்ரேல் படைகள், முதுகெலும்பு நேற்று முறிக்கப்பட்டதாக ,ஹவுதி அன்ஸர் அல்லா தற்பொழுது அறிவித்தலை வெளியிட்டு இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .