Tag: பல்கலைக்கழகத்தில்
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நதுப்பாக்கிச் சூடு 3 பேர் காயம்
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நதுப்பாக்கிச் சூடு 3 பேர் காயம்
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நதுப்பாக்கிச் சூடு 3 பேர் காயம் ,அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நடந்த புதிய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கரோலினா மாநில பல்கலைக்கழக

தென் கரோலினா மாநில பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர்
இறந்தனர், மற்றொருவர் காயமடைந்தனர் என்று பல்கலைக்கழகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களையோ அல்லது காயமடைந்த நபரின் நிலையையோ பல்கலைக்கழக
அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்று பள்ளி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல்
துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் வந்தபோது இரவு 9:15 மணியளவில் பள்ளி வளாகத்தை பூட்டியது. சில மணிநேரங்களுக்குப் பிறகும் அது பூட்டப்பட்டே இருந்தது.
புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர், மேலும் சட்ட அமலாக்க அதிகாரிகள் வளாகத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் ரோந்து சென்றனர்.
பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வகுப்புகளை ரத்து செய்து மாணவர்களுக்கு ஆலோசகர்களை வழங்கத் தொடங்கியது.
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு ,அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் குறைந்தது 300 புத்த பிக்குகள் சிக்கித் தவிக்கின்றனர்: அமைச்சர்.
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில்
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவிக்கும் 300 புத்த பிக்குகளை மீட்பதற்கான நடவடிக்கைகள்
நடைபெற்று வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.
வீடுகளின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கை
பல வீடுகளின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக
திலீபனின் 38 வது நினைவு தினம்
தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து
மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள்
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும்
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்,
ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ்
நிலையங்களை திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து,
தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையிலான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சுழலில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளது
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் 12 பேர் கைது
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் 12 பேர் கைது
இலங்கை – கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற திடீர் மோதலில் சிக்கியிருவர் படுகாயமடைந்துள்ளனர் .
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சுமார் 12 பேர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர் .
பபகிடி வதை சட்டம் இடம்பெற்றால் எட்டு வருடம் கல்வி பயில தடை என புதிய சட்ட நடைமுறையை அமூல்
படுத்திய கோட்டபாய இந்த குழு மோதலுக்கு என்ன தீர்வு காண போகின்றார் ..?
மக்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகும் ..!












