Tag: நஞ்சு
மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை யாழ்ப்பாணத்தில் தனது மகளுக்கு நஞ்சூட்டிய தந்தையை என்னவென சொல்வது.
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு
உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறதாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது.
குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமிக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தந்தையை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எத்தனையோ பெற்றோர் குழந்தைப் பேறு இன்றி தவிக்கும் இக் காலத்தில் இவ்வாறான தந்தையும் இவ்வுலகில் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியம் தான். அதிலும் யாழ்ப்பாணத்தில் என நினைக்கையில் நெஞ்சே பதறுகின்றது.
பொலிஸ் விசாரணையின்போது என்ன நடந்தது என்பதை குடும்பத்தினர் இதுவரையில் தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
என்னதான் இருந்தாலும் அந்த 6 வயது சிறுமிக்கு ஒரு தந்தை நஞ்சை ஊட்டிவிட எப்படி மனம் வந்தது? அந்த பிள்ளைக்கு என்ன தான் தெரியும் இந்த மழலை வயதில் என பிரதேச மக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை

- ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி

- கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்

- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்









