செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
Posted in இலங்கை செய்திகள்

செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa


செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா
உன்ன தேசம் மறக்குமா
செல்லப்பா செல்லப்பா
உன்ன தேசம் மறக்குமா ..

பாசறை பாணர் போர் இசை குரலோன் ஐயா செல்லப்பா

பாசறை பாணர் போர் இசை குரலோன் ஐயா , பாசறை அதிர கானம் பாடி எம்மை தட்டி எழுப்பிய வேங்கை இன்று உறங்குதே ,,,

எங்கள் பாடகன் .தேனிசை

எங்கள் பாடகன் .தேனிசை இழப்பில் ,இந்த பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன் வரி மற்றும் இசையில் இந்த பாட்டு வெளியீடு செய்ய படுகிறது.

பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
Posted in இலங்கை செய்திகள்

பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa


பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

செல்லப்பா ..நினைவு தாங்கி

பாணரே எங்க பாணரே
பாசறை பாணரே ..
நம் தேச பாடலை காந்தக் குரலால்
பாடி அதிர வைத்த பாணரே
செல்லப்பா செல்லப்பா ..நினைவு தாங்கி மலேசியாவை சேர்ந்த பாடல் ஆசிரியர் கலா அவர்கள் இந்த பாடலை எழுதியுள்ளார் .

வன்னி மைந்தன் அணி இசை கலவையில்

வன்னி மைந்தன் அணி இசை கலவையில் எதிரி இணையம் இந்த பாடலை வெளியீடு செய்துள்ளது

செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
Posted in இலங்கை செய்திகள்

செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa


செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa செல்லப்பா எங்க செல்லப்பா


எங்கள விட்டு
எங்க சென்றாய் அப்பா
செல்லப்பா எங்க செல்லப்பா
நீ எங்க மண்ணின் சொத்தப்பா
நீ எங்க மண்ணின் சொத்தப்பா .

பாடல் ஆசிரியர் தவசி

.பாடல் ஆசிரியர் தவசி அவர்கள் பாசறை பாணர் நினைவை எண்ணி உருகி எழுதியுள்ளார் .

ஐயா எங்கள் தேசத்தின் சொத்து ..எங்க தேசம் மறக்குமா பாசறை பாணரே 705

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா, யாழ் மண்ணே அலறுதடா என்ற பாடலை பாடிய தேனிசை செல்லப்பாவை வாழ்த்தி முகநூலில் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழீழ தேசிய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து தனது மதுர குரலினால் பாசறை பாணர் செல்லப்பா பலத்தை ஈட்டி கொடுத்தவர் .

அவ்வாறான அற்புத பாடகர் அர்ச்சுனாவிற்கு அவரது வீரம் எண்ணி வன்னி மைந்தன் ஆகிய என்னால் எழுத பட்ட வரிகளுக்கு உயிர் கொடுத்து ,குரல் வழங்கி செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இணைந்து பாடிட, அழகிய துள்ளிசையில் இளங்கோ செல்லப்பா இசை அமைத்து இருந்தார் .

28 மணித்தியாலத்தில் இந்த பாடல் உருவாக்கம் பெற்று இருந்தது .மிக வேகமாக பாடலை அமைத்து குறித்த நேரத்தில் வழங்கி இருந்தார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

தன் உயிரை துச்சமென மதித்து மக்களுக்கு குரல் வழங்கிய அர்ச்சுனா வெற்றி பெற எண்ணும் மக்களில் நாமும் அடங்கும் என்பதை இந்த பாடல்; கூட்டு தயாரிப்பின் ஊடக வெளி படுத்தியுள்ளோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது .

பட்டி தொட்டி எல்லாம் வேகமாக அர்ச்சுனா பரவிட இந்த யாழ் மண்ணே அலறுதடா என்ற ஒரு பாடல் முதலாவதாக வெளியாகி இருந்ததும் ,மக்கள் இரசித்து கேட்டதுமாக அமைந்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

இசைக்கு இன்று பிறந்த நாள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இசைக்கு இன்று பிறந்த நாள்

இசைக்கு இன்று பிறந்த நாள்

இசைபாடி நெஞ்சொடு உறவானவன்
இயலாத வேளையும் மெழுகானவன்
உருவாகும் தமிழீழ கனவானவன்
உள்ளத்தில் என்றும் நிலையானவன்

அசையாத அலைக்குள்ளும் அயலானவன்
ஆறுதல் கூறிடும் குரலானவன்
விடுதலை ஒளிக்கு விதையானவன்
விளக்கேற்றும் வீரர் நீர் விழியானவன்

அசையாத கொள்கை துடிப்பானவன்
அண்ணன் இவனுக்கு உயிரானவன்
கோடி தமிழ் நெஞ்ச உறவானவன்-செல்லப்பா
கோடிக்கு விலைபோக நிலையானவன்

இன்றுந்தன் அகவையில் வாழ்த்துகின்றேன்
இன்றிந்த அகவையில் வியக்கின்றவன்
இன்று போல் என்றும் நீ வாழ்ந்திடனும்
இசையே மகிழ்வோடு வாழ்த்துகின்றேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-04-2024

பாசறை பானர் தேனிசை செல்லப்பா 83 அகவை நாளில் அவருக்கு என் வாழ்த்துப்பா ..

Posted in இலங்கை செய்திகள்

தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ

தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ

தமிழீழத்தின் தேசிய பாடல்களில் முதல்வராக விளங்கி வரும் செல்லப்பா அவர்கள்

மரணமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பட்டு வந்தன ,ஆனால் தற்போது அவர்

உயிருடன் உள்ளேன் என நேரலையில் தோன்றி செய்தியை வெளியிட்டுள்ளார்

தமிழீழத்தை கண்டே பின்னரே நான் மரணிப்பேன் என செல்லப்பா உருக்கம்

click here watch full video

video

    Posted in இலங்கை செய்திகள்

    செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை

    செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை

    தமிழத்தின் தேசிய குரலாக ஒலித்து வரும் பாசறைப்பானார் செல்லப்பா அவர்கள்


    மரணமானதாக போலியான செய்திகள் பரப்ப பட்டு வருகின்றன


    அவர் உடல் நலம் குன்றி இருந்தமைஉண்மை தான் ஆனால் தற்போது அல்ல எனவும் ,வேண்டும்

    என விஷமிகள் திட்டமிட்டு இவ்வாறான செய்திகள் பரப்ப பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் நமக்கு
    தெரிவித்தனர்

    நலமுடன் ஐயா அவர்கள் உள்ளது மிக பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விரைவில் பல

    பாடல்களை அவர் நமக்கு வழங்குவார் என எதிர்பார்க்கலாம்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      செல்லப்பா உனை மறவோம் ..!

      செல்லப்பா உனை மறவோம் ..!

      முரசுமோட்டை ஒன்றியத்தின்
      முதலவாது மன்றத்தில்
      வந்தமர்ந்த மூத்தவனே -எங்கள் …
      மனத் தடத்தில் நீ இருப்பாய் …

      சந்தியில வந்து நின்று
      சாக்கடையை திறந்தவரை
      கண்டு பொங்கி எழுந்தவனே
      கள பாடல் தந்தவனே …

      மிஞ்சி தமிழ் வையம் எழ
      கொஞ்சு தமிழ் நீ குழைத்து
      ஏந்த கருவி செய்தவனே
      எங்கள் ஆசான் ஆனவனே …

      கானகத்தில் அவன் இருந்து
      கட்டளைகள் தந்து விட
      பாட்டாலே உயிர் தந்த
      பா இசை நீ தானே ….

      வங்க கடல் இடையினில
      வந்து வழி தடுத்துன்னை
      சிறை இருத்தி வைக்கையிலும் -நீ
      சிறகுடைந்து போகலையே …

      மூத்தவனே நீ வந்து
      முன் அமர்ந்து மகிழ்வித்தாய்
      நெஞ்ச மெல்லாம் மலர்கிறது
      உன் நினைவினிலே சுத்துறது …

      கண் முன்னே வந்தமர்ந்து
      காட்சி தந்த பண்ணவரே
      முரசுமோட்டை மாநகரம் -உங்கள்
      மூவரையும் மறவாது

      தேகம் உடல் வேகையிலும்
      தேம்பி விழி கதறையிலும்
      கரம் தந்து வலி துடைத்த
      காணக் குயில் நீ தானே …

      செல்லப்பா உனை மறவோம் ..!
      செல்லப்பா உனை மறவோம் ..!

      ஓடி வந்து இங்கமர்ந்து
      உன்னை பார்க்க வந்ததிந்த
      கொஞ்சு தமிழ் பார்த்தாயா
      கொள்ளை பிரியம் கண்டாயா …?

      வாடாத மலரவனே
      வைய தமிழ் மறவானே
      எம் நெஞ்சில் நீ இருப்பாய்
      என்றும் உன்னை மறவோமே …!

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -12/04/2017

      Home » செல்லப்பா