Tag: சஜித் பிரேமதாசா
யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா
யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா
யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா ,யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்
நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) காலை தேசிய வைத்தியசாலைக்கு சென்றார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட்டு அங்கிருந்து வெளியேறும் போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எல்லோரும் சரியான வழிமுறையைப் பின்பற்றியொழுக தயாராக இருந்தாலும், யூடியூப் மூலம் வழங்கப்படும் நீதியின் நியாயத்தன்மை குறித்து எந்தவித ஒருமித்த கருத்தும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தால் பெற்றுத்தரப்படும் தீர்ப்புக்கள் மற்றும் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் தொடர்பில் பல நாட்களுக்கு முன்பே, அரசியல் கட்சி சார்
யூடியூப் ஆர்வலர்கள் முன்கூட்டியே எவ்வாறு கருத்து வெளியிடுவர் என்பது குறித்து பிரச்சினை காணப்படுகின்றது.
இவ்வாறான விடயமொன்று நடக்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதியை நிலைநாட்டும் செயற்பாடு
இது நீதிமன்றத்துக்கும், நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் மற்றும் உச்ச சட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
முறைமையில் மாற்றத்தைக் (சிஸ்டம் சேன்ஞ்ச்) கொண்டு வருவோம் எனக் கூறி இதனையா செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்புகிறோம்.
அரசியலமைப்பின் சட்டங்கள் அல்லது நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்.
நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒரு அரசியல் யூடியூபர் முன்கூட்டியே அறிவிப்புச் செய்ய முடியாது.
சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் நாட்டில் மட்டுமே இதுபோன்ற ஒரு விடயம் நடக்கும்.
ஆனால் நம்மைப் போல ஜனநாயக ஆட்சி செய்யும் நாட்டில் இதுபோன்ற ஒரு விடயம் நடக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒரு யூடியூப் சேனல், கைது செய்யப்படவிருக்கும் நபரின் பெயர், கைது செய்யப்படும் திகதி மற்றும் அவர் சிறையில் கழிக்கப்போகும் நாட்களின்
எண்ணிக்கையைக் கூட முன்கூட்டியே வெளியிடுவதானது, நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.
யூடியூப் சேனல்கள் மூலம் நீதியை நிலைநாட்டும் செயல்முறையை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை. சட்டத்தை அமுல்படுத்துவதில் சகலரையும் சமமாக நடத்துவது பிரச்சினைக்குரிய விடயமல்ல.
என்றாலும், அரசியல் யூடியூபர்கள் நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்துவது சட்ட ஒழுங்கு முறையில் அமைந்த விடயமொன்றல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தற்சமயம் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து கலந்துரையாடல்களை நடத்துவது வெறுமனே அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவல்ல.
50 சதவீதமானோர் தற்போது ஏழ்மை நிலை
நாட்டில் சுமார் 50 சதவீதமானோர் தற்போது ஏழ்மை நிலையில் இருந்தாலும், சுமார் 75 சதவீதமானோர் அஸ்வெசும நிவாரணத்தைக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டுமானால் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி தேவை, நாட்டில் இதற்கான விடயம் நடப்பதாக இல்லை.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் வீழ்ச்சி கண்டுள்ளன.
இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் பிரயோக ரீதியான எந்தத் தீர்வுகளும் இல்லை.
இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது.
2028 முதல், வருடாந்தம் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த வேண்டி காணப்படுகின்றது.
இதற்கான பலம் இயலுமை நமது நாட்டிடம் உள்ளதா என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கம் தற்போது போகும் போக்கைப் பார்த்தால், 2028 ஆம் ஆண்டுக்குள் மீண்டுமொரு புதிய வங்குரோத்து நிலை உருவாகக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது.
தற்போது போகும் இந்த முறை பொருத்தமான முறையல்ல. இந்த போக்கால் நாட்டைக் கட்டியெழுப்பும் இலக்குகளை அடைய முடியாது. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக இல்லை.
எதிர்க்கட்சி கூட நாட்டைக் கட்டியெழுப்பும் கருத்துக்களின் அடிப்படையிலயே முன்வருகின்றன. நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைத் தொகுப்பின்
அடிப்படையில் ஒன்று சேருவோமே தவிர, அதிகாரத்தைப் பெறுவதற்கோ அல்லது பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கோ நாம் ஒன்று சேர மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா ,சஜித் பிரேமதாசா ஐங்கயன் திடீர் சந்திப்பு .
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணத்திற்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார் .
அங்கு பாடசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்ற பொழுது ஐங்காயனை சந்தித்துக் கொண்டார் .
இருவரும் ஒன்றாகச் சந்தித்து அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசப்பட்டதான விடயங்கள் வெளியாக இருக்கின்றன.
பிரேமதாசாவுக்கு அங்கயன் ஆதரவு .
எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு அங்கயன் யாழ்ப்பாணத்தில் இருந்து மிகப்பெரும் ஆதரவை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .
ரணில் அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தை போட்டி போடுகின்றார் .
எனவே அந்த இடத்தை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் எவரும் இல்லை ,அதனால் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,ஐங்கயன் ராமநாதனை களம் இறக்க உள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த நிகழ்வில் பேசிய அவர்கள் எதிர் வருகின்ற தேர்தலில் தாங்கள் ஒன்று இணைந்து பயணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் .
தமிழ் மக்களுக்கு பாரிய நன்மை
அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு பாரிய பலன்களையும் நன்மைகளையும் தாங்கள் ஏற்படுத்தி தருவோம் என்ற விடயத்தினை அறிவித்துள்ளனர் .
ஆட்சி கட்டில் ஏறும் வரைக்கும் இவ்வாறானவர்கள் இவ்வாறு உரைப்பதும் ,ஜனாதிபதி ஆனதும் ,தமிழர்களை மறந்து அவர்களை எட்டி உதைக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் .
ஆண்டாண்டுகளாக ஆளுகின்ற ஜனாதிபதி வர்க்கமும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களும் இவ்வாறு ஈடுபட்டு வருகின்றனர் .
அவ்வாறான ஒரு நிலைக்கு தற்பொழுது சஜித் பிரேமதாசாவும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசாவை அதிகம் நம்புவதற்கு,பிரேமதாசாபோன்று நல்லெண்ணெத்தை வெளியிட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வு ஐயா வழங்குவார் என்பதாக இன்றும் நம்புகின்றனர் .
மேலும் அவர்களும் ஆதரவாக காணப்படுகிறார் .
அவரது சிந்தனைகள் வேறு விதமாக இருக்க கூடும் எனும் தமிழ் மக்கள் நம்புவதே அவருக்கு ஆதரவு அளிப்பதற்காக ,தமிழர்கள் இன்றுவரை முயற்சிகளையும் முன் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது .
ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
ரணில் விக்கிரமசிங்கா எமக்கு ஆதாரவு வழங்கினால் பதவி வழங்க படும் சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவிப்பு .
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியி எமக்கு ஆதரவு வழங்கினால் ரணில் விக்கிரமசிங்காவுக்கு உரிய பொறுப்பான பதவி வழங்க படும் என ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச அறிவித்துள்ளனர் .
திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அறிவித்து இருந்தார் .
தற்போது இலங்கை அரசியல் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுவதுடன் கட்சி தாவும் படலம் ஆரம்பிக்க பட்டுள்ளது .
Featured
இலங்கை மீது பாயும் பொருளாதார தடை எச்சரிக்கும் சஜித் பிரேமதாசா
இலங்கை மீது பாயும் பொருளாதார தடை எச்சரிக்கும் சஜித் பிரேமதாசா
இலங்கை ,கொழும்பு ;இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்க பட்ட பின்னர் மக்கள் மீது இராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்திய நிலையில்
இலங்கை மீது ராயத்தந்திர மற்றும் பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதாக சஜித் பிரேமதாசா எச்சரித்துள்ளார் .
இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு ஆளும் அரசுகள் செயல் பட மறுத்தால் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என சஜித் பிரேமதாசா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சஜிதா எதிர் காலத்தில் ஜனாதிபதியாகி விடுவார் எனவும் அவரது வெற்றியை தடுக்க ரணில் விக்கிரமசிங்க பல அரசியல் விளையாட்டை
ஆரம்பித்துள்ள நிலையில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய “ராஜபக்ஸ நிழல்
அரசாங்கம்” இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு
முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும்.
புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடுத்துள்ளதுடன் தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார் என்றால், இவ்வாறான அட்டூழியங்களுக்கு
அப்பாற்பட்ட பலமிக்க அரசாங்கங்கள் மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும் மீள கையளித்து கொண்டிருக்கும் போதும், அதற்குள்,
பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் புகுந்து, “உயர் உத்தரவுப்படி” இந்த கோழைத்தனமான
தாக்குதலை நடத்தியுள்ளனர். ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப முற்படுவதற்கு எதிராக வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது
எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை.
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
போராடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்.
அரச சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல், வன்முறைக்குப் பதிலாக நாகரீகமான போராட்டங்களுக்காக நாங்கள் தொடர்ந்து முன் நிற்கிறோம்.
ஒரு புறம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது காலிமுகத்திடல் உட்பட இந்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவினாலாகும்.
எனினும் இந்த போராட்டம் அவரை ஜனாதிபதியாவதற்கு சிறிதும் ஊக்கமளிக்கவில்லை என்றாலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றார்.
தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன் அதனை ஜனாதிபதி மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது என்பதோடு,
ஒருவேளை ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு போராட்டம் காரணமாக அமைந்ததன் கோபமாக கூட இருக்கலாம்.
முன்னைய ராஜபக்ஸ அரசாங்கம் நாகரீக நாடாக எழுந்து நிற்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்தொழித்தது என்பதோடு, அதுவே தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தில்” நடக்க ஆரம்பித்துள்ளது.
ராஜபக்ஸ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பது தான் வித்தியாசமாக உள்ளது.
இந்த நாடு எவ்வளவு பாதாளப் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த
“ராஜ்பக்ஸவின் நிழல் அரசாங்கம்” மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரித்தான சுதந்திரத்தையும் கொடூரமான முறையில் மீறியுள்ளது.
ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைத்து
அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதோடு, தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக்
கண்டிக்கிறோம். நமது நாட்டை கோத்திர நிலைக்கு தள்ள முயலும் “ராஜபக்ஸ நிழல் அரசுக்கு” எதிராக முழு நாடும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!
சஜித் பிரேமதாஸ – எதிர்க்கட்சி தலைவர்
ஜனாதிபதி போட்டி சஜித் பிரேமதாசா திடீர் விலகல்
ஜனாதிபதி போட்டி சஜித் பிரேமதாசா திடீர் விலகல்
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விலகுவதாக அறிவித்துள்ளார் .
புதிய ஜனாதிபதியை தெருவு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல்
பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சஜித் பிரேமதாசாவின் இந்த திடீர் விலகல் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி தெரிவு தொடர்பில் மனோ கணேசன் அறிவிப்பு
கட்சிகளுக்குள் இடம்பெற்ற பேரம் பேச்சுக்களின் பின்னர் இந்த முடிவு எட்ட பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நான் சிறப்பாக செயல்படுவேன் – அடித்து விடும் சஜித் பிரேமதாசா
நான் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு விட்டால் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் எவரும் செய்திடாத விடயங்களை துணிவுடனும் ,அர்ப்பணிப்புடனும் செயல்படுத்துவேன் என சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் ,பிரேமதாசா தந்தை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்பது குறிப்பிட தக்கது






















