கிழவருக்கு ஒரு மடல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கிழவருக்கு ஒரு மடல்

கிழவருக்கு ஒரு மடல்

மண்டையில முடி விழுந்தும்
மாண்பு இன்னும் தெரியவில்லை
மக்களது அரசியலை
மன்றில் பேச தெரியவில்லை

நரை விழுந்த கிழவருக்கு
நாற்காலி இன்றெதுக்கு
பாப்பா பாட்டு பாடுகின்ற
பர தேசிக்கு வாழ்வெதற்கு

உயிரெழுத்தில் பெயர் வைத்து
உலவுகின்ற கிழவருக்கு
அலரிக்கா மாளிகையில்
அடி கழுவி திரிந்தாருக்கு

பேச்சு மேசைக்கு
பெரும் இடரை கொடுத்தார்க்கு
வால் பிடிக்கும் கூட்டங்களே
வையத்தில் தொல்லைகளே

இல்லாத அவர் காலம்
இருக்கின்றாய் நீ இக் காலம்
என் செய்தாய் தமிழுக்கு
ஏ தொன்று சொல் எனக்கு

மளிகை வீடு கட்டி
மல்லாக்காய் படுத்திருந்து
கொறட்டை தினம் விட்டால்
கொடை வள்ளல் நீ ஆகாய்

இக் கலாம் வாழ்கின்ற
இடர் செய்த பெரு மகனே
உன் வாழ்வே வீனாகும்
உன் இறப்பே தப்பாகும்

கோபத்தில் உனை வரைந்து
கொழுத்தி விட வரவில்லை
ஏக்கத்தில் மனம் தவிக்க
எழுதி வைத்து நீட்டுகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-03-2024