கலங்காதே மனமே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கலங்காதே மனமே

கலங்காதே மனமே

ஊரு விட்டு ஊரு வந்தா
உன்னை மறப்பேனா
உள்ளமதில் நின்றாய்
உன்னை எறிவேனா

கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
கண்ணு மறந்து தூங்குமா
காதலது தாங்குமா

விண்ணும் மண்ணும் உள்ளவரை
விடயங்களை மறப்பேனா
விரதமதை முடித்து வைத்த
விருந்தோம்பல் மறப்பேனா

எந்தனது நெஞ்சுக்குள்ள
என்றும் நீ ஆலயமே
என்றும் உன்னை மறவேனே
ஏன் மனமே கலங்காதே

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023