ஏமர்ந்த காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏமார்ந்த காதல்

ஏமார்ந்த காதல்

உன்னை பார்த்த நாள் முதலாய்
ஊன் உறக்கம் தொலைத்து விட்டேன்
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
காணாமலே போனதெங்கே

சொல்லி ஆற முடியாத
சோகமதை தந்து விட்டு
பைங்கிளியே போனதெங்கே
பார்க்க என்னை மறந்ததென்ன

கண்ணுக்குள்ள நீ இருக்க
கற்பனையில் நீ உலவ
சொற்கள் எல்லாம் உன்னை தேட
சொந்தம் உன்னை இழந்தேனோ

பக்கத்தில நீ இருக்க
பார்த்து பார்த்து உனை இரசிக்க
முடியாமல் போனதினால்
முழு நெஞ்சும் வலிக்குதடி

கத்தும் கடல் மேல் எழுந்து
கதறுகின்ற அலைபோல
கண்கள் எல்லாம் நீராச்சு
காதல் இன்று புன்னாச்சு

செத்திடத்தான் துடிக்கிறேன்
முடியமால் தவிக்கிறேன்
இப்படி ஒரு தண்டனையை
இனி யாருக்கும் நீ கொடுத்திடாதே..!

அக்கம் -01-05-2025
வன்னி மைந்தன்