Tag: இவளை எனக்கு தா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
இவளை எனக்கு தா
இவளை எனக்கு தா
உருண்டு வரும் நீரலைகள்
உன் உடலில் மோதி விழ
என் உடலோ நடுங்குதடி
ஏக்கத்தில தவிக்குதடி
கட்டியணைத்து பேரலைகள்
கண்ட படி முத்தமிட
விட்டு உடல் இருப்பவளே
விடை கூறு என் செய்வேன்
அங்கமதை தொட்டு விழி
ஆடை உருவி பார்க்குதடி
வேர்க்காத என் உதடும்
வேர்த்து இன்று கொட்டுதடி
வான் நிலவு அருவியில
வளைந்து நீராட
நாள் எழுதி கொடுத்தவரே
நான் உனக்கு மாலையிட
தேதி ஒன்று தருவீரா – என்
சேதி சொல்லி போவீரா
புகழ் மாலை பாடிடுவேன் – இந்த
பூவை எனக்கு தருவீரா ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்






