Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் இறந்தால் ஐந்து லட்சம் இழப்பீடு

கொரனோவால் இறந்தால் ஐந்து லட்சம் இழப்பீடு

காரணமாக உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளருக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடுஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு

சென்று கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் பணியாளர்களுக்காக அலுவலக காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும்

என்று வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போருக்கு எதிராக 5 இலட்சம் ரூபா அல்லது 6 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும். அத்தோடு இலங்கை காப்புறுதி

கூட்டுத்தாபனத்தின் மூலம் ஏற்படுத்திக்கொண்டுள்ள 2019 உடன்படிக்கைக்கு அமைவாக அலுவலகத்தில் பதிவை மேற்கொண்டு வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டுள்ளபோது

இடம்பெறும் இயற்கை மரணத்திற்காக வழங்கப்படும் இழப்பீடான 5 இலட்சம் ரூபா, கொவிட் 19 நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் பணியாளர்களுக்காக செலுத்தப்படுகின்றது.

தற்பொழுது இதற்காக 20 பேரின் கடித ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றது. 2020 மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் பதிவை மேற்கொண்டு வெளிநாடு சென்றவர்களுக்காக

இந்த இழப்பீடு 6 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பணியகத்தில் பதிவை மேற்கொள்ளவேண்டிய கால எல்லை கடந்த போதும் அதனை புதுப்பிக்காது பணிபுரிந்து

உயிரிழப்போருக்கு காப்புறுதி இழப்பீடு வழங்கப்படமாட்டாது. இவர்களுக்காக பணியகத்தில் விசேட சேமநல நிதியின் கீழ் 3 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும்.

இந்த வருடத்தில் கடந்த 6 மாத காலப்பகுதியில் பணியகத்தில் பதிவை மேற்கொண்டு தொழிலுக்காக வெளிநாடு சென்ற 40,143 பணியாளர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் நிவாரண

காப்பறுதியை வழங்குவதற்காக பணியகத்தினால் காப்புறுதி தவணைக் கொடுப்பனவாக ரூபா 26,330,000.00 தொகை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உயிரிழப்போரின் இறுதிச் சடங்கிற்காக 40,000 ரூபா வீதம் வழங்கப்படும். இத்தொகை முன்னர் 30,000 ரூபாவாக இருந்தது. கொவிட் 19 இன் காரணமாக இத்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரசின் காரணமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்றோரில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 37 பேர் ஆண்களும் 3 பெண்களும்

அடங்குகின்றனர். சவுதி அரேபியாவில் 18 பேரும் குவைத்தில் 9 பேரும் ஐக்கிய அரபு எமரேட்டில் 8 பேரும், ஓமானில் இருவரும், லெபனானில் ஒருவருமாக 40 பேர் உயிரிழந்துள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

      கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

      வடபகுதி கடற்பரப்புகளில்; தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

      ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையில்

      அமைச்சரவையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை

      நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

      முன்பதாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள்

      தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பார்வைக்கு கொண்டுவந்திருந்தனர்.

      குறிப்பாக எல்லைதாண்டிய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டவிரோத உபகரணங்கள் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதை தடுத்தல் அட்டைத் தொழிலுக்கான

      அனுமதியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு தமது தொழில்துறையை

      பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்தே குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக

      அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது தொடர்பில் அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.

      இதையடுத்த கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட துறைசார் தரப்பினருக்கு

      அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக அத்தகைய சட்டவிரோத தொழில் முறைமைகளை தடுப்பதற்கான

      நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்பரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          பொலிஸ் மக்கள் மோதல் – 14 பேர் கைது

          பொலிஸ் மக்கள் மோதல் – 14 பேர் கைது

          அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடையில் நேற்று (16) பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.

          அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சை மேற்கொண்டனர்.

          இதனை அடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

          அண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான

          சாட்சியாளர்கள் இருவர் நேற்று காலை 5 மணி அளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதை

          அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

          இதேவேளை, அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நேற்று கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்ட 9 பெண்கள்

          உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

          மேலும், இந்த சம்பவத்தில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
              Posted in இலங்கை செய்திகள்

              திருட வீடு புகுந்தவரை அடித்து கொன்ற மக்கள்

              திருட வீடு புகுந்தவரை அடித்து கொன்ற மக்கள்

              மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையடிக்க முற்பட்டபோது கொள்ளையர் மீது

              மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொள்ளையடிக்க சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

              இந்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது.

              வாழைச்சேனை பாடசாலை வீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பரசுராமன் நவரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

              வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கம்கேணி பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வீடு ஒன்றில் இருவர் கொள்ளையடிக்க சென்றுள்ளனர்.

              இந்த நிலையில் கொள்ளையர்கள் வீட்டிலுள்ளவர்களை தாக்கி அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடிக்க முற்பட்டனர்.

              இதன்போது தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள கொள்ளையர் மீது தாக்கிய போது

              கொள்ளையன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற கொள்ளையர் தப்பி ஓடியுள்ளார்.

              குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கொள்ளையன் 63 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் சம்பவதினமான நேற்று

              பிறிதொரு வீடு ஒன்றில் கொள்ளையடித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டபோதே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

              உயிரிழந்த குறித்த கொள்ளையனின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக

              மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றன

                  Posted in இலங்கை செய்திகள்

                  காவல்துறை அதிகாரி திடீர் இட மாற்றம்

                  காவல்துறை அதிகாரி திடீர் இட மாற்றம்

                  உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

                  தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

                  குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல் சட்டங்களை மீறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                  அதற்கமைய நேற்று (16) பிற்பகல் கூடிய பொலிஸ் ஆணைக்குழு ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் தலைமையக்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளது.

                  எனவே, வெற்றிடமாகியுள்ள ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதி பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

                  இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,377 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                  தேசிய தேர்தல் மத்திய நிலையத்திற்கு 758 முறைப்பாடுகளும் மாவட்ட ரீதியான தேர்தல் மத்திய நிலையங்களுக்கு 2,619 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

                  இதேவேளை, அரசியல் கட்சி செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

                  பொதுத் தேர்தலுக்கான எதிர்கால செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

                  குறிப்பாக தனிமைப்டுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோருக்கு தமது வாக்குகளை அளிக்கும் வகையில் சந்தர்ப்பமளிப்பது குறித்து இதில் ஆராயப்படவுள்ளது.

                  இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றும் இடம்பெறவுள்ளன.

                  பொலிஸ் நிலையம், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாவட்ட செயலாளர் காரியாலயங்கள் மற்றும் தேர்தல் செயலகம் ஆகியவற்றில் கடமையாற்றும் ஊழியர்கள் இன்று வாக்களித்து வருகின்றனர்.

                  மேற்குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறுவோர் எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.

                  மாவட்ட தேர்தல்கள் செயலகத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு விஷேட வாக்கெடுப்பு நிலையங்கள்

                      தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு விஷேட வாக்கெடுப்பு நிலையங்கள்

                      தனிமைபடுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லது சுய தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் தமது

                      வாக்குகளை அளிக்கும் வகையில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷேட வாக்களிப்பு நிலையங்கள்

                      அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது.

                      இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் சட்ட ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக தேர்தல்

                      ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

                      தேர்தல் இடம்பெறவுள்ள தினத்தில் சுய தனிமைப்படுத்தலில் எவரும் இருப்பார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் அதிகரித்து வருவதால்,

                      அத்தகையோர் தங்கள் வாக்குகளை அளிப்பதற்கு வசதியாக நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷேட வாக்களிப்பு

                      நிலையங்கள் நிறுவ வேண்டும். தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளோர் அவர்களுக்காக உருவாக்கப்படும்

                      வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும்” எனவும் தேர்தல் ஆணைகுழு தலைவர் இதன்போது தெரிவித்தார்

                      மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் ஆகியோருடன் தேர்தல்

                      செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

                      தேர்தல் ஆணைக்குழு எதிர்கொள்கின்ற நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட

                      சுகாதார வழிகாட்டுதல்களை விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு தேர்தல் ஆணைகுழு தலைவர் சுகாதார அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வடக்கு கிழக்கு மலையக பாடசாலை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

                          வடக்கு கிழக்கு மலையக பாடசாலை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

                          வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளில் பெருந்தோட்ட மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

                          கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லெ (Gobal Baglay) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில்

                          நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                          வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளைப் போன்று அபிவிருத்தி தேவையைக் கொண்ட நாட்டின் ஏனைய

                          பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்த விசேட சந்திப்பின் போது கல்வி அமைச்சர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

                          இதற்கு அமைவாக எதிர்காலத்தில் ஏனைய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கைதிகள் பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

                          கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

                          ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

                          விமானங்கள் கடத்தப்படல் மற்றும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படல் போன்ற சந்தர்ப்பங்களில் சர்வதேச விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கையில் முதன்முறையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                          ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

                          பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் தலைவர் என்ற ரீதியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், ​ மேற்படி புதிய நியமனங்கள் தக்க தருணத்தில் வழங்கப்ப்பட்டுள்ளது எனவும் இவை பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் பாரிய பொறுப்புகளை உள்ளடக்கியது எனவும் வலியுறுத்தினார்.

                          9/11க்குப் பின்னர் உலகில் விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தெளிவுபடுத்திய பாதுகாப்பு செயலாளர், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

                          மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேற்படி அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

                          பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக இன்று நியமனம் பெற்ற இவர்கள் 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட பயிற்சிநெறியில் பங்குகொண்டவர்களாவர்..

                          இந்த நியமனங்கள் அனைத்தும் சர்வதேச சிவில் விமான அமைப்பு உறுப்பு நாடுகளிடையே நடைமுறையில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விதிமுறைக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இதற்கமையவே தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை பிரதி பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த தெரிவித்தார்.

                          இந்த நியமனம் தொடர்பில் 2016ம் ஆண்டு முதல் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழு கூட்டங்களின் போது தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                          பணயக்கைதிகள் தொடர்பாக நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான ஹேக் மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கையும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன் சட்ட விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                          இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளின் தொழில்துறை சம்பந்தமான கோரிக்கைகளை பூர்த்தி செய்து அவர்களின் திறன்களை விருத்தி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தேமிய அபேவிக்ரம உறுதியளித்தார்

                          கைதிகள்
                          கைதிகள்
                          Posted in இலங்கை செய்திகள்

                          சங்கா, மஹேலவுக்கு சார்பாக வாய் திறக்காத முரளி, வீரவன்சவுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளார்

                          சங்கா, மஹேலவுக்கு சார்பாக வாய் திறக்காத முரளி, வீரவன்சவுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளார்

                          தமுகூ தலைவர் மனோ கணேசன்

                          எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், கொழும்பில் தமிழர்கள், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிகட் வீரர் முத்தையா முரளிதரன் கூறுகிறார்.

                          இவருக்கு அரசியல் புத்தி மட்டு என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும் என்பதால், இவருக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. முரளிதரனுடன் கிரிக்கட் அணியில் ஒன்றாய்

                          விளையாடிய சக வீரர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோர் சமீபத்தில் அநியாயமான குற்றச்சாட்டுகளுக்கு

                          உள்ளாகி இருந்தபோது முழு நாடுமே அவர்களுக்காக குரல் கொடுத்தது. அவ்வேளையில் தன் நண்பர்களுக்காக வாயை

                          திறக்காத இவர், இப்போது தன் பிழைப்புக்காக அரசியல்வாதி விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். இதிலிருந்தே இவர் யார் என்பது ஊர்ஜிதமாயுள்ளது.

                          கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடமும், என்னிடமும் தமிழ் சமூகங்களை ஒப்படைக்க முடியாது எனக்கூறும் விமல் வீரவன்சவிடம், தமிழர்களுக்கான என்ன மாற்றுத்தீர்வுத்திட்டம்

                          இருக்கிறது என்பதை கேட்டு சொல்ல வேண்டும். அதற்கு பிறகு அவருக்காக இவர் வாக்கு கோரலாம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

                          முன்னாள் எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                          தமிழ், முஸ்லிம் வாக்குகள் வேண்டாம் என்று சொன்னவர் இந்த விமல் வீரவன்ச. கொழும்பு மாவட்டத்தில் இவர்களது கட்சி

                          வேட்பாளர் பட்டியலில் ஒரு தமிழ், முஸ்லிம் வேட்பாளரும் இல்லை. இதுதான் உண்மை. இந்நிலையில் இவர் எதற்காக இன்று தமிழ் வாக்குகளை கோருகிறார்?

                          சஜித் பிரேமதாசவை விட, கொழும்பில் அதிக விருப்பு வாக்குகளை பெற இவர் துடியாய் துடிப்பது எனக்கு தெரியும். இந்த ஒரே நோக்கத்திற்காகத்தான், தமிழர்களின் மீது திடீர் பாசம் விமல் வீரவன்சவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொழும்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய இவர் முயல்கிறார். இதற்குத்தான் முரளிதரன் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கிறார்.

                          கொழும்பில் எம்பியாக தெரிவு செய்யப்படும் நான், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கையிலும் வாழும் தமிழருக்காக ஆற்றியுள்ள பணி, தமிழர்களின் இருப்புக்கு காவல்காரனாக நான் ஆற்றியுள்ள பணி, தமிழர்களின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் என் பணி, தலைநகரில் மாகாணசபை மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என்று ஒரு தமிழ் தலைமை வலையமைப்பையே உருவாக்கியுள்ள என் பணி, இங்கு வாழும் தமிழர்களுக்கு தெரியும்.

                          இது தனக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு முரளிதரன் விமல் வீரவன்சவுக்கு எடுத்து கூற வேண்டும். அதைவிடுத்து இங்கே வந்து இடைத்தரகர் வேலை செய்ய முயலக்கூடாது. தனது தொழில் வியாபாரம் வேறு, எமது இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் வேறு என்பதை இவர் உணர வேண்டும்.

                          முஸ்லிம் மக்களிடம் புரியாணி கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. அதேபோல் தமிழ் மக்களிடம் பொன்னாடைகள் கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. இதையும் முரளிதரன் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள்

                          பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள்

                          நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள்

                          கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

                          அத்துடன் கடந்த 13,14 ஆம் மற்றும் 15 ஆம் திக்திகளில் இடம்பெற்ற அஞ்சல் வாக்கு பதிவிடும் நடவடிக்கை உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களின் மேற்பார்வையின் கீழ் சுமூகமாக

                          நடைபெற்றதாகவும் இன்றும் நாளையும் முப்படை,பொலிஸ் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகத்தை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்கு பதிவு இடம்பெறவுள்ளதுடன் அதற்குரிய ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வௌியிடுவோருக்கு எச்சரிக்கை

                          கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வௌியிடுவோருக்கு எச்சரிக்கை

                          கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவோரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துளள்ளன.

                          இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 26 அதிகாரிகள் அடங்குவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                          கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                          இவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது ´தண்டனைச் சட்டத்தின் 120 ஆம் பிரிவுக்கு அமைய தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                          அதன்படி குற்றாவாளிகள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் – கிளிநொச்சி

                          வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் – கிளிநொச்சி

                          தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்கள் மற்றும் அவற்றினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களை தடுப்பது தொடர்பில்; கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

                          கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றைய தனம் இந் நிகழ்வு நடைபெற்றது.

                          வீதி விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் காயமுறுவதன் மூலமாக உடல் வலுவினை இழக்கின்ற நிலைமைகளை குறைப்பதற்கான செயற்திட்டத்தினை மேற்கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
                          அந்தவகையில் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதோடு முன்மொழிவுகளும் பெறப்பட்டன.

                          அதன் தொடர்ச்சியாக மாவட்ட மட்டத்தில் விபத்துக்களினை தவிர்ப்பது தொடர்பிலான குழுவொன்றினை உருவாக்கி விபத்துக்கள் இடம்பெறுவதற்கான காரணங்களை ஆராய்வதற்கும் விபத்துக்கள் ஏற்படுகின்ற நிலைமையில் அவ் விபத்தானது நிகழ்ந்த காரணம் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து அவற்றை தவிர்ப்பதன் ஊடாக எதிர்காலத்தில் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை வெகுவாக குறைத்துக்கொள்ளும் வகையில் ஆரம்பகட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

                          இதன் தொடர்ச்சியாக சமூகமட்டத்திலான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்

                          சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்

                          சுகாதார பாதுகாப்பு காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் மற்றும்

                          பொதுவான சேவைக்கான கருமபீடம் மீள அறிவிக்கும் வரையில் 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

                          சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரருக்காக Online மூலமாக விண்ணப்பித்து 48 மணித்தியால காலப்பகுதிக்குள்

                          சான்றிதழை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

                          இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenet.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் அல்லது 011 2784323 என்ற

                          தொலைபேசியின் ஊடாக சான்றிதழ் ஆவண களஞ்சிய பிரிவுடன் தொடர்புகொண்டு அல்லது துரித தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்

                          Posted in இலங்கை செய்திகள்

                          கிளிநொச்சி வளாக மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற முடியாது

                          கிளிநொச்சி வளாக மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற முடியாது

                          யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள் வரை வளாகத்தை விட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

                          அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

                          இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் பரீட்சை நடவடிக்கைகள் நாளை வழமைக்குத் திரும்பும் என்று வளாகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

                          யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கோரோனா தொற்று ஏற்படவில்லை என அவரது உயிரியல் மாதிரிகளின் பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

                          அவரது பெற்றோரின் பிசிஆர் பரிசோதனை முடிவிலும் அவர்களுக்கு இல்லை என்று தெரியவந்தது.

                          அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறந்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சையை நடத்துவது தொடர்பில் புதிய கட்டுப்பாட்டுடன் சுகாதாரத் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

                          “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள்வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது.

                          அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது. அவர்களுக்கான உணவு வழங்கப்படவேண்டும்.

                          அத்தோடு விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க முடியும். மாணவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதோடு அடிக்கடி கைகளை உரிய தொற்று நீக்கிகொண்டு கழுவுதல்வேண்டும்.

                          எந்தவொரு வெளிமாவட்ட மாணவரும் வீடு சென்று திரும்பிவர அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் – அமைச்சரவை தீர்மானம்

                          மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் – அமைச்சரவை தீர்மானம்

                          2020 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பில் சமீப காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மற்றும் முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு பாரிய அளவிலான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

                          இது தொடர்பாக மின் சக்தி மற்றும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் மின் கட்டணம் தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவு படுத்துவதற்காக தம்மால் அமைச்சரவைக்கு ஆவணம் ஒன்று இதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறினார்.

                          நிவாரணத்தை வழங்குவதற்காக அமைச்சரவையினால் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

                          இதற்கு அமைவாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணம் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தில் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல்.

                          மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவணையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

                          இந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்காக 2 மாத நிவாரண காலம் வழங்கப்படவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் எந்தவித மின் துண்டிப்பையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
                          பொது மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்குவதற்காக மின்சார சபைக்கு மானியத்தை வழங்குவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஜப்பான்- கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடிசெய்த நபர் கைது

                          ஜப்பான்- கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடிசெய்த நபர் கைது

                          ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தொழில்வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கண்டி

                          குற்றத் தடுப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

                          அவ்வாறு கைது செய்யப்பட்டவர் நேற்று (14) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

                          குறித்த சந்தேக நபர் நாட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற விகாரைகளில் உள்ள தேரர்களையும் பிரபலமானவர்களின்

                          பெயர்களையும் பயன்படுத்தி 5,379,900 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளார்.

                          காலி பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

                          இவர் தொடர்பில் வத்தேகம, மாத்தறை, அநுராதபுரம், பெலியத்த, மதுகம, ஹிக்கடுவ, மீடியாகொட, மிஹான, தெல்தெனிய, பலாங்கொட, தம்புள்ளை, தலங்கம, கதான, அளுத்கம,

                          நாரோஹேன்பிட்டிய, மினுவங்கொட, சபுகஸ்கந்த, நவகமுவ, கெக்கிராவ ஆகிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                          கண்டி குற்றத் தடுப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணியில் இலங்கை இராணும்

                              வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணியில் இலங்கை இராணும்

                              அடுத்த வருடம் தொடக்கம் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணி இலங்கை இராணுவத்திடம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

                              வருடாந்தம் பெரும் தொகை பணத்தை செலுத்தி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி

                              அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

                              சாரதி அனுமதிப்பத்திரத்தை பொது மக்கள் பெற்றுக்கொள்ளும் பொழுது அதற்காக 1340 ரூபா செலுத்த வேண்டும். இதேபோன்று 2009 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு

                              வழங்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பெரும் தொகையிலான பணம் வெளிநாட்டை சென்றடைந்தது.

                              தொடர்ச்சியாக இந்த நிறுவனத்திற்கான ஒப்பந்தம் நீடிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஒப்பந்தத்திற்கு அமைய அதனை முடிவிற்கு கொண்டு

                              வராமையினால் இந்த நிலை ஏற்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

                              இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் நேற்றைய தினம்

                              விசேட பேச்சுவார்த்தை ஒன்று போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.

                              இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர

                              சில்வா, அமைச்சின் செயலாளார் காமினி செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

                              வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை
                              வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மட்டக்களப்பில் சுமுகமான முறையில் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பு

                                  மட்டக்களப்பில் சுமுகமான முறையில் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பு

                                  எதிர்வரும் பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறை களுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில்

                                  தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது.

                                  இதன்படி மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களின் மாவட்ட மற்றும் பிரதேச அலுவலகங்களிலும்

                                  இந்த வாக்களிப்பு நடைபெற்றது. இதன்போது பொது சுகாதார துறையினர் சுகாதார முறைகளை கவனிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

                                  இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்காக மட்டக் களப்பு தேர்தல் தொகுதியில் 7342 அரச உத்தியோகத்தர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 3047 அரச உத்தியோகத்தர்களும், கல்குடா தேர்தல்

                                  தொகுதியில் 2426 அரச உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 12815 பொலிஸ் மற்றும் முப்படையினர் அடங்களான அரச உத்தியோகத்தர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

                                  இதற்கமைய தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அலுவலர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்காக 14, 15 ஆந்திகதிகள் தத்தமது அரச காரியாலயங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்கள், தேர்தல்

                                  அலுவலகங்கள், பொலிஸ், முப்படை சிவில் பாதுகாப்பு படை உட்பட சுகாதார துறையினர் எதிர்வரும் 16, 17 ஆந்திகதிகளில் நள்ளிரவு 12.00 மணிவரையும் வாக்களிக்க முடியுமெனவும், இத்தினங்களில்

                                  வாக்களிக்க முடியாதவர்கள் தாம் சேவைபுரியும் நிலையம் அமைந்துள்ள மாவட்ட செயலகங்களில் அல்லது மாவட்ட தேர்தல்

                                  காரியாலயங்களில் 20,21 வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                                  இதேவேளை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக தபால் திணைக்களத்திற்கு எதிர்வரும் 11, 12, 13 ஆந் திகதிகளில் கையளிக்கப்படவுள்ளதுடன், வாக்காளர்

                                  அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 29 ஆந் திகதிவரையும் இடம்பெறும் எனவும் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் 29ஆந் திகதிக்கு பின் தபால்

                                  அலுவலகங்களில் தத்தமது அடையாளத்தினை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

                                  மட்டக்களப்பில் சுமுகமான
                                  மட்டக்களப்பில் சுமுகமான
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது

                                      தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது

                                      தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது என முன்னாள்

                                      நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

                                      நேற்று (14) கிளிநொச்சி வலைப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில்

                                      கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

                                      அவர் மேலும் தெரிவிக்கையில்,

                                      நாம் இந்த நாட்டிலே விடுதலை வேண்டி 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில்

                                      அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியில் தலைவர் பிரபாகரன் தலைமையிலும் போராடி வந்தவர்கள் தமிழர்கள்.

                                      தமிழர்கள் சிங்கள மக்களின் உரிமைகளை பறிப்பதற்காக இந்த மண்ணில் போராடவில்லை. நாம் பூர்விகமாக வாழ்ந்த இந்த

                                      மண்ணிலே எமது உரிமைகளை பெறுவதற்காகவே நாம் போராடி வந்திருக்கிறோம் போராடியும் வருகிறோம்.

                                      இவ்வாறாக நீண்ட காலமாக இடம் பெற்றுவரும் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்க இந்த அரசு உத்வேகத்துடன்

                                      செயற்படுகிறது. வடக்கு கிழக்கு பூராகவும் இராணுவ சோதனை நிலையங்களை நிறுவி சோதனையிட்டு தமிழர்களை தொடர்ந்தும் ஒரு இராணுவ கெடுபிடிக்குள் வைத்திருக்கவே இந்த அரசு

                                      செயற்படுகிறது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

                                      இப் பிரச்சாரக் கூட்டத்தில் வடமகாண முன்னாள்கல்வி அமைச்சர் குருகுலராஜா பச்சிலைப்பள்ளி, கரைச்சி தவிசாளர்கள் கட்சியின்

                                      செயற்ப்பாட்டாளர்கள்,மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          இலங்கை கடற்படைக்கு புதியவர் நியமனம்

                                          இலங்கை கடற்படைக்கு புதியவர் நியமனம்

                                          இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

                                          ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

                                          கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார்.

                                          இவர் இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாவார்.