Posted in இலங்கை செய்திகள் பங்கு சந்தை Forex Trade

தங்கம் பாரிய வீழ்ச்சி நோக்கி செல்ல உள்ளது – ஆதாரம் இதோ

தங்கம் பாரிய வீழ்ச்சி நோக்க செல்ல உள்ளது – ஆதாரம் இதோ

உலகளாவிய ரீதியில் தங்கம் கடந்த பத்து ஆண்டுகளை விட இவ்வருடமே அதிக உச்சத்தில் விலை அதிகரித்து காணப்படுகிறது

இந்த விலை ஏற்றதினால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

ஆனால் நாம் , எமது பங்கு சந்தை ட்ரேடிங் வியாபாரத்தின் ,கணிப்பின் அடிப் படையில் திட்ட வட்டமாக தெரிவித்து கொள்வது சந்தை மிக பெரும் வீழ்ச்சி நோக்கி செல்லவுள்ளது

கடந்த ஆண்டுகளில் நிலவிய அதே விலைகளுக்கே தங்கத்தை பெற்று கொள்ள முடியும் அவசரம் இன்றி பொறுமையாக தங்கத்தை

வாங்கி கொள்ளுங்கள் ,நகை வியாபரிகளுக்கு இதன் வீழ்ச்சி தெரிகிறது ,ஆனால் வியாபாரத்திற்காக இதனை அவர்கள் காட்டி கொள்ள மாட்டார்கள்

கடந்த சில நாட்களாக சந்தை வீழ்ச்சியில் காண்பித்துள்ளது ,ஆனால் இதன் அதி உச்சம் 1821 அல்லது 1830 ஆக இருக்கலாம்

அதன் பின்னர் 1700 வரை வீழ்ச்சியோ நோக்கி செல்லும் மேலும் இதைவிட வீழ்ச்சி ஏற்பட கூடும்

எனவே மக்களே பொறுமை காத்து கொள்ளுங்கள் ,இந்த சந்தை வீழ்ச்சி எவ்விதம் விழும் என நீங்கள் கேட்டால் ,அதற்கு இதன்

காண்டில் திசை காட்டியின் மேலே கால் உள்ளது ,long leg ,பின் பார் ,அதன் திசை குறியீடு சந்தை வீழ்ச்சி நிலை நோக்கி செல்ல

உள்ளதை உள்ளதை சந்தை மீளவும் பல தடவை உறுதி படுத்தி கொள்கிறது

போலியாக சில ஏற்றத்தை மீள காண்பித்து பின்னர் அதன் நேர் வீழ்ச்சி வழி நோக்கி பயணிக்கலாம் .
எனேவ இந்த சாட் ஆதாரத்தை பாருங்கள்

எதிர்வரும் 24 மணித்தியாலம் சந்தை கீழ் உள்ள இலக்கம், விலைகள் நோக்கி பயணிக்கும்

மேல் நோக்கி ஏறுவரிசையில் 1816 மற்றும் 1821 மற்றும் 1830 ஆகவும் கீழ் நிலை நோக்கி ,இறங்கு வரிசையில் 1890 ,1882 ,1773 ,1763,1748 ஆக கணிக்க முடிகிறது

முக்கியமாக 1890 முதல் 1770 வரை சந்தை ஏற்ற இறக்க நிலையில், பல தடவை செல்லும் ,இதில் கவனமாக இருந்து இலாபத்தை அள்ளி

கொள்ளுங்கள் ,கிளித்தட்டு இந்த இடத்தில அதிகம் பலமுறை நடக்கும் ,மகிழ்ச்சி ,நன்றி

சந்தை – கணிப்பு – வன்னி மைந்தன் மேலதிக தொடர்புகளுக்கு 00 44 7536 70 7793

தங்கம்-பாரிய-வீழ்ச்சி
தங்கம்-பாரிய-வீழ்ச்சி
    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டா அரசு சாதனை – 50 ரூபாவுக்கு நெல் கொள்வனவு – குஷியில் மக்கள்

    கோட்டா அரசு சாதனை – 50 ரூபாவுக்கு நெல் கொள்வனவு – குஷியில் மக்கள்

    ஓரு கிலோ கிராமிற்கு 50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் 2020 சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியினால் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020 சிறுபோகத்தில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 50 ரூபா

    உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்யும் பணியை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.

    கடந்த வருடங்களில் நாட்டரிசி நெல் கிலோ கிராம் ஒன்று 38 ரூபா மற்றும் சம்பா நெல் கிலோ 41 ரூபா என்ற அடிப்படையிலும் கொள்வனவு செய்யப்பட்டதுடன் அதிமேதகு ஜனாதிபதியின்

    நாட்டை கட்டியெழுப்புவதற்கான சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, புதிய அரசாங்கத்தினால்

    2019 /2020 சிறுபோகத்தில் அனைத்து நெல் வகைகளுக்கும் ஆகக்கூடிய விலையை வழங்கி ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்படுகின்றது.

    இதற்கு அமைவாக இம்முறை சிறுபோகத்திலும் விவசாயிகளின் நெல் அறுவடைக்காக ஆகக்கூடிய விலை ஒன்று வழங்கப்படுவதை உறுதி செய்து ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபா என்ற உறுதி

    செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபை கொண்டுள்ள நாடு முழுவதிலும் அமைந்துள்ள அனைத்து களஞ்சியசாலைகளும் தற்பொழுது

    திறக்கப்பட்டுள்ளன. தாமதமின்றி விவசாயிகளிடம் இருந்து மொத்த நெல் அறுவடையை அரசாங்கம் உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி தற்பொழுது

    திறைசேரியினால் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        இவர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்க பாடுமாம் – தள்ளாடும் சகோதர ஆட்சி

        உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம்..

        உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை

        கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

        அந்த திணைக்களத்தின் தொழிற்சங்கம் மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்று (2020.07.13) காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிதி அமைச்சின்

        செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் வாரத்திற்குள் உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமைப்படுத்துவதற்காக திணைக்களத்தின்

        ஊழியர்களுக்கு 2019ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

        தங்கள் சேவையை நிறைவேற்றுவதற்கு தேசிய வருவாய் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை அரசாங்கம் என்ற ரீதியில் மதிப்பளிப்பதாக பிரதமர் இதன் போது

        குறிப்பிட்டுள்ளார். கொவிட்- 19 நெருக்கடியின் போதும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவை

        வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடு தொடர்பில் திணைக்கள ஊழியர்களுக்கு கௌரவம் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தேசிய வருவாய் திணைக்கள

        அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டீ.சந்தன தெரிவித்துள்ளார்.

        இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் செயலாளர் காமினி செனரத், தேசிய வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே, தேசிய வருவாய் திணைக்களத்தின் அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய

        வருவாய் பொது சேவை சங்கத்தின் அதிகாரிகள் உட்பட குழுவினர் இணைந்திருந்தனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            கடற்படைத் தளபதி பிரதமரை சந்திப்பு

            கடற்படைத் தளபதி பிரதமரை சந்திப்பு

            கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நேற்று (ஜூலை 13, 2020) பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

            கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்

            பாரம்பரிய சந்திப்பு நேற்று (ஜூலை 13, 2020) நடைபெற்றது. பிரதமர் கடற்படைத் தளபதியுடன் நல்லுறவு உரையாடி, கடற்படைத் தளபதியிடம் வளமான எதிர்காலம் வாழ்த்தினார்.

            கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஜூலை 15 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார், இந்த நிகழ்வைக் குறிக்கும்

            வகையில் கடற்படைத் தளபதியும் பிரதமருக்கும் இடையே நினைவு பரிசும் பரிமாற்றப்பட்டது.

                Posted in இலங்கை செய்திகள்

                செல்லுபடியான காலம் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு நிவாரண காலம்

                செல்லுபடியான காலம் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு நிவாரண காலம்

                மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொழுது தேவையற்ற குளப்பநிலைக்கு அப்பால் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

                கொரோனா தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் தலையெடுப்பது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் சந்தேகத்தின் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து

                திணைக்களத்தின் வெரஹர அலுவலகத்தில் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் ஒன்றுகூடும் அடிப்படையில் தேவையற்ற நெருக்கடி நிலை ஏற்படுவதாக அவதானிக்கப்படுகின்றது.

                மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

                நேற்றைய தினம் (13) மாத்திரம் சுமார் 3500 பேர் வெரஹர அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். இருப்பினும் 1300 பேருக்கு மாத்திரமே நாளாந்தம் சேவைகள் வழங்கப்படுகின்றன.

                வெரஹர அலுவலகத்தில் இடம்பெற்ற நெருக்கடி நிலை தொடர்பாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் காரணங்களைக் கோரியுள்ளார்.

                வெரஹர அலுவலகத்தின் ஊடாக வானக அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்கு அமைவாக நாளாந்த சேவையை

                வழங்கக்கூடியளவு வரையறுக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதுடன் பயனாளிகளான பொதுமக்களிடம் நாம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

                இதுவரையில் 2020 ஆம் ஆண்டு இலக்கம் 3 இன் கீழான மோட்டார் வாகன கட்டளைகள் மூலம் 2020.03.16 தொடக்கம் 2020.06.30 வரையிலான காலப்பகுதியில் செல்லுபடியான காலம்

                நிறைவடையும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக செல்லுபடியான காலம் நிறைவடையும் தினம் தொடக்கம் 06 மாதங்களுக்கு மேலதிக நிவாரண காலம் மற்றும் 2020.07.01 தொடக்கம் 2020.09.30

                வரையிலான காலப்பகுதிக்குள் செல்லுபடியாகும் காலம் நிறைவடையும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக சாரதி

                அனுமதிப்பத்திரம் நிறைவடையும் தினம் தொடக்கம் 03 மாத நிவாரண காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                இதற்கு மேலதிகமாக தேவையான வகையில் தொடர்ந்தும் இந்த காலம் நீடிக்கப்படவேண்டும் என்று அவதானிக்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு

                போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.
                வாகன அனுமதிப்பத்திரத்தை 1 நாள் சேவையின் கீழ்

                பெற்றுக்கொள்வதற்காக ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுர மாவட்ட அலுவலகங்களின் வசதிக்கு அமைவாக இந்த இடங்களுக்கு செல்ல முடியும்.

                பொதுவான சேவையின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஏனைய அனைத்து மாவட்ட மோட்டார்

                வாகன போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் வசதிகள் மற்றும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிற்றோம்.

                Posted in இலங்கை செய்திகள்

                அனைவரும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றக் கூடிய ஒருமித்த நாடு உருவாக்கப்படும்- மகிந்த

                அனைவரும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றக் கூடிய ஒருமித்த நாடு உருவாக்கப்படும்- மகிந்த

                அரச துறையை செயலற்றதாக்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்த தீர்மானங்களை மாற்றி தமது ஆட்சிக் காலத்தில் அரச துறையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

                மொரட்டுவ, லூனாவ களப்பு வளாகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

                பலமான அரச துறை ஒன்று காணப்பட வேண்டியதன் மதிப்பு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் போதும் மற்றும் ஆரோக்கியமான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதுமே மக்களுக்கு புரிந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

                ஆபத்தான நிலைக்கு முகங்கொடுத்து குறைவான வசதிகளுக்கு மத்தியில் அரச பணியாளர்கள் ஆற்றியது சாதாரணமானதொரு பணியல்ல எனத் தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் அரச துறையை மேலும் பலப்படுத்துவதாக கூறினார்.

                அத்துடன், அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய, அனைத்து மதத்தவர்களும் தமது மதத்தை சுதந்திரமாக பின்பற்றக்கூடிய ஒருமித்த நாடு ஒன்றை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பௌத்தத்திற்கு முதலிடம் வழங்குவதன் மூலம் ஏனைய மதத்தவர்களுக்கு சுதந்திரமாக தமது மதங்களை பின்பற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

                தற்போது நாம் அனைவரும் வெவ்வேறு இனத்தவர்கள் என்ற ரீதியிலும், வெவ்வேறு மதத்தவர்கள் என்ற ரீதியிலும், ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கான கௌரவம் மதத் தலைவர்களையும், மக்களையுமே சாரும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

                தமது ஆட்சிக் காலத்தில் விகாரை, பள்ளிவாசல்கள், கோவில்கள் என்பவற்றின் அபிவிருத்தி இன, மத, பாகுபாடு பாராது வடக்கு, தெற்கு, கிழக்கு ,மேற்கு என பிரதேச பேதமின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

                அதுபோன்று நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை நினைவு கூர்ந்த பிரதமர், எதிர்காலத்தில் புதிய அரசாங்கம் ஒன்றின் ஊடாகவும் அவ் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    காவல்துறையினரை இடித்து விட்டு தப்பி சென்ற டிப்பர்

                    காவல்துறையினரை இடித்து விட்டு தப்பி சென்ற டிப்பர்

                    மாத்தறை ஹக்மன, கோங்கால பொலிஸ் காவலரன் பகுதியில் பொலிஸாரின்

                    மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டி ரன்ன பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

                    ரன்ன, கட்டகடுவ பிரதேசத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

                    நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

                    நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பொலிஸ்

                    சார்ஜன்ட்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                    டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது

                    செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கிளிநொச்சிக்கு விஜயம்

                        தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கிளிநொச்சிக்கு விஜயம்

                        தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (13) மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

                        கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடினார்.

                        நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

                        இந்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு

                            பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு

                            பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளமை பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

                            இருப்பினும் பொது மக்கள் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களாக பொது மக்கள் சுற்றுலாப்பயணங்களில் ஈடுபடவில்லை. தம்மைப்போன்று ஏனையோரின் சுகாதார பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

                            நாடு திறக்கப்பட்டமை பொருளாதாரத்தைப் போன்று தமது வாழ்வாதார தேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே ஆகும். இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கவில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

                            பொது தேர்தலை நடத்துவதைப் போன்று ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு நடைமுறையில் அதிகாரம் வழங்குவது மிக முக்கியமானதாகும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

                            அநுராதபுரம், ,ராஜாங்கனை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மரண நிகழ்வு மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தான நிகழ்வு சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை மீறிய வகையில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.

                            இதனூடாக இந்த பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக அனில் யாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஆலோசகர் ஊடாக ராஜாங்கனை பிரதேசத்தில் நடைபெற்ற தான நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தற்பொழுது இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் 12 பேர் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

                            தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடிக்காத இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு உள்ள சூழ்நிலைக்கு இது சிறந்த உதாரணமாகும் என்று தெரிவித்த வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

                            நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் பொது மக்கள் தேவையற்ற வகையில் செயற்படுகின்றனர். இது தொடர்பில் பொது மக்கள் மீண்டு சிந்திப்பது மிக முக்கியமானதாகும்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் வருவோரின் எண்ணிக்கை அதிகம் – யாழ்அரசாங்க அதிபர்

                            இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் வருவோரின் எண்ணிக்கை அதிகம் – யாழ்அரசாங்க அதிபர்

                            யாழில் இரண்டாவது கொரோனா அலையினை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு அனைத்து பொதுமக்களும் சுகாதார

                            திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

                            தற்போது கொரோனாஅபாயம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் , யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில்

                            ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

                            யாழ்ப்பாண குடாநாட்டில் ஆரம்பத்தில் 16 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது 14 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில்

                            மூன்று குடும்பம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்று வந்தவர்கள் என்ற அடிப்படையிலும், ஒரு குடும்பம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வருகை தந்தவரின் குடும்பம் என்ற

                            அடிப்படையிலும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் மொத்தமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 14 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு

                            உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாடானது சுகாதார திணைக்களம் ஏனைய திணைக்களங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

                            பொதுமக்களுடைய செயற்பாட்டின் மூலமே யாழில்கொரோனாவை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம் தற்பொழுது இது சமூகத் தொற்றாக உருவாக கூடிய அபாயம்

                            காணப்படுவதாக உணரப்படுகின்றது.
                            இந்த நிலையில் இரண்டாவது அலையாக அதாவது முன்னரோடு ஒப்பிடும்போது நாளாந்தம் அறிக்கையிடப்படுகின்ற புள்ளி

                            விவரங்களைப் பார்க்கும் போது நோயாளர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே காணப்படுகின்றது.


                            யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் மிகவும் விழிப்பாக இருந்து இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . சுகாதார பிரிவினரின்

                            சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி தேவையற்ற பயணங்களை தவிர்த்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

                            பாடசாலைகளுக்கு இன்றிலிருந்து ஒரு கிழமைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்கள் யாவும் சீராக இயங்கி வருகின்றன. எனினும் தேவையுடையவர்கள் மட்டும்

                            அலுவலகங்களுக்கு வருகைதந்து தங்களுடைய தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் . அதே வேளையில் ஏனைய பொது

                            தொடர்பு மற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது மக்கள் தமது அன்றாட

                            தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் அரசாங்க அதிபர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

                            அதே நேரத்தில் இன்னுமொரு அபாயம் யாழ்ப்பாண மாவட்டத்திலே காணப்படுகின்றது. தற்போது இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக

                            காணப்படுகின்றது. அதாவது நேற்று முன்தினம் கூட நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

                            அவர்களுக்குரிய சட்ட நடவடிக்கை பொலீஸ் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                            யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க வேண்டும். அதாவது உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுக்கு

                            தெரிந்தவர்களோ இவ்வாறான விடயங்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அருகில் உள்ள கிராம சேவையாளர் அல்லது போலிசார் அல்லது அதற்குரிய அதிகாரிகளுக்கு உடனடியாக

                            தெரியப்படுத்துங்கள். மேலும் எங்களுடைய யாழ் குடாநாட்டை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது பொதுமக்களுடைய கைகளில் தான் தற்போது இருக்கின்றது சுகாதார சுகாதார

                            துறையினரின் அறிவுறுத்தலுக்கு ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனை பின்பற்றுவதன் மூலமே

                            யாழ்ப்பாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மேலும் தெரிவித்தார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                ரயில்,பேருந்துகளில் உணவுகள் ,பொருட்கள் விற்க தடை – கோட்டா அரசு சாதனை

                                கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை

                                மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

                                மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

                                சில நடமாடும் வியாபாரிகளால் சுகாதார முறைகளை பின்பற்றாது விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பயணிகளிடமிருந்து

                                போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

                                ரயில்வே திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரயிலில், நடமாடும் வியாபாரிகள் பிரவேசிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

                                சில நடமாடும் வியாபாரிகளால் தனியார் மற்றும் ,லங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் உணவு

                                பொருட்கள், குடிநீர் போத்தல்கள் மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

                                எனவே அவர்களால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட ,த்தகைய வியாபார

                                நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

                                அகையால், உடனடியாக ,ந்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு

                                அறிவுறுத்தியுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, ,ந்த நிலைமையைகட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

                                    பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

                                    பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாகின்றது.

                                    அதன்படி, சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வாக்களிக்க

                                    அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

                                    இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

                                    இதேவேளை நாளை (14) மற்றும் நாளை மறுதினங்களில் (15) அரச பணியாளர்களுக்கும், 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார்

                                    மற்றும் முப்படையினரும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இவ் திகதிகளில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் 20ஆம், 21ஆம் திகதிகளிலும் தபால் மூலம் வாக்களிப்புக்க முடியும்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கடல்வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்றவர்கள் கடல்படையால் கைது

                                    கடல்வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்றவர்கள் கடல்படையால் கைது

                                    2020 ஜூலை 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் தொண்டமனாறுக்கு வடக்கே கடல்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல்

                                    நடவடிக்கையின் போது கடல் வழியாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 04 நபர்களுடன் ஒரு டிங்கியைக் இலங்கை கடற்படை கைது செய்தது.

                                    அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை யாழ்ப்பாணத்தின் தோண்டமன்னாறு வடக்கே 11 கடல் மைல் தொலைவில் இந்த டிங்கியைக் கண்டது. இவர்களில் இருவர் இந்தியாவில் இருந்து

                                    குடியேற முயன்ற இலங்கையர்கள் என்றும் மற்றைய இருவர் ஜூலை 10 ஆம் திகதி பருத்தித்துறை வழியாக சர்வதேச

                                    கடல்களுக்கு ஐ.எம்.பி.எல் கடந்து புலம்பெயர்ந்தோருக்கு போக்குவரத்து வழங்குவதற்காக பயணம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

                                    மேலும், இந்த இருவரும் வல்வெட்டித்துறை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் முந்தைய குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் முன்னாள் விடுதலைப்

                                    புலிகளின் உறுப்பினர், அவர் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில்

                                    அனுமதிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21-52 வயதுக்கு உட்பட்டவர்கள்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    அதிக இலாபம் பெற வேண்டுமானால் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யுங்கள் – ஜனாதிபதி

                                    அதிக இலாபம் பெற வேண்டுமானால் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யுங்கள் – ஜனாதிபதி

                                    விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமையளித்து அதிக இலாபம்

                                    ஈட்டுவதற்கு முயற்சிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.

                                    மிளகு மீள் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே விதைகள், தூள் அல்லது வேறு ஆக்கப்பெற்ற பொருட்களாக பொதியிடப்பட்ட மிளகை ஏற்றுமதி செய்யுமாறு ஜனாதிபதி

                                    அவர்கள் விவசாயிகளுக்கு தெரிவித்தார். பெறுமதி சேர்க்கும் முறைமையை பின்பற்றி அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                                    பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நேற்று(12)

                                    இரண்டாவது நாளாகவும் கண்டி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஹசலக்கவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள்

                                    சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

                                    உடுதும்பர ஹசலக்க நவரத்ன விளையாட்டரங்கிலும் ஹசலக்க சந்தை வளாகத்திலும் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் ஏற்பாடு

                                    செய்யப்பட்டிருந்தது. இடைத்தரகர்களிடம் அகப்பட்டு விடாது நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

                                    காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் கிராமவாசிகளிடம் தெரிவித்தார். மினிப்பே பிரதேசவாசிகள்

                                    முகங்கொடுத்துள்ள குடிநீர் பிரச்சினை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்.

                                    ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்பதற்கான வசதிகளைக்கொண்ட பாடசாலை ஒன்று ஹசலக்க பிரதேசத்தில் இல்லாமையினால் பிள்ளைகள் எதிர்நோக்கும்

                                    கஷ்டங்கள் குறித்தும் மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்

                                    வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்

                                    வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும்

                                    நடவடிக்கை நாளை (14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

                                    வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனை கூறினார்.

                                    நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும்

                                    இடப்பற்றாக்குறையை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

                                    கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை

                                    தொடர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐ.தே.க.வால் உறுதிப்படுத்த முடியாது- மகிந்த

                                    அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐ.தே.க.வால் உறுதிப்படுத்த முடியாது- மகிந்த

                                    அரச ஊழியர்களின் உரிமைகளுக்காக முன்நிற்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பும் கடமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

                                    அரச ஊழியர்கள் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் யுகம் மீண்டும் உருவாக இடமளிக்க போலதில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

                                    மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                                    தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், தமது ஆட்சி காலத்திலேயே அரச ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

                                    அதன் காரணமாகவே கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த முடிந்தாகவும், அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐக்கிய தேசிய கட்சியால் உறுதிப்படுத்த முடியாது எனவும் கூறினார்.

                                    யுத்தத்திற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டதாக தெரிவித்த பிரதமர், கடந்த அரசாங்கம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தேவையற்ற அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    காவல்துறை அதிரடி வேட்டை 993 பேர் கைது

                                    காவல்துறை அதிரடி வேட்டை 993 பேர் கைது

                                    இலங்கையில் காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல்

                                    நடவடிக்கையில் சுமார் 993 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்

                                    இவ்வாறு கைதானவர்கள் பலவேறு குற்ற செயல்களில்

                                    ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    போலீசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்; -385 பேர் கைது

                                    போலீசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்; -385 பேர் கைது

                                    கடந்த தினம் மேல்மாகாணத்தில் காவல்துறையின் சிறப்பு அணிகள் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தினர்

                                    இதன் போது சுமார் 385 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    இவர்களின் அதிகமானோர் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டவர்க்ளும்

                                    அதற்கு அடிமையாகி அதனை பாவித்தவர்களுமே கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

                                        கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        மீனவரை சுட்டு கொன்ற பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

                                        மீனவரை சுட்டு கொன்ற பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

                                        லுனாவ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

                                        பொலிஸ் சார்ஜன் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

                                        பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின்

                                        உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            உண்மைக்குப்புறமான தகவல்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை-பொலிஸ்

                                            உண்மைக்குப்புறமான தகவல்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை-பொலிஸ்

                                            கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் குறித்து உண்மைக்குப்புறமான தகவல்களை முன்னெடுப்பவர்களுக்கு

                                            எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

                                            பொலிஸ் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும்

                                            தெரிவிக்கையில் , நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் கொரோனா வைரஸ் நோயாளர்களின்

                                            எண்ணிக்கை தொடர்பாக பல இடங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

                                            உண்மைக்குப்புறம்பான தகவல்களினால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு போலியான

                                            தகவல்களை பரப்புபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

                                            அதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று; தொடர்பாக போலியான தகவல்களை

                                            வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.