Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வியட்நாமில் சிக்கிய தமிழர்கள் 152 பேர் இலங்கை வந்தனர்
வியட்நாமில் சிக்கிய தமிழர்கள் 152 பேர் இலங்கை வந்தனர்
கடல்வழியாக ஐரோப்பாவுக்கு நுழையும் முகமாக பயணித்த இலங்கையர்களில் 303 பேர் வியட்நாமில் சிக்கினர் .
இவர்கள் பயணித்த கப்பல் வியட்நாமில் கரை ஒதுங்கிய நிலையில் ,கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டனர் .
அவ்வாறான இலங்கையர்களில் 152 பேர் ,தற்போது இலங்கைக்கு விசேட விமானம் ஒன்றில் அனுப்பி வைக்க பட்டனர் .
இலங்கை செல்லும் இவர்கள் நீதிமன்ற ,விசாரணைகளுக்கு உட்படுத்த பின்னர் ,விடுவிக்க படுவார்கள் .
சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி
சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி
இலங்கையில் பல மக்களின், மூன்று பில்லியன் பணத்தை மோசடியான முறையில் ,சுருட்டிய திலினி கைது செய்யப்பட்டு ,சிறையில் அடைக்க பட்டார் .
இவருடன் பல அரசியல்வாதிகள் ,மற்றும் மகிந்தாவின் மனைவி உள்ளிட்டவர்கள் ,நெருங்கியவர்களாகவும் விளங்கினர் .
மகிந்த மனைவியின் ,பலமில்லியன் பணத்தை இவர் வியாபாரம் செய்து வந்துளளர் .
இவர்களது முகவராக இவர் செயல்பட்டுள்ளார் .
சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி
எனினும் அவை மூடி மறைக்க பட்டுள்ளது .இந்த பெண்ணை யார் என்றே தெரியாது என அறிக்கை விட்டவர் ,மகிந்த ராஜபக்சவின் மனைவி அவர்கள் .
ஆனால் தற்போது அவருடன் கூட நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி ,இவர்கள் பின்புலம் ,எது வரை உள்ளது என்பதை பார்த்து தீர்ப்பை ,நீங்களே எழுதி கொள்ளுங்கள் மக்களே .
பூலன் ராணியை கேள்வி பட்டிருக்கிறோம் ,இவர் இந்தியாவை சேர்ந்தவர் அரசியல் ஈடுபட்ட பின்னர் சுட்டு கொலை செய்யப் பட்டார் .
அவருக்கும் கொள்ளை ராணி என்ற பெயர் உண்டு ,அதே போலவே இப்பொழுது ,திலினியும் அந்த பெயரை பெற்று பெருமை தேடி கொண்டுள்ளார் .
லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு வீடியோ
லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு
பிரிட்டன் லண்டன் பகுதியில் தமிழர் கடை ஒன்றில் பட்ட பகலில் நடந்த கத்தி முனை கொள்ளை .
இந்த காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .
கைபேசி ,பணம் ,சாராயம் ,சிகரெட் என்பனவற்றை திருடி தப்பி ஓடும் திருடர்கள் .
உயிர் தப்பிய தமிழ் வாலிபன் .
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்
சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த உறவினர்களுடன் சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இவ்வாறு தப்பிச் சென்ற குறித்த இரு சந்தேகநபர்களும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்
ஜோன்டியா மற்றும் கலயா என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைத்தொலைபேசி தொடர்பில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து அதனை சமரசம் செய்து கொள்வதற்காக அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் கைது செய்ததாகவும், பின்னர் அவர்களது உறவினர்கள் குழுவொன்று வந்து சந்தேக நபர்களை அழைத்துச் செல்ல முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன்போது அங்கு பதற்றமான சூழல் உருவானதுடன், நிலைமையை கட்டுப்படுத்த முற்பட்ட போது அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
அவர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பதற்றமான நிலைமையைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின்
அதிகாரிகளும் அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இரட்டைக் குடியுரிமையைப் பெற பெருமளவான கோரிக்கை
இரட்டைக் குடியுரிமையைப் பெற பெருமளவான கோரிக்கை
2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேர் உட்பட இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன்,
நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இதன்படி, குறித்த நபர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மண் சரிவு எச்சரிக்கை
மண் சரிவு எச்சரிக்கை
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த நிலை தொடர்நதும் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் சிரேஷ்ட புவியியல் விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் அறிவிக்கப்பட்டிருந்த அனர்த்த எச்சரிக்கை நேற்று (27) இரவு 9.00 மணி தொடக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு எச்சரிக்கை
இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பர, உடுநுவர, கங்க இயல கோரல, பாத்த ஹேவாஹெட்ட, கங்கவட்ட கோரல, அக்குரண ஹரிஷ்பத்துவ, தும்பனே, பூஜாப்பிட்டி மற்றும் யட்டிநுவர ஆகிய பிரதேச செயலாளர்
பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, ரம்புக்கண, மாவனெல்லை, புலத்கோப்பிட்டி, கேகாலை, அரநாயக்க மற்றும்
ருவான்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, பொல்காவலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை
மாவட்டத்தில் ரத்தொட்ட, மாத்தளை, யட்டவத்த, உக்குவெல்ல, நாவுல, லக்கல, பல்லேகம மற்றும் பல்லேகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மழையில் குளிக்கும் இலங்கை மக்கள் அவதி
மழையில் குளிக்கும் இலங்கை மக்கள் அவதி
இலங்கை நாடு தழுவிய ரீதியில் பலத்த மழை பொழிவு ,இடம்பெற்ற வண்னம் உள்ளன .
வட கிழக்கு பகுதியில் கனத்த மழை பொழிவு இடம் பெறுகிறது .
இந்த சீரற்ற காலநிலையால் மக்கள் வாழ்விடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது ,மக்கள் பெரிதும் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு…
முதலீட்டு ஈர்ப்பு, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் புதிய இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்து….
பாரம்பரிய இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு உலகம் முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையின் புதிய தூதுவர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் இடையில் (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் 16 புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் கலந்துகொண்டனர்.
முதலீட்டை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், அனைவருடனும் நட்புறவான, நடுநிலையான அணிசேரா நாடு என்ற நற்பெயரை மேம்படுத்தும் நோக்குடன் செயற்பட வேண்டும் என புதிய தூதுவர்களிடம் பிரதமர் கூறினார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர், உதவிகள் மற்றும் கடனின் மீது தங்கியிருப்பதைப் பார்க்கிலும் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் துரித
அபிவிருத்தியை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டாண்மைக்காக உழைக்குமாறு இலங்கை தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
அதிக முதலீடு, வேலை வாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களது சங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
விரைவான பொருளாதார மீட்சியை அடைந்து, விவசாயம், கைத்தொழில், தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், உணவில் தன்னிறைவு அடைவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தாபிக்கப்பட்ட முதலீட்டு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வெளிவிவகார செயலாளர்களான சித்ராங்கனி வாகீஸ்வர (அவுஸ்திரேலியா) மற்றும் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொழம்பகே (இந்தோனேசியா) மற்றும் மனிஷா குணசேகர (பிரான்ஸ்),
எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. மெண்டிஸ் (பஹ்ரைன்), கலாநிதி ஏ.எஸ்.யு. மெண்டிஸ் (வியட்நாம்), வருணி முத்துக்குமாரண (ஜெர்மனி), கபில ஜயவீர (லெபனான்), எம்.எச்.எம்.என். பண்டார (இஸ்ரேல்), கே.கே.தெஷாந்த குமாரசிறி
(எத்தியோப்பியா), கலாநிதி சானக எச்.தல்பஹேவா (பிலிப்பைன்ஸ்), பிரியங்கிகா விஜேகுணசேகர (ஜோர்தான்), பி.காண்டீபன் (குவைத்), ஹிமாலி அருணதிலக்க (ஜெனீவா),
உதய இந்திரரத்ன (ஐக்கிய அரபு இராச்சியம்) மற்றும் சந்தி சமரசிங்க (மெல்பர்ன்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தந்தையை அடித்து கொன்ற மகன்
தந்தையை அடித்து கொன்ற மகன்
மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர் நேற்று (25) இரவு மனைவியுடன் தகராறு செய்ததாக தெரியவந்துள்ளது.
தந்தையை அடித்து கொன்ற மகன்
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தையின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கொலையாளியின் மகன் இன்று (26) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் பறந்த கோட்டபாய ராஜபக்ச
அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் பறந்த கோட்டபாய ராஜபக்ச
இன்று காலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் அமெரிக்கா சென்றுள்ளனர் .
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ச, மருமகள் செவ்வந்தி ராஜபக்ச, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக்குழந்தைகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.
தேர்தல் வரும் நிலையில் ,தாம் கைது செய்யப்படலாம் என்கின்ற பீதியில் அமெரிக்கா பறந்துள்ளார் கோட்டபாய .
அமெரிக்காவில் தங்கியுள்ள கோட்டாபய, போர்க்குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியா இலங்கைக்கு இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பம்
ரசியா இலங்கைக்கு இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பம்
ரசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையின் உல்லாச பயண துறையை கட்டி எழுப்பும் நோக்குடன் ,இந்த Red Wings விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வராம் தோறும் இரண்டு முறை இந்த Red Wings சேவைகள் நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது .
இந்த Red Wings சேவைகள் December 28, 2022 முதல் ஆரம்பிக்க படும் என தெரிவிக்க படுகிறது.
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இலங்கை நூரைச்சேலை பகுதியில் வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார் .
உள்ளக முரண்பாடு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிவடைந்துள்ளது .
இருவரும் அதிக போதையில் காணப்பட்ட நிலையில் ,இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது .
பலியானவர் முப்பத்தி ஐந்து வயதுடைய, ஆண் என அடையாளம் காணப் பட்டுள்ளார் .
இந்த கொலையினை புரிந்த ஐம்பத்தி நான்கு வயதுடைய ,நபர் கைது செய்யப்பட்டு ,நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளார் .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ,புத்தளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக இதுவரை 1500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம்களில், தங்க வைக்க பட்டு பராமரிக்க பட்டு வருகின்றனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பருவகால மழை காரணமாக குளங்கள் நிரம்பி வழிகின்றன .
இதனால் குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன .
தாழ்நில பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள், வெள்ள நீர் புகுந்ததினால் ,மக்கள் பாதிக்க பட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
உயிர் ,உடமை இழப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .பரவலாக இலங்கை எங்கும் இந்த வெள்ள பெருக்கு காணப்படுகிறது .
பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவசர நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது .
மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
இலங்கை மாத்தளை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ,53 குடும்பங்களை சேர்ந்த 263 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த கால நிலை சீர்கேட்டால், பாதிக்க பட்ட மக்கள் ,தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்களுக்கு ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது .
மேலும் அந்த பகுதியில் ,மண்சரிவு எச்சரிக்கை அபாயம் விடுக்க பட்ட வண்ணம் உள்ளது .
அதிக மழை வீழ்ச்சியே ,இந்த மண்சரிவுக்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .
ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
ராஜபக்ச விமான நிலைய செல்வுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
இலங்கை மாத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 2021 ஆண்டுக்கான செலவுகள் வரவை விட 21 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது .
இந்த விமான நிலையம் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நிறுவ பட்டு ,அவரால் அந்த விமான நிலையத்திற்கு அவரது பெயர் சூட்ட பட்டது .
கோட்டபாய ராஜபக்ச ஆட்சியில் குறித்த விமான நிலையத்தின் வருமானம் ,அதனை விட 21 மடங்கு பெரும் இழப்புடன் முடிவடைந்துள்ளது .
இது கோட்டபாய ரடாஜபக்ச குடும்பத்தால் நடத்த பட்ட ,பெரும் மோசடி என நம்ப படுகிறது .
இந்த இழப்பு மற்றும் பண கையாடல் தொடர்பிலான, விசாரணைகள் ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
நாட்டை கொள்ளையடித்து ,இன்று பிச்சைக்கார நாடக மாற்றியுள்ள ராஜபக்ச ஆட்சியின் ,லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.
என ,இலங்கை மக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கையை வைத்து வருகின்றனர் .
அவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டால் ,ராஜபக்சாக்கள் மோசடிகள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா
கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஆண்கள் கழிவறையில் ,துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
காவல்துறையினருக்கு விடயம் தெரிவிக்க பட்ட நிலையில் ,துப்பாக்கி தோட்டா மீட்டு செல்ல பட்டுள்ளது .
விமான நிலையத்தில் உள்ள கமராக்கள் மூலம் சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த தோட்டாவை கழிவறையில் வீசி சென்ற நபரை ,கைது செய்யும் வேட்டையில் ,குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
சுனாமி பேரழிவு நினைவு நாள்
சுனாமி பேரழிவு நினைவு நாள்
இலங்கை முதல் பல நாடுகளில் சுனாமி தாக்கம் ஏற்பட்டது .இந்த பேரழிவில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகினர் .
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் ,இன்றும் மக்கள் மனதில் மறையாத வடுவாக பதிய பெற்றுள்ளது .
மனித உடல்கள் ,வீடுகள் ,சொத்துக்கள் நீரில் அடித்து செல்ல பட்டன .
மக்களை மிரள வைத்த ஆழிப் பேரலை நினைவின் துயரை சுமந்து ,இலங்கை இந்தியா முதல் ,பல நாடுகளில் மக்களினால் நினைவு கூற படுகிறது .
கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்களா விரிகுடாவில் ஆரம்பமான காற்றழுத்த தாழமுக்கம் இலங்கை உள்ளே நுழைந்துள்ளதால் ,மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
காலி முதல் பொத்துவில் வரையான கடல் பகுதியில் ,இந்த காற்றழுத்தம் நிலவும் என்பதல் ,மறு அறிவித்தல் வரை, மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
உயிரை உடமைகளை காப்பாற்றி கொள்ளும் நோக்கில் ,இந்த முன் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்
வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்
இலங்கை கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது .
இந்த வெள்ள நீர் வடிந்து சென்றுள்ள நிலையில் ,நீர் புகுந்த பகுதிகளில் துப்பரவு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வெள்ள நீர் புகுந்து சேதங்களை ஏற்படுத்திய நிலையில் ,குறித்த ரயில்வே நிலையம் பாதிப்புக்கு உள்ளாகியதுடன் ,போக்குவரத்துக்கள் தடை பட்டன .
மீளவும் கண்டி ரயில் நிலையத்தை இயங்க வைத்து ,இயல்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்லும் நடவடிக்கைகள் முடுக்கிவிட பட்டுள்ளன .
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
புத்தளம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு, பக்தர்களினால் வழங்க பட்ட காணிக்கை பெட்டிகளை பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி ஒன்றுக்குள் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்க பட்டன .
இதனை கண்ணுற்ற தேவாலய நிர்வாகம் ,காவல்துறைக்கு தெரியப் படுத்திய நிலையில், அவை மீட்டு செல்ல பட்டுள்ளன .
இந்த பொதியினை வழங்கியவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .




























