Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
முதலிரவு ..!
முதலிரவு ..!
அடியே உன்னை அணைக்கவா …?
அவசரம் பிடிக்கவா ..?
தேடி என்னை வந்தவளே
தேடி வா கூடிடவே ….
வெட்கம் என்ன மானே
அச்சம் விடு தேனே …
உச்சம் தொடு நீயே
உள்ளம் தா மானே …..
பட்ட பகல் இரவு
பள்ளியறை தழுவு …
பூட்டி வைத்த ஆசைகளை
பூட்டுடைத்து கழுவு …
நீயும் நானும் இன்று
சேர்ந்த திரு நாளு ….
திருமணமா நறுமணமா
திருவிழா கோலமா …?
இந்த நாள் ஒன்றுக்கு
இத்தனை தவமா ..?
இது தான் வாழ்வின்
இல்லற வரமா …?
சில்லறை சிரிப்பில்
சினுங்கும் முனகலு ..
காதில் ஒலிக்குதே
கையாள துடிக்குதே ….
போதும் என்ற வார்த்தை
போதவில்லை இங்கே …
ஆசை அடங்கி நூற
அரும்புதே பாசம் ….
இறைவன் படைப்பில் ஒன்று
இது தானே நன்று ….
அகிலம் வாழுதே நன்று
அதை நம்பி தானே இன்று …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -15/08/2019

ஏன் அழுகிறாள்
ஏன் அழுகிறாள்
ஆடி வரும் காற்று போல
அன்று உடல் தழுவியவள் ..
இன்று விட்டு போனதென்ன ..?
இதயம் மறந்து நின்றதென்ன ..?
கூண்டுடைத்து பறந்திட தான்
கூண்டு கிளி முனைந்ததென்ன …?
காடு மேவி வந்ததினால்
காமம் கணக்க பறந்ததுவோ …?
கூவி வரும் குயில் பாட்டை
கூடுடைத்து கேட்டு நிற்பின் …
வாழ்வு பயிர் வாடிவிடும்
வாயில் கோலம் புரியலையோ ..?
ஏது சொல்லி இயம்பிடுவேன்
என் மனதின் வேதனையை ..?
காறி உன்னில் உமிழ்ந்திடவோ
கட்டி தாலி பற்றி வந்தேன் …?
பறந்த கிளி மகிழ்வுறுமோ ..?- வந்தான்
பாசமதில் குளித்திடுமோ …?
நொந்து நொந்து அழுது இன்று
நோகும் வாழ்வில் ஏன் மிதந்தாய் …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -13/08/2019
ஏன் அழுகிறாள் ..!
ஏன் அழுகிறாள் ..!
ஆடி வரும் காற்று போல
அன்று உடல் தழுவியவள் ..
இன்று விட்டு போனதென்ன ..?
இதயம் மறந்து நின்றதென்ன ..?
கூண்டுடைத்து பறந்திட தான்
கூண்டு கிளி முனைந்ததென்ன …?
காடு மேவி வந்ததினால்
காமம் கணக்க பறந்ததுவோ …?
கூவி வரும் குயில் பாட்டை
கூடுடைத்து கேட்டு நிற்பின் …
வாழ்வு பயிர் வாடிவிடும்
வாயில் கோலம் புரியலையோ ..?
ஏது சொல்லி இயம்பிடுவேன்
என் மனதின் வேதனையை ..?
காறி உன்னில் உமிழ்ந்திடவோ
கட்டி தாலி பற்றி வந்தேன் …?
பறந்த கிளி மகிழ்வுறுமோ ..?- வந்தான்
பாசமதில் குளித்திடுமோ …?
நொந்து நொந்து அழுது இன்று
நோகும் வாழ்வில் ஏன் மிதந்தாய் …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -13/08/2019

ஒருமுறை மன்னிப்பாய் …!
ஒருமுறை மன்னிப்பாய் …!
தேடி வந்த வேளையிலே
தேவையில்லை என்ரெறிந்தேன் ..
ஓடி வரும் கண்ணீரில்
உன் நினைவை கழுவுகிறேன் …
ஐ விரல்கள் கூப்பி வந்தேன்
ஆருயிரே மன்னிப்பாய் ..?
ஏது யான் செய்திடுவேன்
என்னை கொஞ்சம் எண்ணிப்பாய் …?
பிரிவு ஒன்று வாட்டையிலே – உன்
பிரியமதை புரிந்து கொண்டேன் ..
உள்ளத்திலே வலிகள் தாங்கி
உலவையிலே என் செய்வேன் …?
பேரழகே எந்தனது
பெருமனமே மன்னிப்பாய் …
உயிர் கொடுத்து உறவாட
உள்ளமே பேசிடுவாய் ….
வாயில் வீழ்ந்தா சொற்களது
வாயிலிலே எறிந்து விட்டேன் …
கூப்பி கரம் கால் வீழ்ந்தேன்
குலமகளே மன்னிப்பாய் ….
போற்றி பாடும் என் மனதில்
பொன்மகளே நீ பெருமகளாம் …
ஏற்று என்னை சென்றிடுவாய்
என் வலியை போக்கிடுவாய் …..
உள்ளமதை திறந்து பார்
ஊர்வலமாய் வருகிறேன் …
கண் விழும் நீர் துளியை
கரம் தந்து துடைத்திடுவாய் ….
தூங்க என்னால் முடியவில்லை
துயர் தாங்க இயலவில்லை …..
என்னுயிரே மன்னிப்பாய்
என் மனதை புரிந்துடுவாய் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -08/08/2019

உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!
நெஞ்சுக்குள் நெருக்கமாய் நின்றவரே
நெடுநாளாய் நெஞ்சுக்குரம் தந்தவரே ..
உன் ரேகை பார்த்து உளம் நொந்தேன் …
உன் வலியின் உயிர் அறிந்தேன் …
நேற்றைக்கும் இன்றைக்கும் நீ இருப்பாய்
நினைவிலே என்றும் நீ உதிப்பாய் …
பொண்ணுக்கும் பொருளுக்கும் ஆசையிலான்
பொழிவிலா உடலை ஏன் பறித்தான் …
கண்ணுக்குள் உலா வரும் உன் உடலை
கை தொழுதான் ஏன் பறித்தான் …?
என் செய்தி கேட்டு நீ வீழ்ந்தாய் …?
ஏன் இத்தனை வேகத்தில் நீ மறைந்தாய் ..?
உன்னிடம் கற்றதை சொல்லிடவா …?
உள்ளத்தில் வைத்ததை கொட்டிடவா ..?
மடியாத நம்பிக்கை நான் முகர்ந்தேன்
மணம் வீசும் காதலை யான் உணர்ந்தேன் …
கூணாத உழைப்பை நான் சுவைத்தேன்
குன்றாத வீரத்தை யான் படித்தேன் …
மன்றாட்டம் இல்லா பேச்சை கண்டேன்
மரியாதை பொழிகின்ற அகவை கண்டேன் …
விரைவாக பிடித்த மொழியை கண்டேன்
வீழாது எழுகின்ற வேகம் கண்டேன் …
முடியாது என்ற சொல்லை மறந்தேன் – உன்
முயற்சிகள் கண்டே யான் வியந்தேன் …
அகவையில் நீ வயதானாய்
அகத்திலே நீ உயர்வானாய் …
பிடித்ததை பேசும் பண்பானாய் – நூல்
பிடித்ததில் படைக்கும் படைப்பானாய் …
கண்டவை உன்னில் நூறெனலாம் – யான்
கற்றது தூசென சொல்லிடலாம் …
சொற்ப நேரத்தில் கண்ணுற்றதை
சொல்லிட நாள் ஒன்று போதாது …
ஒரு நாள் உன்னாலே நான் துடித்தேன்
ஒயாத உன் நினைவால் நான் துவண்டேன்..
உன்னரு ஓர் நாள் உட்கார்ந்து
உறவாடிய நாளது பொற்காலம் …..
பிள்ளைக்கு பிள்ளையார் பெயர் வைத்தவா
பிரியமாய் அவனை உளம் கொண்டவா ..
உன்னாலே தவிக்கிறோம் நீ காணாய்
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/07/2019
குறிப்பு –
ஐங்கரன் தந்தையார் துயர் அறிந்து ….
அவர் பாதம் இதனை நான் விரித்தேன் …
நெஞ்சுக்குள் நிற்கின்ற நினைவொன்றின்
நியமான தடத்தில் நான் படைத்தேன் …!

எடுத்து வா ஏகே 47….!
எடுத்து வா ஏகே 47….!
ஆடி வந்த புயலடித்து
அழகு வீடுடைந்து – குஞ்சி
எட்டு முழ சேலையும்
எட்டா கிழிஞ்சு போச்சு ….
மாரி மழைக்குள்ள
மானம் காத்த வீடு …
வெள்ளைத்தோட போச்சு
வெம்பி விழி யாச்சு ….
கத்தி அழுதோம்
கண்ணீர் விட்டோம்
கும்பிடு போட்டு – கட்சி முன்
குந்தி இருந்தோம் ….
ஏதும் தரவில்லை
எங்களை பார்க்கவில்லை …
வெள்ளை வேட்டிகளையும்
வேலியில காணவில்லை ….
குண்டி கழுவி
குடியாட்சி தழுவி
முந்தி நின்று
முன் வரிசையில் கும்மாளம் …
எல்லை பிடிச்சவனும்
எலி பிடிச்சவனும்
கட்சி தலைவராம்
காசில படுக்கிறாங்கள் ….
அடைவு வைத்து
அன்றாடம் கழித்தவர்கள் …
அரசியல் ஏறி
ஆடி கார்ல போறாங்கள் …..
தேர்தல் வந்ததும்
தெருவிறங்கி கூவி
வாக்கு கேட்பார்கள்
வாய்க்கரிசி போடுவார்கள் …
தலைவன் வளர்த்த
தமிழ் தேசிய கட்சி
சிங்கள வால்பிடித்து
சிலுக்காக ஆடுதப்பா
கட்டு துவக்கு ஒண்ணு
கண் பார்த்து குறிவைக்க …
வெள்ளை வேட்டிகளை
வெறியோட தொலைக்கவேணும்
குண்டி கிழிஞ்ச காட்சட்டை
குறுக்கால போட்டவர்கள் ….
ஆடி கார்ல போகும்
அரசியலை பாரும் ….
ஏகே தான் வேணும்
எடுத்து வா தம்பி …
போட்டு தள்ள
பொட்டம்மானை கூப்பிடு …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/06/2019

உன்னால் அழுகிறேன் …..!
உன்னால் அழுகிறேன் …..!
கரு நுழைந்து உருவெடுத்து
கண் திறந்த குழந்தாய் ….
முழு உடலும் உருவெடுத்து
முன்னே வர மறைந்தாய் …..
சதி வந்து பதி வைக்க
சா தங்கி மறைந்தாய் ….
வலியெடுக்க விழி கதற
வந்து வழி சென்றாய் ….
நிலையெடுத்து உயிர் கொடுக்க
நின்றவளும் மறந்தாள் ….?
முலை கொடுத்து மடி தரவோ
முளையிலே எறிந்தாள் ..?
எதுவந்து இவள் தடுக்க
என்னுயிரை புதைத்தாள் ..?
எதுவந்து நீ கூறி
என் வலியை துடைப்பாய் ….?
உடை கழற்றி உடல் காட்டி
உறவாடையில புரியலையா …?
உயிரணுவை சிதைக்கையிலே
உன் நெஞ்சு பதறலையோ ….?
தாயாவாள் பெண்னெண்று
தரணி இன்று சொன்னது ….
தப்பாகி போனதென்று
தனயனுக்கு புரிந்தது ……
உப்பில்லா பண்டமாய்
உள மகிழ்வு குலைந்தது ….
உள்ளிருந்து அழுகிறேன்
உயிர் அனுவிற்கு புரியுமோ …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -13/06/2019

இழி செய்தார் நிலை பாரீர்
இழி செய்தார் நிலை பாரீர் …!
இரு கரத்தில் பலமிருக்க
இதயமதில் துணிவிருக்க ….
விழுந்தழுதல் முறையாமோ …?
விதி செய்தல் பிழையாமோ …?
முன் சிந்தை சிறகடிக்க
முளை வந்து வான் விழிக்க ….
கை தொழுதே பார் கூடும்
கட்டு கோட்டை ஊர் மிரளும் ….
எது வெல்லலாம் வாய் உரைத்தார்
எள்ளி நகை ஆடி நின்றார் ….
முன் வரவே அஞ்சுகின்றார்
முன் செயலால் வருந்துகிறார் …..
இல்லையென்று முன் அன்று
இழி செய்தார் நிலை பாரும் …
உள்ளுரத்தை முன் விதைத்து
உலகாலும் மகிழ்வு பாரும் …..
தோல்வி கண்டு அஞ்சுகின்ற
தோள்களுக்கு முன்னுரை யான் ….
இழி நிலைகள் செய்தாற்கு
இறைவன் தந்த தண்டனை தான் …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -14/06/2019

அழுத தமிழா சிரி ….!
அழுத தமிழா சிரி ….!
குண்டு வைத்து குருதி குடித்து
குலவி மகிழ்ந்தாய் …
உயிர் தின்ற களிப்பு அடங்கும் முன்னே
உனை வதைத்தான் ஏனழுதாய் ..?
வலிந்து தாக்கி
வம்பில் சிக்கி
வாழ்வு தொலைத்தேன்
வழியில் அழுதாய் …?
குந்தி வாழ்ந்த
குடிசை இடிய ….
சேர்த்து வைத்த
சொத்து கிழிய ….
ஊளை யிட்டேன்
ஊரில் அலைந்தாய் …?
பாவி உயிர் குடித்த பேயே
பாரை அழைத்தேன் வாயை கிழித்தாய் …?
தொப்பி பிரட்டும்
தொப்பை பரம்பரை ….
மூடி மறைத்த முகமும் அவிழ
மூலை உறைந்தேன் முனகி அழுதாய் ..?
குண்டு வைத்து குலவி மகிழ்ந்தாய்
குண்டி கிழிய சிறையில் படுத்தாய் …
தமிழன் அழிவில் வெடிகள் வெடித்தாய்
தமிழா இன்று சிரித்து மகிழ்வாய் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -10/06/2019

மோகம் முப்பது -ஆசை அறுபது ..?
மோகம் முப்பது -ஆசை அறுபது ..?
தங்க மேனி கண்டதுமே
தாழ்ந்து விழி போச்சுதடி …
அங்கமெலாம் மின்னல்வெட்டி
ஆளை மெல்ல கொன்றதடி ….
தங்க இடம் தந்தவளே
தாகம் மெல்ல ஊறுதடி ….
அங்கமெல்லாம் நாள் படர
அடியே பக்கம் வந்திடடி ….
கொஞ்சுதலில் கெஞ்சுதலில்
கொள்கை ஏதும் இல்லையடி …
வெள்ளை நிலா வந்து விட்டால்
வெளிச்சம் இங்கு வேண்டாமடி ….
மெல்ல உடல் வேர்த்திருக்க
மெல்லியதாய் மூச்சிழுக்க …
சோர்வு வந்து தாலாட்ட
சொர்க்கம் ஒன்று உறைந்து விடும் ….
அல்லும் பகல் ஊடல் அன்று
அழுத்து போன காலம் இன்று …
மஞ்சமது காத்திருந்தும்
மனதில் இல்ல விருப்பு இன்று ….
முதிர்ந்தவர்கள் சொன்னார் அன்று
முன்னே நானும் நம்பவில்லை ….
அனுபவ பள்ளியிலே – நிகழ்வு
அன்றாடம் பொயுமில்லை …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -07/06/2019

பூ புனித விழா இதுவோ ..?
பூ புனித விழா இதுவோ ..?
மங்கை குளித்தல்
மறைந்து பார்த்தல் …
குற்றம் என்றே
குரலை உயர்த்தும் ….
தங்க மேனிகள்;
சங்கதி கேளீர் …
என்ன கேடிது
என்ன உரைப்பீர் …?
உடைந்த பூவை – தொட்டி
உலையில் இருத்தி …
நீரை அள்ளி
நிரையில் வார்ப்பார் ….
ஒட்டிய உடையில்
ஓவென்று தெரிய…
காட்டியே நிற்பாள்
காணா நிற்பார் ….
குமரி குளிப்பதை
கூடியே பார்க்கும் …
பூ புனித விழா இதுவோ ..?
பூ பார்க்கும் விழா இதுவோ ..?
ஏதடா மனிதா
என் செயல் இதுவாம் …?-அவள்
குளித்தலை பார்த்தான்
குற்றம் இல்லையோ …?
முட்டாள் மனிதா – உன்
மூளை கழுவு …..
சட்டம் உரைப்பவர்
சாக்கடை வீசு ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -06/06/2019

கால் விழுந்த சோம்பேறி …!
கால் விழுந்த சோம்பேறி …!
கடன் தீர்க்க வழி தேடி
கால் ரேகை தேய்ந்திருச்சு …
கடன் தந்தான் வட்டிக்கு
காத்திருப்பு பெருகிடிச்சு ….
ஊளை உடல் பெருத்து
உலவும் பெருச்சாளி ….
சோம்பல் முறித்தெறிய
சோளிக்கு வந்திடுவான் …..
கனத்த குரல் பிடித்து
கத்தி பேசிடுவான் …
வட்டி இல்லை எனின்
வப்பாட்டிக்கு விடு என்பான் …..
பொயிலை வாய் காரன்
பொண்டாட்டி கேட்டிலுக்க ….
வம்பு பெருக்கெடுத்து
வார்த்தை விழுந்தோட …..
இல்லை பணம் என்று
இடிந்து யான் உரைக்க ….
கால் விழுந்து கதறுவான்
கல்வி இல்லாதான் …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -05/06/2019

விழியை மூடு உயிர் வாழ்வாய் …!
விழியை மூடு உயிர் வாழ்வாய் …!
கண்ணில் உலகை
கண்ணே வைத்து …
கண்ணீரோடு
கண்ணே நனைவாய் ….
பொய்யாம் உலகின்
பொறியில் எரிந்து …
வீழ்ந்து அழுவாய்
விழியை மூடு …
கண்ணை குற்றி
கதிரை பறித்து ….
குருடாய் உன்னை
குற்றி எறிவார் …
விழித்து பார்த்தால்
விவரம் கேட்பார் …
விழியை மூடு
விசில் அடித்து அலைவார் ….
உலகம் போற போக்கில் இன்று
உற்று பார்த்தல் உலகில் பிழையாம் ..
உண்மை கசக்கும் விழியை மூடு
உலகில் கொஞ்சம் நீயும் வாழ்வாய் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -04/06/2019

உலகம் பாடும் ஓடு …!
உலகம் பாடும் ஓடு …!
கத்தி வரும் காற்றடித்து
கால் உடைந்து நான் விழவோ ..?
பற்றி வரும் தீ பிடித்து
பால் மேனி எரிந்திடுமோ …?
சுற்றி வரும் பகை பார்த்து
சூழல் பந்து வீழ்ந்திடுமோ ..?
கொட்டுகிற அருவியில
கொள்கை வீழ்ந்து செத்திடுமோ ..?
சத்தமிடும் வாய்கள் எல்லாம்
சாதனையை துப்பிடுமோ …?
சாளரத்தை பூட்டி வைத்து
சங்கதிகள் மறைத்திடுமோ …?
வெள்ளை மன சிந்தனையோ
வெற்றிகளை கொட்டி விடும் …
தட்டி வந்து கைகள் கூடி
தன் நம்பிக்கையை செப்பிவிடும் …
ஒற்றையில உள்ளாய் என்று
ஒரு போதும் எண்ணாதே …
தப்பு இன்றி நீ நடப்பின்
தரணி உன்னை பாடி விடும் …>!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/05/2019

கிழக்கொன்று வெளிக்கிறது …..!
கிழக்கொன்று வெளிக்கிறது …..!
யான் அழுது உழன்றிடவோ ..?
யாத்தலும் நின்றிடவோ ..?
ஏதுமிலார் என்றிடவோ ..?
ஏற்று யான் சென்றிடவோ ..?
ஊருமிலார் பேருமிலார்
ஊர் ஏறி வந்தின்று …
யான் அழுகை கழித்திடவோ ..?
யாசகம் செய்து பிழைத்திடவோ …?
வேர் அறுந்தான் என்றென்னை
வேறாக்கி வைத்திட்டார் ….
தீங்குடையும் காலம் ஒன்று
தீ கொண்டு வருகுதின்று …..
பாங்குகள் கண்டு யான்
பரவசம் கொண்டெழுந்தேன் ….
ஆக்கினைகள் உடையும் – நல்
ஆகாயம் கண்டு விட்டேன் ….
இக்காலம் கண்டென்னை
இழி கொண்டார் வாய்கள் எல்லாம் …
பொற்கால முன்றலில்
பொடியாகும் நிலை செய்தார் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22/05/2019
கண்ணீர் சமர்ப்பணம் …..!
கண்ணீர் சமர்ப்பணம் …..!
நேற்றெங்கள் வீதியிலே
நீள் நடந்த நிலவு ..
பேச்சின்றி போனதுவோ ..?
பேர் இடி தந்துவே ….
கால் ஊன்றி நடக்கையில
கை பிடித்து சென்றவளே …
வேர் பிடித்து நாம் நிமிர
மோர் வாத்து நின்றவளே ….
உன் வலியை உளம் புதைத்து
உன்னை நீ வதைத்து …
எழுந்து நடந்தவளே
ஏற்றங்கள் கண்டவளே ….
வேரறுந்து வீழ்ந்தாயோ ..?
வேறாகி போனாயோ …?
பொங்கி வரும் கண்ணீரை – உன்
பொற்பாதம் தூவுகிறோம் …
கலகலத்த உன் பேச்சு
கனிவான உபசரிப்பு ….
நெஞ்சம் ஏறி நினைவு தூற
நெஞ்சே தீ தின்ன மறைந்தாயே …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/05/2019
கண்ணீர் வணக்கம் …!
கண்ணீர் வணக்கம் …!
அலை கடலாய் திரண்டிங்கு
ஆர்ப்பரித்து வந்தார்க்கு …
நெஞ்சமதால் வாழ்த்துரைத்து
நெருடுகிறேன் என் வலியை ….
பூப்போல இருந்தவளாம்
புன்னகையை தந்தவளாம் ….
காற்றோடு மறைந்த தினம்
கண்கள் எல்லாம் நீராச்சு ….
பேச்செல்லாம் அவளாச்சு
பெருங்கடலாய் உறைந்தாச்சு …
மூச்செல்லாம் அவளாகி
முழு மதியாய் நிறைந்தாச்சு ….
வயிற்றுக்கு உணவின்றி
வழி யோரம் அலையையில …
நேர்த்திக்கு விட்டது போல்
நேர்ந்தெம்மை எடுத்தவளாம் ….
காற்று போல் தழுவி எம்மை
கண்ணீரை துடைத்தவளாம் …
பேச்சின்றி போன போ
பெருமனது உடைந்திருச்சு ….
கூற்றுவனே ஏன் வந்து
குலமகளை நீ பறித்தாய் …?
எம தர்மா எங்கிருக்காய்
என் முன்னே நீ வாடா ….
பெற்றவளாய் எமை அணைத்து
பேரன்பு செய்தவளை ….
குரல் நசுக்கி கொன்றதென்ன
கூற்றுவனே பதில் சொல்லாய் …………….
இன்று நாம் நிமிந்திருக்க
இல்லத்தில சிறந்திருக்க ….
உந்தனது கூடத்தில
உலவியவர் அழுகின்றோம் ….
கண்களில நீர் தந்து
கடுகதி மறைந்ததென்ன ..
நெஞ்ச மெலாம் வலி தந்து
நேர் விழியே உறைந்த தென்ன …?
வந்து வழி மலர் தூவி
வழியனுப்ப முடியலையே …
வீழ்ந்து மனம் கதறுதம்மா
விடலை உடல் நனையுதம்மா …
செந் தனலும் உன் உடலை
சேர்ந்து வந்து திண்றதுவோ ..?
கண்களது பார்த்திருக்க
கருகி நீறாய் உதிர்ந்தாயோ …?
கருகி நீ மறைந்தாலும்
கண்களது மறவாது ….
கை தொழுத பேரழகே
நவஜீவனம் மறவாது ……!
லண்டன் முரசு மோட்டை ஓன்றியத்தில் முழங்கிய கவி- கண்ணன்

உன்னை அறிந்தால் …!
உன்னை அறிந்தால் …!
எழுதாத பேனாக்கள்
இருந்தென்ன இலாபம் ..?
எதிருக்கும் புதிருக்கும்
இன்றென்ன கோபம் ..?
அறியாத அவை ஏறி
அவை என்ன முழக்கம் ..?
அனலாக தமை வைத்து
அவை என்ன உறக்கம் …?
நெஞ்சிலே உனக்கு
இன்றென்ன கலக்கம் …?
நெசமா உரைத்தாய் ..?
நெஞ்ச வரியில் வீக்கம் ….
கரையாத பனி என்றும்
கடல் வந்து சேராது …
கரை தேட முடியாது
கப்பல் கடல் ஓட முடியாது …
அது புரியா மனிதம்
அகிலம் வாழ் கூடாது …
அவை யாவும் தெளிந்தால்
அகிலம் உன்னை மறவாது …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/04/2019
காற்றை காதல் செய்யும் பெண் …!
காற்றை காதல் செய்யும் பெண் …!
ஆடை உள்புகுந்து
அள்ளி தழுவுகிறாய் ….
வீதியில் போகையில
விரட்டாமல் விட்டு விடு …
மிதி வண்டி மிதிக்கையிலே
கீழாடை தூக்கிறியே ….
ஒத்த கையால் நான் பிடிச்சு – வண்டி
ஓட்ட வைக்கிறியே ….
அந்தி வரும் வேளையிலே
அயராது வந்து விடு ….
வேர்வை கழன்று விழும்
வேலை அகற்றி விடு …..
உள்ளே நீ புகுந்து
உன் விருப்பில் நீயாடு ….
நீண்டு நானுறங்க
நீ வந்து தாலாட்டு …..
சந்தியில பந்தியிலே
சத்தம் போடாதே …
சம்மதம் தந்து நின்ற
சங்கதி சொல்லாதே …..
தென்றலே வந்து கொஞ்சு
தென்மாங்கு நீ பாடு …
நீயில்லா உலகிலே
நின் உயிர் வாழாதே …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/04/2019
ஓடி வா காதலே …!
ஓடி வா காதலே …!
உன் நினைப்பில் நானே
உடைந்து போனேன் மானே ….
கண்ணில் உன்னை காட்டு
கை தொழுவேன் நானே …
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
நித்தம் பொழியும் பாசம் ….
முத்தம் பொழிய தூண்டுதே
முன்னே வா தேனே …
காதல் வசப்பட்டு மனசு
காற்றாய் பறக்குது ….
கண்டபடி கனவில
கண்ணே உன்னை காட்டுது ….
பிரிந்த பொழுதில்
பிரியம் தவிக்குது …..
சேந்து விட தானே – விழி
சேர்ந்து அழுகுது ….
கூண்டு கிளியே
கூடுடைத்து வாராய் ….
காத்திருக்கேன் நானே
கண்ணீர் பாராய் …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/04/2019






