Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
கதா நாயகியாக நடிக்கும் நட்சத்திரா
கதா நாயகியாக நடிக்கும் நட்சத்திரா
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் நட்சத்திரா, புதிய படத்தில் கதா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
கதாநாயகியாக நடிக்கும் நட்சத்திரா
நட்சத்திரா
வி.பி.டேனியல் இயக்கத்தில், ஆனந்த் நாக், நட்சத்திரா நாகேஷ் ஜோடியாக நடிக்கும் படம்,
வணிகன். படம் குறித்து, நட்சத்திரா நாகேஷ் கூறுகையில், ‘’டிவி தொகுப்பாளினியாக வலம் வரும் நான், இப்படம் மூலம், பெரிய திரையில் அறிமுகம் ஆகிறேன்.
நட்சத்திரா
‘திரில்லர்’ படம் என்றாலும், காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.
செந்தில் விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்களை கேட்ட பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா,
இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார்.
விஜய் தளபதி 64 படத்தில் அரசியல்
விஜய் தளபதி 64 படத்தில் அரசியல்
நடிகர் விஜய்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் தளபதி 64. இதுவரை 2 கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.
மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக, தற்போது படக்குழு, கர்நாடாகாவின் ஷிமோகாவில் முகாமிட்டிருக்கிறது.
நடிகர் விஜய்யும், அவருக்கு எதிராக வில்லனாக படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கே படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய்
விஜய், ஷிமோகாவில் இருக்க, விரைவில் நடிகர் விஜய் சேதுபதி அங்கு செல்கிறார்.
கல்வி முறைக்கும், அதில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் எதிராக கருத்து மழை பொழியும் கேரக்டரில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி பேராசிரியர் வேடத்தை நடிகர் விஜய் ஏற்று நடிக்கிறார். வில்லன் விஜய் சேதுபதியுடன், பேராசிரியர் விஜய் சண்டையிடுவது போன்ற காட்சிகள் உள்ளன.
அப்படிப்பட்ட காட்சிகளைத்தான், ஷிமோகாவில் படக்குழு படமாக்கவிருக்கிறது.
பழனியில் தனுஷ் சாமி தரிசனம்
பழனியில் தனுஷ் சாமி தரிசனம்
நடிகர் தனுஷ் நடிக்கும் ‘சுருளி’ படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கோம்பைபட்டியில் நடந்து வருகிறது.
இதற்காக தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினர் அங்கு தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார்.
நடிகர் தனுஷ்
அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவில் சென்று, சாமி தரிசனம் செய்தார்.
இதற்கிடையே தனுஷ் வந்ததை அடுத்து கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
பின்னர் அவர் ரோப்கார் வழியே அடிவாரம் சென்று பழனி கோம்பைபட்டிக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜூம் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
செக்ஸ் படங்களில் நடிக்க அழைத்தார்கள் – நடிகை புகார்
செக்ஸ் படங்களில் நடிக்க அழைத்தார்கள் – ரஜினி பட நடிகை புகார்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே.
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான ஆள் இன் ஆள் அழகு ராஜா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்
ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார்.
நிர்வாண வீடியோ, செக்ஸ் படங்களில் பாத்ரூம் செல்பி என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினாலும் எதையும் கண்டுகொள்ளாமல் சினிமாவில் நடித்து வருகிறார்.
பல்வேறு கவர்ச்சியான வேடங்களில் இவர் நடித்ததால் பாலியல் நகைச்சுவை படங்களில் இவரை நடிக்க வைக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முயற்சித்ததாக சமீபத்தில் கூறியுள்ளார் ராதிகா.
ராதிகா ஆப்தே
அதில் அவர், ‘ஒரு துறையில் கால் வைத்தால் அதேதான் வழியென்பது இல்லை ஆனால் அந்த பாதைக்கே என்னை அழைத்தார்கள்.
ஆனால், அனைத்தையும் நான் தவிர்த்துவிட்டு தற்போது நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
நடிகை காஜல் காதலன் ..?
காஜல் அகர்வால் திருமணம் செய்ய இருக்கும் நபர் இவரா
தமிழின் முன்ணனி நடிகையாக கடந்த சில வருடங்களாக வலம் வந்த நடிகை காஜல் காதலன் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார்.நடிகை காஜல்
ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நண்பர்களுடன் பிசியாக இருப்பதால் காஜல் அகர்வால் திரைப்படங்களைத் தேர்வு செய்து தான் நடித்து வருகிறார்.
கிரிக்கெட், சுற்றுலா இப்படி தன்னுடைய வாழ்வை இனிமையாக அனுபவித்து வருகிறார் காஜல் அகர்வால்.
ஆண் நண்பருடன் காஜல் அகர்வால்
சமீபத்தில் தன்னுடைய ஆண் நண்பருடன் மைதானத்தில் நெருங்கி இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் கூட வந்த ஆண் நண்பரின் தோளில் ஏறி உட்கார்ந்தப் படி இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வளவு நெருக்கமாக புகைப்படங்களை யாருடனும் நடிகை காஜல் அகர்வால் எடுத்துக் கொண்டதில்லை.
இந்த ஆண் நண்பருடன் தான் தற்போது தொடர்ந்து நடிகை காஜல் வெளியாகின்றன.
வரும் புது வருடத்தில் காஜல் அகர்வால் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின்றன. எனவே இவர்தான் திருமணம் செய்யும் நபர் என்று கூறப்படுகிறது.
இதனால் தற்போது நடிகை காஜல் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளாராம் என கோடம்பாக்கம் கிசு கிசு பரவுகிறது
அஜித் குடும்பத்துடன் நட்பாக இருக்கும் – விஜய்
அஜித் குடும்பத்துடன் நட்பாக இருக்கிறோம் – விஜய்யின் தாயார்
அஜித் குடும்பத்துடன்– நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர். இவர் பிரபல பாடகியும் கூட. சமீத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லந்துகொண்டு பேசியுள்ள ஷோபா சந்திரசேகர் விஜய், அஜித் நட்பு பற்றி கூறியிருக்கிறார்
’விஜய் – அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் இருந்தே அஜித் குடும்பத்துடன் நட்பாகத்தான் இருக்கிறோம்.
அஜித் – விஜய்யின் தாய் ஷோபா
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஷாலினியை கூட திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதே என் கணவர் தான்.
அன்று முதல் இன்று வரை அஜித் குடும்பத்துடன் இந்த உறவு நீடித்து கொண்டே தான் இருக்கிறது.
ஆனால் ரசிகர்கள் தான் அஜித் விஜயா நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.விஜியை தாய் சோபா
அஜித் குடும்பத்துடன் உறவு நிலையில் நாம்

கீர்த்தி சுரேஷ் விருது பெற்றார்
66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்றுள்ளார்.
தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால்,
இந்த முறை தேசிய விருது பெற்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ்
இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
மகாநடி படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த படமாக பிரியா
கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படம் தேர்வு செய்யப்பட்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படமாக குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட ‘ஹெல்லாரோ’ தேர்வு செய்யப்பட்டது.
‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ படத்தில் நடித்த விக்கி கெளசால், ‘அந்தாதூன்’ படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதை இணைந்து பெற்றுக்கொண்டனர். ‘
உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யதர் சிறந்த இயக்குநருக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
66-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை கடந்த ஆகஸ்டு மாதம் விருதுகளுக்கான நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல் அறிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் விருது பெற்றார்
31 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது.
முழு விருது பட்டியல்: சிறந்த கல்வித் திரைப்படம்: சரளா விரளா, சிறந்த ஆக்ஷன் படம்: கேஜிஎப் (கன்னடம்), சிறந்த நடன அமைப்பு:
குமார்(பத்மாவத்), பியூச்சர் பிலிம் அல்லாத சிறந்த படம்: விபா பக்ஷியின் சன் ரைஸ் மற்றும் தி சீக்ரெட் லைப் ஆப் பிராக்ஸ், அஜய் – விஜய் பேடி,
சிறந்த இயக்குநர்: யுரி ஆதித்ய தார், சிறந்த திரைப்படம்: ஹெல்லாரோ, குஜராத்தி திரைப்படம்,
இயக்கம்: அபிஷேக் ஷா, சிறந்த நடிகர்: அந்தாதூன் படத்தின் ஆயுஷ்மான் குராணா, யுரியின் விக்கி குஷால்,
சிறந்த நடிகை: மகாநடி கீர்த்தி சுரேஷ், சிறந்த துணை நடிகர்: ஸ்வானந்த் கிர்கிரே படம் கும்பக், சிறந்த துணை நடிகை:
பாத்ஹை ஹோவின் சுரேகா சிக்ரி, சிறந்த ஆக்ஷன் பட இயக்கம்: கேஜிஎப் அத்தியாயம் 1, தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம்:
ஒன்றல்ல இரடல்ல (கன்னடம்), சிறந்த வெகுஜனப் படம்: பத்ஹாய் ஹோ, சிறந்த அறிமுக இயக்குநர் படம்:
நான், சிறந்த சமூக திரைப்படம்: பத்மன், சிறந்த ஒளிப்பதிவு: உல்லு (மலையாளம்), சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ்:
கேஜிஎப், சுற்றுச்சூழல் காப்பு பற்றிய சிறந்த திரைப்படம்: பானி, சிறந்த மாநில மொழிப்படங்கள்:
தமிழ்: பாரம், ராஜஸ்தானி: டர்ட்டில், பஞ்செங்கா: இன் த லேண்ட் ஆஃப் பாய்சனஸ் உமன், மராத்தி: போங்கா, இந்தி: அந்தாதூன்,
தெலுங்கு: மகாநடி, அசாமிய மொழி: புல்புல் கேன் சிங், பஞ்சாபி: அர்ஜேதா.
சிறந்த பாடல்: நதிச்சிரமி (கன்னடம்), சிறந்த இசையமைப்பு (பாடல்கள்): சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)
சிறந்த இசையமைப்பு ( பின்னணி இசை): யுரி, சிறந்த ஒலியமைப்பு: யுரி, சிறந்த பின்னணிப் பாடகி:
கீர்த்தி சுரேஷ் விருது பெற்றார்
மயவி மனவே கன்னடப் படத்துக்காக பிந்து, சிறந்தப் பின்னணிப் பாடகர்: அரிஜித் சிங், படம்: பிந்த்தே தில்,
சிறந்த மேக்அப் கலைஞர்: ஏவ், சிறந்த தயாரிப்பு: குமார சம்பவம் (மலையாளம்), சிறந்த ஆடை வடிவமைப்பு:
மஹாநடி(தெலுங்கு), சிறந்த அசல் திரைக்கதை: சி லா சவ், சிறந்த தழுவல் திரைக்கதை: அந்தாதூன், சிறந்த வசனம்: தாரிக், சிறந்த குழந்தைகள் படம்:
சர்க்காரி அரியா பிரதமிக ஷாலி காசர்கோட், சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்: பி.வி. ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரோஹி
(உருது), ஸ்ரீனிவாஸ் போகலே (மராத்தி), சிறந்த சினிமாட்டோகிராபி:
ஒலு, மலையாளம், எம்.ஜே.ராதாகிருஷ்ணன், சிறப்பு நடுவர் விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், ஜோஜு ஜார்ஜ் ஜோசப், சுதானி ஃப்ரம் நைஜீரியாவுக்காக சாவித்ரி, சந்த்ரசூட் ராய்.கீர்த்தி சுரேஷ்

நடிகை வீட்டில் ரெய்டு
வரி ஏய்ப்பு புகார் எதிரொலி…. நடிகை வீட்டில ஐ.டி. ரெய்டு
நடிகை வீட்டில் ரெய்டு சசிகுமார் நடித்த பிரம்மன் வரி ஏய்ப்பு நடிகை வீட்டில் ரெய்டு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி.
அடுத்து சி.வி.குமார் தயாரித்து இயக்கிய மாயவன் படத்தில் நடித்திருந்தார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர், அந்தால ராக்சசி என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழ், இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார்.
நடிகை வீட்டில வீட்டில் ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் லாவண்யா திரிபாதி, ரூ.30 லட்சம் ஜி.எஸ்.டி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி உள்ளனர்.
சோதனையில் கைப்பற்றப்பட்டப் பொருட்கள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.
வீட்டில் சோதனை நடந்த போது, நடிகை லாவண்யா படப்பிடிப்பில் இருந்தார். அதை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாவண்யா வீட்டில் மட்டுமல்லாமல், சில பிரபலங்களின் வீடுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.

மது ஆர்டர் செய்து ரூ.35 ஆயிரத்தை பறிகொடுத்த நடிகை
ஆன்லைனில் மது ஆர்டர் செய்து ரூ.35 ஆயிரத்தை பறிகொடுத்த நடிகைநடந்து என்ன ..?
தமிழில் விதார்த், ராதிகா ஆப்தே நடித்த சித்திரம் பேசுதடி-2 படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்தவர் பிரியா பானர்ஜி.
தெலுங்கில் கிஸ், அசுரா, ஜஸ்பா ஆகிய படங்களிலும், இந்தியில் தேவ் படத்திலும் நடித்து இருக்கிறார். மும்பையில் உள்ள கர் பகுதியில் வசிக்கிறார்.
பிரியா பானர்ஜி ஆன்லைனில் மதுபாட்டில் வாங்க ஆர்டர் கொடுத்தார். அப்போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் முதலில் பணம் செலுத்துங்கள் மது பாட்டிலை வீட்டுக்கு கொண்டு தருகிறோம் என்றார்.
அதோடு வங்கி டெபிட் கார்டு விவரங்களையும் கேட்க, பிரியா பானர்ஜி சொல்லி உள்ளார்.
உடனடியாக அவரது கணக்கில் இருந்து ரூ.23 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளதாக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது.
அதிர்ச்சியான பிரியா பானர்ஜி போனில் பேசியவரிடம் தொடர்பு கொண்டு அதிகமான பணம் எடுத்துள்ளீர்களே என்று கேட்டார்.
மது ஆர்டர் செய்து ரூ.35 ஆயிரத்தை பறிகொடுத்த நடிகை
உடனே அந்த நபர் மன்னித்து விடுங்கள் மேடம் உங்கள் கூகுள் பே பார்கோடை அனுப்பி அதில் ஸ்கேன் செய்யுங்கள் உங்கள் ரூபாய் திரும்ப வந்துவிடும் என்றார்.
பிரியா பானர்ஜி
அவர் சொன்னபடி பிரியா செய்ய மேலும் 12 ஆயிரம் பறிபோனது. உடனே அந்த நபருக்கு பிரியா பானர்ஜி போன் செய்ய அவரது செல்பொன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியான பிரியா பானர்ஜி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு மேலும் பணம் வேறு
கணக்குக்கு மாறுவதை தடுத்து நிறுத்திய போலீசார் 2 மணிநேரத்தில் பணத்தை மீட்டு கொடுத்தனர்.
இந்த தகவல் வெளியான நிலையில் சக நடிகைகள் பீதியில் உறைந்துள்ளன
மது ஆர்டர் செய்து ரூ.35 ஆயிரத்தை பறிகொடுத்த நடிகை
ஆன்லைன் மூலம் பணம்ச எழுதும் பொழுது மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் ,இவ்விதம் திருடர்கள் உங்கள் பணத்தையும் ஆட்டையை போட்டு விட போகின்றனர் .
தெரிந்த கடைகளில் மட்டும் ஆடரை கொடுங்கள் உங்கள் பணம் பாதுகாப்பை இருக்கும் .
நயன்தாரா, டாப்சியை தொடர்ந்து சமந்தா
நயன்தாரா, டாப்சியை தொடர்ந்து சமந்தாதமிழ் திரையுலகை கடந்த சில வருடங்களாக பேய் படங்கள் ஆக்கிரமித்துள்ளன.
நயன்தாரா குற்ற பின்னணியிலான திகில் படங்களுக்கும் வரவேற்பு இருந்து வருகிறது.
புதுமுக டைரக்டர்கள் எல்லோரும் இதை புரிந்து கொண்டு திகில் படங்களை எடுத்து வருகிறார்கள்.
நயன்தாரா முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளும் திகில் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சமந்தா
இந்த நிலையில், ‘மாயா’ ‘இறவா காலம்’ ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக ஒரு திகில் படத்தை இயக்க இருக்கிறார்.
அதில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு பிறகு சமந்தா தமிழில் நடிக்கும் படம், இது.
அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
பிகினி உடையில் காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்
பிகினி உடையில் காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்
2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால்
இந்நிலையில், குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ள காஜல் அகர்வால், அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று அவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் இவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரகசிய திருமணமா? – ரிச்சா விளக்கம் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை
ரகசிய திருமணமா? – ரிச்சா விளக்கம்
ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும், குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி – கீர்த்தி சுரேஷ்
ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
செல்பி மோகத்தால் காயமடைந்த ரைசா
செல்பி மோகத்தால் காயமடைந்த ரைசா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’
துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார்.
போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில்
புகைப்படம் வெளியிடுவதற்காக படுத்துக்கொண்டு செல்பி எடுக்க முயன்றபோது, போன் அவரின் வாய் மீது
விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதையும் புகைப்படம் எடுத்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்..
அவருடன் நடனமாட சிரமப்பட்டேன் – ராஷ்மிகா
அவருடன் நடனமாட சிரமப்பட்டேன் – ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்த கன்னட நடிகை ராஷ்மிகா, அதையடுத்து மகேஷ்பாபுவுடன் சாரிலேரு நீகேவரு என்ற படத்தில் நடித்துள்ளார். கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
மகேஷ்பாபுவுடன் நடித்த அனுபவம் பற்றி ராஷ்மிகா அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘மகேஷ்பாபு ஒரு உண்மையான
சூப்பர் ஸ்டார். இந்த படத்தில் நடிக்கும்போது அவர் எனக்கு உத்வேகம் கொடுத்தார். அவருடன் நடனமாடும்போது நான் நிறைய சிரமப்பட்டேன்.
மகேஷ் பாபு – ராஷ்மிகா
அவரது வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதால் ஒவ்வொரு முறையும் நடனத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டுதான் நடனமாடினேன்.
சினிமாவில் எனது கேரியரை தொடங்கிய போதே மகேஷ்பாபுவுடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்
காதலரை கரம் பிடித்தார் ஒஸ்தி நடிகை
காதலரை கரம் பிடித்தார் ஒஸ்தி நடிகை
தெலுங்கு சினிமாவில் 2010-ல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்
நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’
படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.
அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க
சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு
படங்களிலுமே அவருடைய நடிப்பும், கவர்ச்சியும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.
ரிச்சாவின் திருமண புகைப்படம்
அதன்பின் பலமுறை மீண்டும் அவர் நடிக்க வருகிறார் என்ற செய்தி வந்தபோதெல்லாம் அவற்றை மறுத்தார். இந்நிலையில் தன்னுடைய அமெரிக்க காதலர் ஜோ
லாங்கெல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடைய திருமணம் அமெரிக்கா மற்றும் பெங்காலி முறையில் நடைபெற்றது.
அஜித் படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை
அஜித் படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை
நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக அஜித்தின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவே நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
பின்னர் நஸ்ரியா நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அவர் மறுத்து விட்ட நிலையில் யாமி கவுதம் தான் வலிமை பட நாயகி என வைரலானது.
இலியானா
ஆனால் இந்தத் தகவல்கள் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் இலியானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
வலிமையில் போலீஸ் அதிகாரி, கார் ரேஸ் வீரர் என அஜித் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
எனவே அதில் ஒரு கேரக்டருக்கு ஜோடியாக இலியானா நடிக்கலாம் எனத் தெரிகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்த இலியானா, தமிழில் கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஒரே நேரத்தில் 5 படங்கள் தயாரிக்கும் பா.ரஞ்சித்
ஒரே நேரத்தில் 5 படங்கள் தயாரிக்கும் பா.ரஞ்சித்
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார்
பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் 5 தமிழ் படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.
இயக்குனர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, பா.ரஞ்சித்தின் குழுவில் இருந்த சுரேஷ் மாரி, அகிரன்
மோசஸ் மற்றும் பிராங்க்ளின் ஆகியோர் இந்த 5 படங்களை இயக்க இருக்கிறார்கள்.
பா.ரஞ்சித்
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் படப்பிடிப்பில் தனது இரண்டாவது படத்தை முடித்த பின்னர் இது மாரி
செல்வராஜின் மூன்றாவது படமாகவும், விஜய் சேதுபதி தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்குப் பிறகு
லெனின் பாரதியின் இரண்டாவது படமாகவும் இருக்கும். மேலும் இந்த படங்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்
தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளன
ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது – கமல்ஹாசன்
ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது – கமல்ஹாசன்
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில், இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) போலீசார் தாக்குதல் நடத்தினர்.
ஜாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு
கண்டனம் தெரிவித்து நேற்று முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் திரண்ட மாணவர்கள், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராகவும், டெல்லியில்
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் பல்கலைக்கழகத்திற்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரியை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 2-வது நாளாகவும் போராட்டம் நீடித்துவருகிறது. மாணவர்களின் போராட்டம் நீடிப்பதையொட்டி
பலகலைக்கழக வளாகம் மற்றும் மெயின் வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவரும் மாணவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்காததால் வாசலில் இருந்தவாறு மாணவர்களிடம்
கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
கமல்ஹாசன்
மாணவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:-
”எனது நாடு, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகையால் நான் இங்கு வந்துள்ளேன்.
எனக்கு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
நான் இறக்கும்வரை, என்னை ஒரு மாணவன் என்றுதான் அழைத்துக் கொள்வேன். மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன்.
மத்திய அரசு மாணவர்களை படிக்கும் இடத்திலேயே அகதியாக்கியுள்ளது. போராடும் மாணவர்களுக்கு உணவு
கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியது இந்த அரசிற்கு அவமானம். குடியுரிமை சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்
வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படம்
வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படம்
ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட
படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட்
பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தவருக்கு, இந்த
போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரம்யா பாண்டியன்
இவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், இவர் தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
இருப்பினும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுபோன்று மேலும் சில புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – நடிகை ஹனிரோஸ்
தமிழ் சினிமாவில் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – நடிகை ஹனிரோஸ்
தமிழ் சினிமாவில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன்
உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். இப்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஹனிரோஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- சினிமாவில் ஒருவரை ஒருவர் அறிந்திருப்போம்.
நமக்கு எல்லோரையும் தெரியும். நான் ஒரு கதையை தேர்வு செய்தாலும் படத்தில் கமிட் ஆனாலும் முதலில் இயக்குனர் வினயன் சாரிடம் தான் சொல்வேன்.
அவர் எப்படி வழி காட்டுகிறாரோ அதையே பின்பற்றுகிறேன்.
ஹனிரோஸ்
ஆரம்பத்தில் சில தமிழ்ப் படங்களில் நடித்தேன். அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன்.
மானேஜர்கள் இந்த படத்தில் நடியுங்கள் என்று சொல்வார்கள்.
இதில் நடித்தால் பெரிய இடத்துக்கு போகலாம் என்பார்கள். அதை நம்பி கமிட் ஆவோம். படம் ஆரம்பித்த பின் தான் அது ஒரு விதத்திலும் உதவாது என்பது தெரியும்.
சிலர் மனரீதியாக துன்புறுத்த தொடங்குவார்கள் அது தாங்கமுடியாததாக இருக்கும். எல்லாவற்றையும் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






