Category: கிசு கிசு
கிசு கிசு தமிழ் சினிமா செய்திகள் பக்கத்தில்
முதன்மையான சினிமா செய்திகளாக இடம் பிடிக்கிறது
காதலரை பிரித்த கொரோனா – வருத்தத்தில் நடிகை.
காதலரை பிரித்த கொரோனா – வருத்தத்தில் நடிகை.
தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தனது காதலனை பிடித்து விட்டதாக நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம்.
காதலரை பிரித்த கொரோனா – வருத்தத்தில் நடிகை
கிசுகிசு
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இயக்குனர் ஒருவரை காதலிக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்களாம்.
தற்போது பரவிவரும் கொரோனா வைரசால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்களாம்.
ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இவர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா அதிகம் பரவுவதாக அறிந்து
இருவரும் பிரிந்து இருக்கிறார்களாம். சமீபத்தில் இவர்கள் 2 பேரும் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம்.

விமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு
விமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு
சங்க நடிகர் நடிப்பில் தற்போது அதிரடியாக படம் ஒன்று உருவாகியுள்ளதாம். இதன் படப்பிடிப்பு முழுவதும்
வெளிநாட்டில் படமாக்கப்பட்டதாம். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடிக்கும் மேலயாம். ஆனால், இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களுக்காக
மூன்று முறை விமான டிக்கெட் புக் செய்து கேன்சல் செய்திருக்கிறார்களாம்.
இதற்கான செலவு மட்டும் ரூபாய் 2 கோடிக்கும் மேல ஆனதாம். இதுபோல், பல தேவையற்ற செலவுகளை படக்குழுவினர்கள் செய்திருக்கிறார்களாம்.
அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகை
அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகை
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐந்தெழுத்து நடிகையை ஒரு பெரிய நடிகரின் படத்தில், போலீஸ்
வேடத்தில் நடிக்கும்படி கேட்டார்களாம். “நான் இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக இல்லை” என்று நடிக்க
மறுத்து விட்டாராம். அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை (போலீஸ் வேடத்துக்கு) தேடி வருகிறார்களாம்.
“என் கை, கால், இடுப்பு மூன்றையும் அசைத்து ஆடினாலே போதும். ரசிக கண்மணிகள் ஆசையுடன் பார்ப்பார்கள்.
அதற்கு மேல் ‘ரிஸ்க்’ எடுக்க தேவையில்லை” என்கிறாராம், அந்த ஐந்தெழுத்து நடிகை!
தேடி வந்த வாய்ப்பை நழுவவிட்டு புலம்பும் நடிகர்
தேடி வந்த வாய்ப்பை நழுவவிட்டு புலம்பும் நடிகர்
நான்கெழுத்து நடிகரின் இரண்டெழுத்து படம் வெற்றி என்ற செய்தி, மன்னர் நடிகரை வடபோச்சே! என வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். ஏனேனில், அது அவர் நடிக்க
வேண்டிய படமாம். தயாரிப்பு பிரிவுக்கும் அவருக்குமான உரசல்களால் நடிக்க முடியாமல் போனதாக தனக்கு
நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.
மன்னர் நடிகரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் சரிவர ஓடாததால், அடுத்த படத்தில் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறாராம்.
இதனால் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் முனைப்பில் இருக்கிறாராம் அந்த நடிகர்.
வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை
வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை
மும்பையை சேர்ந்த அந்த ‘வால்’ நடிகை ஒரு காலகட்டம் வரை தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக
இருந்தாராம். ஒரு பிரபல டைரக்டரை காதல் திருமணம் செய்து, அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து கொண்டாராம்.
டைரக்டரை விவாகரத்து செய்த பின், தனக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தாராம்.
ஆனால், அது நடக்கவில்லையாம். அதன் விளைவு, அந்த நடிகை மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டாராம்.
போதை அதிகமானால், தனது நிலையை எண்ணி வாய்விட்டு அழுகிறாராம்!
அந்த காட்சி நோ – அடம்பிடிக்கும் நடிகை
அந்த காட்சி நோ – அடம்பிடிக்கும் நடிகை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் முதன்மையானவராக இருக்கும் வீரமான நடிகை,
தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளாராம். கம்பீரமான பீரியாடிக் படங்களாக இருக்கட்டும், ஆக்ஷன், கூல் கேர்ள்,
காமெடி என அனைத்து விதமான படங்களிலும் தன்னை நிரூபித்து வருகிறாராம்.
அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நடிகை படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனத்துடன்
இருக்கிறாராம். மேலும் எந்த ஒரு மொழிப் படமாக இருப்பினும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னரே, தான்
முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மிகவும் கண்டிப்புடன் கூறிவிடுகிறாராம்.
இதுவரையில் நடிகை எந்த ஒரு திரைப்படத்திலும் முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாதாம். அதை என்றும் நான் மாற்றி கொள்ளப்போவதில்லையாம்.
இதற்கு ஒப்புதல் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கண்டிஷனாக தெரிவித்துள்ளாராம் நடிகை.
வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு
வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு
முதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது வாய்ப்பில்லாததால் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு
கிசுகிசு
முதல் படத்தில் கண்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து மிகவும் பிரபலமான நடிகை, அடுத்தடுத்து பல படங்களில்
நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். ஆனால், அந்த படங்கள் வெளியாகவில்லையாம். மேலும் புதிய பட வாய்ப்புகளும் நடிகைக்கு கிடைக்க வில்லையாம்.
நடிகையை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக புதிய புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பரப்பி
வருகிறாராம். இதைப்பார்த்த சிலர் நடிகைக்கு வாய்ப்பில்லாமல் இப்படி செய்து வருகிறார் என்று பேசி வருகிறார்களாம்.
இயக்குனருக்கு தூது அனுப்பும் நடிகை
வீரமான நடிகர் கடைசியாக நடித்த அதே கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார்களாம்.
இந்த படத்தில் நடிக்க நையாண்டியான நடிகை மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நடிகையின் தீராத ஆசையாம்.
முந்தைய படத்தில் இருந்தே நடிகை முயற்சி செய்து வருகிறாராம். ஆனால், இயக்குனர் கண்டுக்கொள்ள
வில்லையாம். இந்த முறை எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று இயக்குனருக்கு தூது அனுப்பி வருகிறாராம்.







