பதில் சொல்
Posted in கவிதைகள்

பதில் சொல்

பதில் சொல்

இரவுகளை மட்டும்
இரவல் கேட்கிறாய்
இது தான்
இன்றுந்தன் காதலா

உன் இச்சை தீர்ந்ததும்
உதறி போனாயே
காதல் என்ற போர்வையில்
கண்ணீரை ஏன் தந்தாய்

சுகமான காதலை
சுமையாக்கி போனாயே
என்னை கொன்றிட தான்
எமனாகி வந்தாயா

தேடி வந்த போதெல்லாம்
தேய் பிறையை தேய்ந்தேனே
காலாவதி ஆகினேனோ
கழித்து விட்டு போனாய்

03-09-2022

கவிதை
Posted in கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா

உந்தன் மனதில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ
என்னை எண்ணி தானோ
எங்கிராய் இன்று நீயோ

அலைகளின் ஆடலில் மோதல்
மரங்களின் உரசலில் காற்று
உந்தன் உரசலில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ

உன்னை ஏற்று நானே
உலகில் வாழ்வேன் மானே
இதயம் தாரேன் நானே
ஏற்று வருவாய் தேனே

இரவும் இங்கு பகலாகும்
இந்த பூமி சுகமாகும்
இதயம் நாளும் மகிழ்வேறும்
இது தான் வாழ்வு சுகம் ஆளும்
03-08-2022

https://www.youtube.com/watch?v=73Hc61mg7jE
இறந்து போ
Posted in கவிதைகள்

இறந்து போ

இறந்து போ

சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்

வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்

கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே

துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே

இறந்து போ

பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன

கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன

பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே

பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு

வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா

இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022

இவன் போல நீ எழு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இவன் போல நீ எழு

இவன் போல நீ எழு

எதிரிக்கு அடங்கா எழுவான்- இவன்
எண்திசை காட்டும் உதயோன்
அடிமைக்கு அடங்கா கிழக்கு- இவன்
அறத்திலே வெடிக்கின்ற துவக்கு

எதிரிக்கும் எழுகின்ற வியப்பு- இவன்
எரிகின்ற எங்கள் நெருப்பு
வீரத்தில் பாய்கின்ற புலி – இவன்
விடுதலை முழங்கிடும் ஒலி

தளிர்த்திடும் முளைகளின் ஒளி- இவன்
தடத்திலே சிக்காத எலி
வீரத்தில் முளையிடும் முளை – இவன்
வீரம் பேசிடும் நாளை

வீழ்சியில் எழுந்த ஏவுகணை – இவன்
வீரம் பேசிடும் போர்முனை
வீழாது உழுதிடும் ஏர்முனை- இவன்
விடுதலை பேசிட நீமுனை ….

வன்னி மைந்தன்
ஆக்கம் 18-12-2021

யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்