Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சிங்கள பவுத்த அரசை அமைக்கும் முயற்சியில் கோத்தா
இலங்கையில் ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்துள்ள கோட்டபாய சிங்கள பவுத்த இனவாத அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ,இதனை முழுமையாக அவர் செயல் ஆற்றுவார் எனின் அது சிறுபான்மை மக்களை பாதிப்பதுடன் ,அச்சம் கொள்ள வைக்கும் .இவரது இந்த செயலை உணராது மக்களும் வாக்குகளை அளித்துள்ளனர் .
சிங்கள வாக்குகள் மூலம் நான் வென்றேன் என மார் தட்டி இவர் செல்வார் எனின் பலவிளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜேவிபி எச்சரித்துள்ளது
1550 செக்ஸ் பட சீடிகளுடன் நபர் கைது
இலங்கை- மல்லிப்பூவை பகுதியில் வைத்து நபர் ஒருவர் 1550 செக்ஸ் பட சீடிகளுடன் கைது செய்ய பட்டுள்ளார் ,கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்ய பட்டுளளார்
கொழும்பில் ன் வீதியில் வாகன நெரிசல்களை குறைக்க பொலிசாருக்கு உத்தரவு
கொழும்பில் ன் வீதியில் வாகன நெரிசல்களை குறைக்க பொலிசாருக்கு உத்தரவு ,பாதுகாப்பு மந்திரி உயர் காவல்துறை அதிகாரிகளுடன் சந்தித்து கட்டளை பிறப்பித்தார்
30 மில்லியன் போதைவஸ்துடன் இருவர் கைது
இலங்கையில் வெளிநாட்டு போதைவஸ்துக்களை கடத்தி வந்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
நவீன முறையில் நாட்டை கோட்டபாய பாதுகாப்பார் – நாமல்
நவீன முறைகளை பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்
கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடிதம் மூலம் அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் – படங்கள் உள்ளே
மீண்டும் வாக்களித்த தெரனியகல நூரி தோட்ட மக்கள் அச்சத்தில்
இராணுவ முகாம் அகற்றபட்டமை இந்த நிலமைக்கு காரணம்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று (16) கேகாலை மாவட்;டம் தெரனியகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நூரி தோட்டத்தில் வாக்களிக்க சென்று திரும்பிக் கெண்டிருந்த ஆர். பிரகாஷ் என்பவரை தாக்கி போத்தலால் குத்தி கையில் காயப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து இவர் கைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது விடு திரும்பி உள்ளார். தொடர்ந்து இந்த தோட்டத்தில் குறித்த சில வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவத்துடன் தொடர்பு உடைய சந்தேக நபர்கள் ஆறு பேர் கைது செய்யபட்டு நிதிமன்றில் ஆஜர்படுத்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு மீண்டும் 25.11.2019 இடம் பெறவுள்ளது.
இந் நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் இந்த மக்களின் நாளாந்தம் செயற்பாடுகளுக்கு அச்சுருத்தலாகவும் இடையூராகவும் இருந்து வருவதினால் மக்கள அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கும் புகார் செய்யபட்டு உள்ளது.
குறிப்பாக இந்த பிரதேசத்தில் அடிக்கடி இவ்வாறன சமூக முரண்பாடான விடயங்களும் இன முரண்பாடன விடயங்களும் அன்மை காலம் தொட்டு நடந்து வருகின்றது. இதனை இல்லாது ஒழிக்கவும் பாதுகாப்பை உறுதி செயய்யவும் முன்னைய காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் விஷேட இராணுவ முகாம் ஒன்றினை நிறுவி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தொடர்ந்து வந்த அரசாங்கம் அதனை அகற்றபட்டமையினாலயே இந்த பிரச்சனை தோன்றி உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தும் அதே நேரம் மீண்டும் அந்த இராணுவ முகாமை நிறுவுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் தற்போது ஜனாதிபதியாக உள்ள அதே கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் மூலம் நகல் ஒன்றினையும் அனுப்பி உள்ளனர்
இந்த நகல் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
தெரனியகல பிரதேச செயலகம் பஸ்னாலக கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட நூரி தோட்டத்தில் சுமார் 07 வருடத்தற்கு முன்னர் தோட்ட முகாமையாளர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை சம்வத்தை தொடர்ந்து. சம்பவத்துடன் தொடர்புபட்ட 18 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கபட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தோட்டத்தில் பாதுகாப்பு நிமித்தம் விஷேட இராணுவ முகாம் ஒன்றினை நிறுவி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். தொடர்ந்து வந்த அரசாங்கம் அதனை அகற்றியது. இந் நிலையிலேயே இவ்வாறான பிரச்சனைகள் தோன்றி வருகின்றன.
இந்த காலப்பகுதியில் தோட்டத்திலும் தோட்டத்திறகு அண்டிய கிராம பகுதியிலும். பாதுகாப்பு உறுதிப்படுத்தபட்டதுடன். சட்டவிரோத மதுபான உற்பத்தி¸ சட்டவிரோத மரம் வெட்டுதல்¸ கற்பழிப்புக்கள்¸ கள்ளத்தனமான மணல் விற்பனை¸ போன்ற சட்ட விரோதமான செயற்பாடுகள அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததுடன் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.



இந்நிலையில் தற்போது மீண்டும் மேற்படி சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தும் இப்பிரதேசத்தில் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாகவே மேற்படி தேர்தல் காலத்தில் ஏற்பட்ட பிரச்சனையுமாகும். இதனை தற்போது இந்த நாட்டிற்கு புதிய ஜனாதிபதியாக உள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் கவனத்திற் கொண்டு நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இருந்த பாதுகாப்பை மீண்டும் பெற்று தருமாறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எங்களின் வாழ்வில் ஒளியோற்றுமாறும் மக்கள மேலும் பெற்றுத்தறுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் ஆனார் டக்கிளஸ் – வடக்கில் ஆட்டம் ஆரம்பம்
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோட்டபாய தலைமையில் புதிய அமைச்சர்கள் நியமிக்க பட்டனர் .இவ்வாறு அமைக்க பட்ட 15 பேர்களில் டக்கிளஸ் அமைச்சு பதவியை பெற்றுள்ளார் ,இவர் வடக்கின் வசந்தம் என்ற பாணியில் இனி அபிவிருத்தியை செய்வாராம்- இதன்போது கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்
திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் கடும் மோதல்
திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் போது இருவர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் போது இருவர் பலத்த காயங்களுக்குள்ளானதோடு,சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர்
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் பணி ஆரம்பம்
இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்ய பட்ட நிலையில் தற்போது கோட்டபாய முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பணி மூப்பு அடிப்படையில் ஆசன தெரிவு – கோட்டபாய புதிய உத்தி
இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டபாய தெரிவு செய்ய பட்ட நிலையில் பாராளுமன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .இதில் அவர் தம் பணிமூப்பு அடிப்படையில் ஆசனங்களை தெரிவு செய்ய உள்ளனராம்
பற்றி எரியும் கெமிக்கல் பக்டரீ
இலங்கை -மொரட்டுவ பகுதியில் உள்ள இராசயன தொழில் சாலையில் திடீரென பற்றி பிடித்தா தீயினால் அந்த மாடி கட்டிடம் தீ பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,தீயணைப்பு படையினர் மற்றும் விமான படையினர் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
மக்களின் எதிர்ப்பின் மத்தியில் வெற்றிபெற்றோம் – எனவே மக்களுக்கு நல்லது செய்யுங்கள் அமைச்சர்களுக்கு கோட்டா உத்தரவு
தெரிவுக் குழுவின் அனுமதியின் கீழ் மாத்திரமே அரச நிறுவனங்களுக்கான உயர் அதிகாரிகளை நியமிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மாத்திரமே இடைக்கால அரசாங்கத்திற்கு அமைச்சரவை நியமிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
பாரிய எதிர்ப்பார்ப்புடனே பொதுமக்கள் எம்மை வெற்றியடையச் செய்தனர்.
எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. இந்த சவால்களை வெற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
கடந்த காலப்பகுதியில் நிலவிய அரசியல் கலாசாரம் தொடர்பில் பொதுமக்கள் பாரியளவில் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
புதிய அரசாங்கம் அந்த கலாசாரத்தில் இருந்து வௌியே வந்து பொதுமக்கள் எதிர்ப்பார்த்த புதிய சகாப்தத்திற்கு செல்ல வேண்டும்.
அதற்காக, நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொதுமக்களிடம் உறுதியளித்த விடயங்களை செயற்படுத்த இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உதவியை எதிர்ப்பார்க்கிறேன்.
நாம் அமைச்சரவையை 15 ஆக மட்டுப்படுத்தியுள்ளோம். அந்த அமைச்சர்களின் கீழ் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அமெரிக்கா – வெள்ளை மாளிகைக்குள் புகுந்த மர்ம கார் – போலீசார் குவிப்பு
அமெரிக்கா – வெள்ளை மாளிகைக்குள் புகுந்த மர்ம கார் – போலீசார் குவிப்பு
அமெரிக்கா அவெள்ளை மலைக்கு அருகில் பென்ஸ் ரக கார் ஒன்று புக முனைந்துள்ளது ,சோதனையில் நின்ற போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்து வருவதுடன் குறித்த சாரதி கைது செய்ய பட்டுளளார் ,இவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை ,இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது
பிரான்ஸ் -கப்பலுக்குள் லொறிக்குள் பதுங்கி வந்த 16 பேர் கைது
கப்பலுக்குள் லொறிக்குள் பதுங்கி வந்த 16 பேர் கைது
பிரான்சில் இருந்து லொறி ஒன்றுக்குள் மறைத்து வந்த 16 குடியேற்ற வாசிகள் கைதுசெய்ய பட்டுள்ளனர் ,ferry from France bound for Ireland.லொறிக்குள் இருந்தே இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் ,மூன்று நாட்கள் உணவு ஏதுமின்றி சோர்ந்து போனநிலையில் இவர்கள் கண்டு பிடிக்க பட்டனர்
,லாரியின் பின்வழியாக இவர்கள் இருப்பதை அவதானித்த சாரதி கப்பல் ஊழியர்களுக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து கைது செய்ய பட்டனர் ,
எனினும் உடன் விரைந்து சூடான காபி மற்றும் உணவுகளை என்பன வழங்க பட்டு மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்ட்தாக கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி
ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி
அவரது ட்விட்டர் பதிவு:
“ஆம்! அதிசயம் நிகழும். ‘தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும்”.
இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.
அதற்குக் கீழே ரஜினி ரசிகர்கள் அதுதான் சீமானை வெற்றுப் பிம்பம் என்று விமர்சித்துவிட்டு எதற்காக அவரைப் பற்றி பேச வேண்டும். பயமா? எனக் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.
ஆம்! அதிசயம் நிகழும்.
— சீமான் (@SeemanOfficial) November 21, 2019
'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து,அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும், நடந்தே தீரும்.
நான் அறிவிக்காத – போலியான செய்திகள் பரப்ப படுகின்றது – கோத்தா கூவல்
என்னால் அறிவிக்கப்பட்ட “அரச முடிவுகள்” என, சமூக ஊடகங்களில் பல தவறான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. எனது எந்தவொரு முடிவு அறிவிப்பும் – ஜனாதிபதி செயலகத்தின் முத்திரை பொறிக்கப்பட்டு, ஜனாதிபதி ஊடகப் பிரினாலோ அல்லது எனது அதிகாரபூர்வ சமூக ஊடக தளங்களின் ஊடாகவோ மட்டுமே அறிவிக்கப்படும். click here

மாவீரர் நாளுக்கு இதுவரை இடையூறு இல்லை – சிறிதரன்
மாவீரர் நாளுக்கு இதுவரை இடையூறு இல்லை – சிறிதரன்
தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்விற்கு தம்மை அர்ப்பணித்த புனித தெய்வங்களாம் மாவீரர் நாளினை இம்முறை மக்கள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் ,மாவீரர் மாயணங்கள் துப்பரவு பணிகள் என்பன இடம்பெற்று வருகின்றன
,.இதுவரை அந்த மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்விற்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படவில்லை ,அவ்வாறு ஏற்படின் அவ்வேளை அது தொடர்பாக பரிசீலனைக்கு உட்படுத்துவோம் என மக்கள் நாயகன் சிறிதரன் முழங்கியுள்ளார்
தமிழ் தீவிரவாதம், – சுமந்திரன்- போட்டு தாக்கு video
வடக்கு ஆளுநராக தன்னை அமர்த்தும் மாறு கருணா அடம் பிடிப்பு
வடக்கு ஆளுநராக தன்னை அமர்த்தும் மாறு கருணா அடம் பிடிப்பு
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதிக்கு தன்னை அஙளுநராகி நியமிக்கும் படி கருணா கோத்தபாயவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .பலத்த பரபரப்புக்கு இடையில் ஆறு ஆளுநர்கள் நியமிக்க பட்டுள்ள நிலையில் கருணாவுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்க படலம் என முக்கிய நபர்கள் பேசிக்கொள்கின்றனர்









