Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வெள்ளை வான் சாட்சிகள் சிறையில்
இலங்கையில் –வெள்ளை வான் சாட்சிகள் – சிறையில் அடைப்பு
வெள்ளை வான்-இலங்கையில் கோத்தபாயாவின் ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் நேரடி
சாட்சியாக விளங்கிய இருவர் கடந்த தேர்தலின் பொழுது றஜிதவுடன் இணைந்து சாட்சிகளை கூறினர் .
மேற்படி தகவல் தொடர்பில் கைதான இருவரும் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .
இந்த இருவரையும் ஊடக சந்திப்புக்கு அழைத்து பேசிய முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதவையும் கைது செய்யும் தீவிர நகர்வில் ஆளும் கோட்டபாய அரசு ஈடுபட்டுள்ளது .
வெள்ளை வான் சட்சிகள் சிறையில் அடைக்க பட்ட நிலையில் றஜிதவும் .சிறையில் அடைக்கும் தீவிரம் வலுப்பெற்றுள்ளது .
இலங்கையில் வெள்ளை வான் சாட்சிகளாக யாராவது மாறினால் நிலைமை இது தான் என்பதை ஆளும் பவுத்த இனவாத கோத்தபாய அரசு அறிவிக்கிறது .
வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் தகவல்கள் தெரியவந்தால் இலங்கையில் இருந்து எவரும் அதனை வெளிப்படையாக கூற முடியாத நெருக்கடி இதனால் ஏற்படுகிறது .
இது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்க படும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜிதவை தேடி அதிகாரிகள்
முன்னாள் அமைச்சர் –ரஜிதவை தேடி மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள்
இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதாவை தேடி கைது செய்யும் நோக்கில் குற்ற புலனாய்வு துறையினர் நேற்று அவரது களுத்துறை ,மற்றும் கொழும்பு வீடுகளுக்கு சென்றனர் .
அவ்வேளை அவர் அங்கு இருக்கவில்லை ,இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சுகயீனம் என சென்று படுத்துள்ளார் ,
அங்கு சென்ற அவரையும் குற்ற தடுப்பு பிரிவினர் விடாது துரத்தி சென்று விசாரிக்க சென்றுள்ளனர் .
சிலவேளை இங்கு வைத்தே அவர் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
ரஜிதவை தேடி மருத்துவமனைக்கு சென்ற செய்திகள் காட்டு தீயாகபரவி வருவதால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
ஆளும் அரசின் அரசியல் பழிவாங்களின் தொடர்ச்சியே .ரஜிதவை தேடி அலையும் படலம் என தெரிவிக்கப்படுகிறது

பிள்ளையை காட்டில் வீசிய தாய்
நள்ளிரவில் – பிள்ளையை காட்டில் வீசிய தாய் ..!
தான் பெற்ற பிள்ளையை
தனது வீட்டின் அருகில் உள்ள காட்டில் வீசி தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 36 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்த கொடிய செயலை புரிந்துள்ளார் .
சிசுவின் அழுகுரல் காட்டுக்குள் இருந்து கேட்பதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீசார் சிசுவை மீட்டனர் .
பெற்ற பிள்ளையை காட்டில் வீசிய தாய் கைது செய்யப்பட்டுளளார் .
தாயும் சிசுவும் தற்போது குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இதுவரை பிள்ளையை காட்டில் ஏன் வீசினார் என தெரியவரவில்லை .
29 பேர் சிறையில் அடைப்பு
இலங்கையில் –29 பேர் சிறையில் அடைப்பு .
இலங்கையில் புத்தர் சிலைகளை அடித்து நொறுக்கினர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்ட 29 பேர் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
இலங்கை பவுத்த தேசமாக ஆளும் அரசு அறிவித்துள்ள நிலையில் பெரும் பான்மை சிங்களவர்களை குஷி படுத்த இந்த 29 பேர் சிறையில் அடைக்க பட இழி செயலில் ஆளும் அரசின் நிழல்கள் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .
கைதான 29 பேர் தொடர் விசாரணைகள் இன்றி சிறையில் அடைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
28 000 இரட்டையர்கள் இலங்கையில்-சாதனை
28, 000 இரட்டையர்கள் இலங்கையில் சாதனை
இலங்கையில் – பிறந்த இரட்டையர்களை கணக்கெடுத்து அவர்களை போட்டியில் பங்கெடுக்க முன்னெடுக்க பட்ட நிகழ்வில்
இதுவரை 24 மாவட்டங்களில் இணைத்து சுமார் 28, 000 இரட்டையர்கள் பேர் கலந்து . சாதனையில் இடம்பிடிக்க உள்ளனராம் .
உலகில் அதிகம் கூடிய இரட்டையர்கள் இவர்கள் என்ற பெருமையை இலங்கை தட்டி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது .28, 000 இரட்டையர்கள் இலங்கையில் உள்ளனரா .?
இவர்களை அலரி மாளிகைக்கு அழைத்த மகிந்தா விருந்தளித்து மகிழ்வித்துள்ளாராம் ,
2020 அம ஆண்டு 28, 000 இரட்டையர்கள் இணைந்து சாதனையை நிலை நாட்டை உள்ளனராம்

விபத்தில் சிக்கிய வான் – 17 பேர் காயம்
இலங்கையில் -விபத்தில் சிக்கிய வான் – 17 பேர் காயம்
இலங்கை – அங்குருவதொட்ட பகுதியில் வான் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்தா சுமார் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
விபத்தில் சிக்கிய வான் பலத்த சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
விபத்தில் சிக்கிய வான் மீட்கப்பட்டு பொலிஸார் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளதுடன் ,தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
நாடு தழுவிய ரீதியில் இடம் பெரும் விபத்துக்களில் அதிகமானவை சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாகவே என தெரிவிக்க படுகிறது
விபத்தில் சிக்கி 3 பேர் பலி
இலங்கையில் –விபத்தில் சிக்கி 3 பேர் பலி – 2 பேர் காயம்
இலங்கை – இரத்தினபுரி லொறி மற்றும் அரச பேரூந்து ஒன்று நேரத்து மோதி விபத்தில் சிக்கியதில் ,அதில் பயணித்த சுமார் மூன்று பேர் பலியாகினர் .மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
விபத்தில் சிக்கி இறந்த நபர்கள் உயிர் பலிக்கு சாரதிகள் அலட்சிய போக்கே காரணம் என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
விபத்தில் சிக்கி நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமையும் .
இந்த விபத்தில் சிக்கி பலியாகும் உயிர் பலியை தடுத்து நிறுத்த பொலிசார் திரணி அற்று திகைத்து நிற்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழ் ஒன்றாக வேண்டும் -சித்தார்த்தன்
இலங்கையில் –தமிழ் ஒன்றாக வேண்டும் என சித்தார்த்தன் தெரிவிப்பு .
தமிழ் – மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்து.
இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆகையினால் இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழ் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியமென.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கைது பீதி – ரஜித ஒழிந்தார்
முன்னாள் அமைச்சர் – ரஜித வைத்திய சாலையில் அனுமதி .கைது எதிரொலியாம் .
கைது பீதி எதிரொலியாக முன்னாள் அமைச்சர் ரஜிதவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளார் .
–இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் ,தற்போது முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித சிறை செல்லும் நிலையில் சிக்கியுள்ளார் .
தொடர்ந்து அவரது இரு இல்லங்கள் மீதும் நடத்த பட்ட திடீர் தேடுதலை அடுத்து தற்பொழுது அவர் சுகஜீனம் என கோரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
கைது பீதி எதிரொலியே இந்த நிலைக்கு ரஜித சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தன் மீது சேறு பூசியவர்களை சிறையில் அடைக்கும் தீவிர நகர்வில் கோட்டபாய ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது
தீயில் எரிந்த வீடு – தவிக்கும் குடும்பம் – photo
நுவரெலியா பகுதியில் –தீயில் எரிந்த வீடு – தவிக்கும் குடும்பம் .கண்ணீர் கதை
வெதமுல்ல தோட்டம் கெமினதன் தோட்டத்தில் கடந்த 15.12.2019 ஏற்பட்ட தீயில் எரிந்த வீடு அழிந்துள்ளது ;
தங்களது வீட்டையும் வீட்டு பொருட்களையும் அணைத்து ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றது 02 பிள்ளைகளுடன் கூடிய ஒரு இளம் குடும்பம்
இந்த குடுபம் உதவிகளுக்காக நுவரெலியா பிரதேசத்தற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த வேலையில் நுவரெலியாவில் சந்திக்கும்; வாய்பு கிடைத்தது.
இவர்கள் இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு இருவரும் ஏதோ கவலையுடன் செல்வதை கண்டேன்.
உடனே என்ன பிரச்சனை ஏன் கவலையாய் செல்கின்றீர்கள் என்று வினாவிய போது. தாய் கண்ணீர் மழ்க தீயில் எரிந்த வீடு நிலமையை கூறினார்.
எங்களது வீடு கடந்த 15 ஆம் திகதி தீ பித்து தீக்கு இறையாகி விட்டது. நான் வீட்டை விட்டு வெளியில் சென்று விடு திரும்பும் போது வீடு தீ பிடித்து எரிந்துக் கொண்டு இருந்து.
அயலவர்களின் உதவியுடன் தீயில் எரிந்த வீடு கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தலும் வீட்டு பொருட்கள் பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள்
ஜனவரி மாதம் பாடசாலைக்கு செல்ல வாங்கிய அனைத்து உபகரங்களும் சில ஆவனங்களும் எங்கள் நாள்வரின் உடைகளும் சாப்பாட்டு பொருட்களும் முற்றாக எரிந்து விட்டது.
நான் தோட்டத்தில் தொழில் வேலை செய்கின்றேன் கணவர் கொழும்பில் கூலி வேலை செய்கின்றார்.
தோட்டத்தில் வீடு தரததினால் சொந்தமாக சிறுக சேர்த்த பணத்தில் இருந்து தற்காலிகமாக கட்டிய வீடே இது.
தற்போது வீடும் எரிந்து விட்டது. அயலவர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக தங்கி வருகின்றோம். எங்களுக்கு வீடும் இல்லை வீட்டு பொருட்களும் இல்லை சாப்பிட சாப்பாடு கூட இல்லை.
கணவர் ஏ.வினாயகமூர்த்தி மனைவி கே.பொண்மலர் மகன்மார்கள் வி.திலக்சன் (12) இவர் இறம்பொடை இந்து கல்லூரியில் தரம் 08 வி.விதுசன் (07) ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் தரம் 08 கல்வி பயின்று வருகின்றனர்.
மேற்படி குறித்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு தேவையான எந்தவிதமான பொருட்கள் உடைகள் உபகரணங்கள் எதுவும் இல்லை.
இந்த குடுபம் தங்களின் வாழ்வை கொண்டு செல்ல நல்லுல்லம் படைத்தவர்களிடம் இருந்து உதவிகளையும் தங்களுக்கான ஒரு பொருத்தமான வீட்டையும் எதிர்பார்க்கின்றனர்.
சம்பந்தபட்டவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த குடும்பத்திற்கு உதவிட விரும்புவார்கள் எம்மை தொடர்பு கொள்ளவும் .
கண்ணீரில் தவிக்கும் இந்த வறுமை குடும்பத்திற்கு தமிழர்களே உதவி புரியுங்கள் ,நீங்கள் வழங்கும் சிறு உதவி இந்த குடும்பத்தை வாழ வைக்கும் 0094 777375053
மேல் உள்ள தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு குறித்த குடும்பத்திற்கு உதவிகளை புரியுங்கள் ,மேலதிக தொடர்புகளிற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
நாம் தமிழராய் நாம் இணைவோம் ,உயிர்காப்போம் ,ஒன்றிணைந்து கரம் கொடுப்போம் .ஒன்றுபட்டு எழுவாய் தமிழா .கண்ணீர் துடைக்க கரங்கள் தருவாய் தமிழா .




மனோ கணேசன் -கோட்டாபயவுக்கு கடிதம்
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தமுகூ தலைவர் மனோ கணேசன் கடிதம்.
எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி.
இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இத்தகைய முடிவு, இலங்கையின் அரசியலமைப்பில் இணை ஆட்சி மொழியாகவும், இணை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியை புறந்தள்ளி
இலங்கையை மொழி இனரீதியாக பிரிக்கும் ஒரு பிரிவினைவாத செயல் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
உங்கள் பதவியேற்பு நிகழ்வின் ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக செயற்படுவேன்’ என்று நீங்கள் நாட்டுக்கு தந்த உங்கள் உறுதிமொழியின் அடிப்படையில்
தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை ரத்து செய்ய துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்
என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தமது டுவீடர், முகநூல் தளங்களிலும் பதிவுகளை மேற்கொண்டுள்ள மனோ கணேசன் எம்பி,
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ள தமது கடிதத்தில் மேலும் கூறியுள்ளாதாவது,
மூன்று மொழிகளையும் பேசி, எழுதி, தேசிய மொழிகள் மூலம் தேசிய ஒருமைபாட்டை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட கட்சி தலைவர் என்ற முறையிலும்,
67 வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதை உறுதி செய்ய பாடுபட்ட ஒருவன் என்ற முறையிலும்,
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரங்களை கையாண்ட முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும் நான் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இந்தியாவின் பெருமகன் ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் சீடனாக, கொல்கத்தா சாந்தி நிகேதனில் பயின்ற, நமது நாட்டு தேசிய கவிஞர் அமரகோன் அவ்வேளையில் எழுதி,
இசையமைத்த, அன்றைய தேசிய பாடல்தான், பின்னாளில் நமது தேசிய கீதமாக அங்கீகாரம் பெற்றது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
இந்த தேசிய கீதத்தை இலங்கையின் தமிழ் அறிஞர் நமசிவாயம் அவர்கள், வரிக்குவரி அப்படியே தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
ஒரே அர்த்தத்தில், ஒரே இசை வடிவில், நமது தாய் நாட்டை, “நமோ நமோ மாதா” என சிங்களத்திலும், “
நமோ நமோ தாயே” என தமிழிலும் பாடும் தேசிய கீதம் எமக்கு கிடைத்துள்ளது எமது அதிஷ்டமாகும் என நான் நினைக்கிறேன்.
இதை பிரதானமாக கொண்டு மொழி உரிமைகளை பயன்படுத்தி நாம் இந்நாட்டில் வாழும் இரண்டு மொழிகளை பேசும் இனத்தவர்களையும்
இலங்கையர்களாக ஒன்று சேர்ப்போம் என் நான் உங்களுக்கு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன்.
அதிகார பகிர்வை வலியுறுத்தும் அரசியலமைப்பின் 13ம் திருத்தம் தொடர்பாக உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.
எனினும் மொழியுரிமை என்பது 13ம் திருத்தம் மூலம் எமது அரசியலமைப்பில் உட்புகுத்தப்படவில்லை.
16ம் திருத்தம் மூலமாக மொழியுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பின் 4ம் அத்தியாயத்தில், இலங்கையின் இணை ஆட்சி மொழிகளாகவும்,
தேசிய மொழிகளாகவும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அதேவேளை ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
“ஒரே நாடு, மூன்று மொழிகள்” என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத,
பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என உங்களை வேண்டுகிறேன்.
உங்கள் அரசில் இருக்கின்ற சிலர், “ஒரே மொழி” என்ற கொள்கையை முன்னெடுக்க முயல்கின்றனர்.
இத்தகையை கொள்கைதான் 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு அடுத்து வந்த பல்லாண்டுகளாக இந்த நாட்டை படுகுழியில் தள்ளியது
. உண்மையில் ஒரே மொழி என்று சொல்லும் போது ஒரே நாடு என்ற கொள்கைதான் பலவீனமாகிறது.
இவர்கள், உலகில் எங்கேயும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் கிடையாது என்று கூறுகின்றனர். இது பிழையான தகவல். உலகில் பல நாடுகளில் தேசிய கீதம்,
அவ்வந்த நாடுகளில் பேசப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பாடப்படுகின்றன.
சில நாடுகளில் ஒரே கீதத்தில் இரண்டு மொழி வரிகள் இடம்பெறுகின்றன.
அதேவேளை பதினைந்து தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவின் தேசிய கீதம் இந்தி மொழியில் இருக்கின்றது என்றும் இதே சிலர் கூறுகின்றனர்.
வங்காள மொழி இந்தியாவின் சிறுபான்மையினரின் மொழியாகும்.
அதற்காக நாம் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என நாம் கூறவில்லை. தமிழிலும் பாடுவோம் என்றுதான் கூறுகிறோம்.
சிங்கள, தமிழ் நாடுகளை தவிர்த்து, இலங்கை நாட்டை கட்டி எழுப்புங்கள். தமிழிலும் இலங்கை தேசிய கீதத்தை பாடுவது தேசாபிமான நடவடிக்கை ஆகும்.
சில போலி தேசிய வாதிகள், மொழி இனங்களை ஒன்று சேர்க்கும் இந்த தேசாபிமான நடவடிக்கையை நிறுத்தி விட முயல்கிறார்கள்.
அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என உங்களை நான் கோருகிறேன்.என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார் .
மின்சார கார்கள் 7000இலங்கையில் இயக்கம்
இலங்கையில் -மின்சார கார்கள் 7000இலங்கையில் இயக்கம்
மின்சார கார்கள் 7000 இலங்கையில் தற்போது இயக்கத்தில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,மின்சார கார்கள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்குடன் உலகம் தழுவிய நிலையி உருவாக்க பட்டுள்ளது .
இந்த காரே தற்போது இவ்வாறு சேவைக்கு விடப்பட்டுள்ளதாம் .இலங்கையில் மின்சார கார்கள் வருகை பெரும் மகிழ்வை தோற்றுவித்துள்ளது .
ஐரோப்பாவில் 2040 ஆண்டிற்கு பின்னர் எரிபொருள் கார்கள் பாவனை முற்றாக தடை செய்ய படுகிறது .மின்சார கார்கள் பாவனைக்கு வருகிறது
அதுபோலவே இலங்கையிலும் மேற்கொண்டால் மிக சிறப்பு என மக்கள் கருதுகின்றனர்
மின்சார கார்கள் இயக்கம் மனித உயிர்களுக்கு ஆபத்து அல்லாத ஒன்று என தெரிவிக்க படுகிறது
முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித கைது..?
ராஜித கைது – வீட்டுக்குள் நுழைந்த உளவுத்துறை முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித வை கைது செய்துள்ளனரா.? .
கொழும்பு மற்றும் களுத்துறை பகுதியில் இருந்த ரஜித வீட்டுக்குள் நுழைந்த குற்ற புலனாய்வு துறையினர் அவரை கைது செய்து சென்றுள்ளனராம் .
என தகவல்கள் வெளியாகவும் பொழுதும் இதுவரை அவரை கைது செய்யமுடியவில்லை என வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் ரஜித நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை அடுத்தே இவரது கைது இடம்பெற்றுள்ளது ,
இது திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்க படுகிறது .இவரை போல மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
திருமலையில் குப்பை பொறுக்கிய இந்திய கடல்படை தளபதி
திருமலையில் குப்பை பொறுக்கிய இந்திய கடல்படை தளபதி
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய கடல்படை தளபதி தனது அணிகளுடன் திருமலையில் உள்ள கடல்பகுதியில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார் .
இராணுவ கடற்படை அதிகாரியாக உள்ள போதும் அதனை தாண்டி இவர் இந்த சுத்தம் புரியும் பணியில் ஈடுபட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்த வண்ணம் உள்ளது .
இந்தியா விரும்பும் திருமலையில் குப்பை பொறுக்கிய இந்திய தளபதி வீர சாதனை தான் போலும்


மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட பாதை திறப்பு
நுவரெலியா மாவட்டம் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிக் தோட்டத்திற்கு 01 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட கொங்ரீட் பாதை .
பாவனையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக.
மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிஸ்ணன் அவர்களின் தலைமையில் மில்லியன் ரூபா நடைபெற்றது.
இந் நிகழ்வில் தோட்ட பொது மக்கள் உட்பட கட்சியின் உயர் அங்கத்தினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மில்லியன் ரூபா செலவு மக்களை குசியில் அமர்த்தியுள்ளது .


A/L பரிட்ச்சை விபரம் நாளை வெளியீடு
A/L பரிட்ச்சை விபரம் நாளை வெளியீடு
இலங்கையில் நடைபெற்று முடிந்த A/L பரிட்ச்சை சோதனை முடிவுகள் நாளைய தினம் வெளியிட படும் என அறிவிக்க பட்டுள்ளது .
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காத்துள்ள மாணவர்களுக்கும் இந்த A/L பரிட்ச்சை புள்ளி விபரம் பெரும் அதிர்ச்சியாகவும் ,
சிலருக்கு இனிப்பாகவும் அமைய போகிறது .
மேலும் பல தற்கொலைகளும் நடக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது
மூன்று முக்கியஸ்தர்களை கைது செய்ய நடவடிகை
மூன்று முக்கியஸ்தர்களை கைது செய்ய தீவிர நடவடிகை இலங்கையில் ஆளும் இனவாத பவுத்த வெறிபிடித்த கோட்டபாய அரசு ஈடுபட்டுள்ளது ,அரசியல் பாழிவாங்கும் நகர்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது ,
கடந்த ஆட்சி கவிழ்ப்பு ,மற்றும் அதற்கு துணை போன மூன்று முக்கியஸ்தர்களை கைது செய்யும் தீவிர நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
அந்த வகையில் தற்பொழுது மூன்று முக்கியத்ர்களான மங்கள சமரவீர .பொன் சேகா ,ராஜித ,உள்ளிட்ட மேலும் மூவரை கைது செய்யும் நகர்வுகள் முடுக்கிவிட பட்டுள்ளனவாம் .
மூன்று முக்கியதர்கள் கைது செய்யப்பட்டதால் சர்வதேசத்தின் எதிரொலிகள் வேறாக இருக்கும் எனவும் ஒரு அணி தெரிவிக்கிறது ,ஆனால் அவற்றை எல்லாம் கோட்டா அரசு கண்டு கொள்வதாக இல்லை .
இவரது வெற்றியை மூன்று வல்லாதிக்க நாடுகள் தடுத்த பொழுதும் இவர்கள் சிங்கள மக்கள் வாக்கின் ஊடாக வெற்றியை பெற்றுள்ளார் ,இதற்கு கூட்டமைப்பும் ஆதரவு உள்ளக ரீதியாக உண்டு .
என அந்த புற வடடரங்கள் அடித்து கூறுகின்றன ,கோட்ட பாயாவுடன் பேச்சில் சுமந்திரன் ஈடுபட்ட பொழுது இவை தெரிவிக்க பட்டதாம்
தமிழர்களுக்கு வெள்ள அழிவு உதவி இல்லை
தமிழர்களுக்கு வெள்ள அழிவு உதவி இல்லை
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தமிழர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ,
இரணைமடு குளம் திறக்க பட்ட நிலையில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ,இதனால் சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன .
இதுவரை பாதிக்க பட்ட தமிழர்களுக்கு ,மக்களுக்குரிய உதவிகள் கிடைக்கவிலை என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றன .
மக்களின் வாழ்வாதாரத்தின் உயர்த்துவோம் என கூவி வரும் கோட்டா அரசு தமிழர்களுக்கு தொடர்ந்து புறம் தள்ளி வருகிறது .
எனக்கு வாக்கு அளிக்க முடியாது உள்ளவர்களுக்கு ஏன் நாங்கள் உதவி செய்திட வேண்டும் என்றே கோட்டா இனவாத அரசு கேள்விகளை கேட்கிறதாம் என மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்
சிவாஜிலிங்கம் நான்காம் மாடிக்கு அழைப்பு – கோட்டா அரசு கெடுபிடி
சிவாஜிலிங்கம் நான்காம் மாடிக்கு அழைப்பு – கோட்டா அரசு கெடுபிடி
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கோட்டபாய ,மகிந்த அதிகாரத்தில் அதே தமிழர்கள் அழிக்க பட்ட நாளினை நினைவு கூர்ந்தமைக்காக சிவாஜிலிங்கம் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்க பட்டுளளார் .
சிவாஜிலிங்கம் ,கோட்டா கும்பலுக்கு எதிராக ஜனாதி பதி தேர்தலில் போட்டியிட்டவர் ,
கோட்டா அரசு அதிகாரத்த்தில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை அரசியல் பழிவாங்கல்கள் தீவிரம் பெற்று வருகின்றன ,
அதன் தொடர்ச்சியே சம்பிக்க ,ராஜித ,தொடர் சிவாஜிலிங்கம் விசாரணைகள் அமைய பெற்றுள்ளன
மானிப்பாயில் தெரு ரவுடிகள் அட்டகாசம்
மானிப்பாயில் தெரு ரவுடிகள் அட்டகாசம்
மாணிபப்பாயில் கட்டாக்காலி தெரு ரவுடிகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளனர் .
மானிப்பாயில் உள்ள மூன்று வீடுகளுக்குள் புகுந்த மேற்படி கும்பல் அந்த வீட்டு பொருட்களை அடித்து சேதமாக்கியுள்ளன ,
மேலும் பேனா முனை காரர் ஒருவரது வீடும் சேதமாக்க பட்டுள்ளது .
யாழில் வாள்வெட்டு குழுக்களை அடக்குவோம் என கோட்டா அரசு அறிவித்து சில தினங்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன .
மானிப்பாயில் வீடுகளை உடைத்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில்
மானிப்பாய் போலீசார் ஈடுபட்டுள்ளனராம்







