Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தியாகி தீலீபனின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்
தியாகி தீலீபனின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்
தியாகி திலீபன் நினைவு நிகழ்வு_2020 – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்
தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர்
மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (சிட்னி/ குயின்ஸ்லாந்து/ பேர்த் இல்) இடம்பெறவுள்ளது.
ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக
வழியில் போராடினான். தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.
பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தற்போதைய கொறானாவைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, அரச விதிமுறைகள், சமூக இடைவெளியை பேணியவாறு இவ்நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்.
நிகழ்வுகளில் நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் ஏனைய மாநிலத்தவர்கள் இணையவழி ஊடாகவும் இணைந்துகொள்ளமுடியும்.
ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து தமிழின விடுதலைக்காக பன்னிரு நாட்கள் நீராகாரம் இன்றி தன்னுடலை வருத்தி,
அகிம்சையின் உச்சத்தை தொட்டு உயிர்நீத்த
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டு நினைவுகளில்….
Sydney
இடம்: Yaarl Function Hall, Pendle Hill, NSW
காலம்: 26/09/2019 சனிக்கிழமை மாலை 5 மணி.
தொடர்பு: 0401 842 780 or 0424 757 814
Queensland
இடம்: St. Paul’s Drive Woodbridge Qld 4114
காலம்: 26/09/2019 சனிக்கிழமை மாலை 5 மணி.
தொடர்பு: 0415 159 283 or 0469 888 511
Perth
பன்னிரு நாட்கள் எமக்காக தன்னை பசித்தீயில் உருக்கி அணைந்த தியாகதீபத்தின் நினைவுநாள் நிகழ்வு எதிர்வரும் 26.09.2020
சனிக்கிழமை மாலை 6.30 மணிமுதல் 8.00 மணிவரை வணக்கநிகழ்வு மேற்கு அவுஸ்திரேலியாவில் 6, Third Avenue,
Rosmoyne, WA 6148 என்ற முகவரியிலுள்ள “இலங்கைத் தமிழ் சங்கத்தில்” ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Melbourne & Other States
விக்ரோரிய மாநில தற்போதைய கொறானாவைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, ஒஸ்ரேலியாவின் ஏனைய
மாநிலங்களில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் இணையவழி ஊடாக இணைந்துகொள்வோம்.
தாத்தாவான மகிந்தா – பிள்ளை பெற்ற நாமல் – படம் உள்ளே
தாத்தாவான மகிந்தா – பிள்ளை பெற்ற நாமல் – படம் உள்ளே
இலங்கையில் இரத்த காட்டேரிகளும் ,தமிழ் இன படு கொலையாளிகளாக
விளங்கும் மகிந்தா குடும்பம் தற்போது இலங்கையை மீள்வும் ஆட்சி புரிந்து வருகிறது
இவ்வேளை மகிந்தாவின் மூத்த புதல்வன் நாமல் ராஜ பக்கசாவிற்கு
பிள்ளை பிறந்துள்ளது ,தனது பேரனை பார்த்த மகிழ்வில் மகிந்த பூரிப்படைந்துள்ளார்
அந்த காட்சிகள் கீழே


போத்தலை உடைத்து உட்கொண்ட நபர் – வவுனியாவில் நடந்த பயங்கரம்
போத்தலை உடைத்து உட்கொண்ட நபர் – வவுனியாவில் நடந்த பயங்கரம்
பொதுமக்கள் மீட்ட சம்பவம் வவுனியாவில் நேற்று (17) இடம்பெற்றது.
வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் அமர்ந்திருந்த
நபர் ஒருவர், கண்ணாடி போத்தலை உடைத்து அதனை வாயில்போட்டு உணவாக உட்கொண்டுள்ளார்.
இதனால் காயமடைந்து வாயிலிருந்து குருதி வெளியேறிய நிலையிலும் குறித்த நபர் அதனை உட்கொள்வதை நிறுத்தவில்லை.
இதனை அவதானித்த சிலர் வைத்தியசாலையில் கடமையில் இருந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவத்தை அவதானித்த பொலிஸார் குறித்த நபரை அவ்விடத்திலிருந்து அகற்றினர்.
அனைவரும் வீடு வாங்க மலிந்த வீதத்தில் கடன் – மகிந்தா அதிரடி உத்தரவு
அனைவரும் வீடு வாங்க மலிந்த வீதத்தில் கடன் – மகிந்தா அதிரடி உத்தரவு
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் நாட்டில் வாழும் மக்கள்
அனைவரும் வீடுகளை வாங்கி கொள்ளும் முகமாக அனைவரும் இலகுவான
முறையில் வாங்கி கடனை பெற்று கொள்ளும் வகையில் 6.5 விகித வட்டி வாழுங்க உத்தரவிட பட்டுள்ளது
வளர்முக நாடுகளை போல இலங்கையும் வளர்ச்சி பெற இந்த அதிரடி
நகர்வுகளை தன்னாட்சி அரசு வழங்கி வருகிறது ,இது மக்களுக்கு நற்செய்தியாகி மலர்ந்துள்ளது குறிப்பிட தக்கது
புலிகளை அழிக்க உதவிய பாகிஸ்தானுக்கு – இலங்கை பாராட்டு
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மத் ஸப்தார் கான் பாதுகாப்புச் செயலாளர் மேஜர்
ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை (செப்டம்பர்.15) சந்தித்துள்ளார.
இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கோள் காட்டிய கேர்ணல் ஸப்தார்,
கடினமான காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கையின் உதவிகளை பாராட்டினார்.
இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் அதிகாரிகள், பாக்கிஸ்தானுக்கு
ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தான் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளைஇ பாதுகாப்புச் செயலாளர், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திய பாகிஸ்தான் அரசுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்திற்கு பாகிஸ்தான் இராணுவம் அளித்த உதவிகளையும் மேஜர் ஜெனரல் குணரத்ன இதன்போது நினைவு கூர்ந்தார்.
மேலும்இ பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்
ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.
அத்துடன் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
வீதிகள் மேல் பறக்கும் டிரோன் கமராக்கள் – போலீசார் வேட்டை
வீதிகள் மேல் பறக்கும் டிரோன் கமராக்கள் – போலீசார் வேட்டை
கொழும்பு புறநகர் பகுதிகளில் 15.09.2020 அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை
கண்காணிக்க பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம் விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ராஜகிரியஇ நுகேகொடை, பொரல்லை, காலி வீதி ஆகிய பிரதான
வீதிகளில் விமானப் படையினரின் ட்ரோன் கருவிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
அமுல்படுத்தப்பட உள்ள வீதி ஒழுங்கை திட்டம் தொடர்பாக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் மூன்று நாட்களை கொண்ட பரீட்சார்த்த நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது..
பஸ் முன்னுரிமை பாதைகளை ஒதுக்குவதன் மூலம் கொழும்பு நகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க
முன்னதாகவே தொடங்கப்படவிருந்த இந்த திட்டம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிறிது காலம்
இடைநிறுத்தப்பட்டிருந்தாகவும் அந்தத் திட்டமே மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்குள் வினைத்திறன் மிக்க போக்குவரத்து முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக
பொலிஸாருடன் இணைந்து ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் பஸ் முன்னுரிமை ஒழுங்கையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து ஒழுங்கை விதிகளை மீறுவோருக்கு எதிராக நாளை
முதல் தண்டப் பணம் அறவிடப்படும் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து 154 இந்திய பிரஜைகள் ,இந்தியாவுக்கு பயணம்
இலங்கையிலிருந்து 154 இந்திய பிரஜைகள் ,இந்தியாவுக்கு பயணம்
இலங்கையில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று உட்பட 154 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1284) மூலமாக 2020
செப்டெம்பர் 17ஆம் திகதி கொழும்பிலிருந்து பெங்களூரு மற்றும் டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு
அனுப்புவதற்கான, இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏர் இந்தியா, தனியார் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள், வாடகை விமானங்கள், கப்பல் சேவைகள் மற்றும் தரை மார்க்கமான சேவைகள் உட்பட பல்வேறு வழிகளூடான
உலகளாவிய பயணச் சேவைகளின் காரணமாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 1.3 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள்
இதுவரையில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்ட நடவடிக்கைகள் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்தநாடு
நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு மேற்கொள்ளப்பட்ட கப்பற் சேவை, எட்டு விசேட ஏர் இந்திய விமான
சேவைகள், ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 2000 க்கும்
அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக
நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள்
தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா
திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு வெளிநாடுகளில்
சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும்
இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர்
ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளவும்.
பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்
பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்
மட்டக்களப்பில் தாய் ஒருவர் தான் பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம் நிகழ்ந்துள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் ;போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது .
தனது இரண்டு வயதுடைய மூத்த பிள்ளை தாய் பால் குடித்து வந்ததாகவும் ,
இந்த சிசு பிறந்த பின்னர் அது தாய்ப்பால் இன்றி தன்னை முறைத்து பார்த்து
வருவதாகவும் ,மேலும் தந்தையிடம் தன்னை நான் கவனித்து கொள்வைதில்லை
என முறைப்பாடு செய்து வந்த நிலையில் குழப்பமடைந்த தான் இவ்விதம்
சிசுவின் வாயில் துணியை வைத்து அழுத்தி கொன்று கிணற்றில் வீசியதாக தயார் தெரிவித்துள்ளார்
மேற்படி சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பொலிசாரை போட்டு தாக்கிய நால்வர் திடீர் கைது
பொலிசாரை போட்டு தாக்கிய நால்வர் திடீர் கைது
இலங்கை காவல்துறை ஊழியர் ஒருவரை போதைவஸ்து குழு ஒன்று மடக்கி கோரமாக தாக்கியது
அவ்விதம் தாக்குதலை நடத்தியவர்கள் பொலிசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றனர்
இவ்வாறு தப்பித்த நால்வரை தாம் தற்போது சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதான அனைவரும் உரிய முறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
லொத்தரி விழுந்துள்ளதாக கூறி 60 மில்லியன் ஆட்டையை போட்ட வெளிநாட்டு கும்பல்
லொத்தரி விழுந்துள்ளதாக கூறி 60 மில்லியன் ஆட்டையை போட்ட வெளிநாட்டு கும்பல்
இலங்கையில் உள்ள மக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவர்கள்
விபரங்களை சேகரித்த குழு ஒன்று அவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு
கொண்டு லொத்தரி வீழ்ந்துள்ளதாக கூறி அவர்கள் விபரம் மற்றும் வங்கி
விபரங்களை பெற்று சுமார் அறுபது மில்லியன் ரூபாய்கள் மோசடி
புரிந்துள்ளதாக இலங்கை குற்ற புலானய்வு துறையினருக்கு நூற்றி ஒரு முறைப் பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறு முறை கேடாக மோசடி செய்த குழுவினரை மடக்கி பிடிக்கும்
நகர்வில் இலங்கை உளவுத்துறையினர் வெளிநாட்டு போலீசாருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது
மக்களே இவ்விதம் அழைப்புக்கள் வந்தால் அதற்கு பதில் அளிக்காது தவிர்த்து விடுங்கள்
முள்ளி வாய்க்காலில் புலிகளின் வெடிகுண்டுகள் மீட்பு
முள்ளி வாய்க்காலில் புலிகளின் வெடிகுண்டுகள் மீட்பு
இறுதி போர் இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் வீடொன்றை நிர்மாணிக்க
காணியை சுத்தம் செய்த பொழுது அங்கு பெரும் தொகையிலான வெடி பொருட்கள் கணபட்டன
இதனை அடுத்து தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்க பட்டதை
அடுத்து விரைந்து வந்த ;போலீசார் ,மற்றும் குண்டு செயல் இழக்க வைக்கும் இராணுவத்தினர் குண்டுகளை செயல் இழக்க வைத்தனர்
கன்னி வெடிகள் ,கிளைமோர் ,மோட்டர் குண்டுகள் ,புலிகள் தயாரிப்பு
கண்ணிவெடிகள் என்பன மீட்க பட்டு செயல் இழக்க வைக்க பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது
புலிகள் இல்லாத பொழுதும் புலிகள் பெயரால் இவ்விதம்
ஆயுதங்களை மீட்டதாக சிங்கள ஆளும் ஆட்சியாளர்கள் படம் காட்டி வருகின்றமை குறிப்பிட தக்கது
சிறையில் கைதி மரணம் – நடந்தது என்ன ..?
சிறையில் கைதி மரணம் – நடந்தது என்ன ..?
இலங்கை – களுத்துறை சிரிலந்த சிறைச்சாலையில் போதைவஸ்து கடத்தல்
குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டிருந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமாகியுள்ளார்
இவர் காவல்துறையினரால் அடித்து கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
சிறைகளில் அடைத்து வைக்க பட்டுள்ள கைதிகள் சிங்கள
பொலிஸாரினால் கோரமாக தாக்க பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது
கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது
கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது
இலங்கையின் பல்வேறு பகுதியை சேர்ந்த சுமார் பன்னிரண்டு பேர் கனடாவுக்கு
சட்ட விரோதமாக செல்ல முயன்ற பொழுது கட்டு நாயாக்க வான் தளத்தில் வைத்து கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களில் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் உள்ளடங்கும் ,குடிவரவு
அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட
விசாரணையின் பொழுது இவர்கள் இவ்விதம் சிக்கியுள்ளமை குறிப்பிட தக்கது
மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின்
நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு விதித்துள்ள தடைகளை உடைக்கும்
வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதோடு, அலங்கரிக்கப்பட்டிருந்த
நினைவேந்தல் இடத்தில் இருந்த திலீபனின் திருவுருப்படம் மற்றும் பதாதைகளை இரவோடு இரவாக தனது காவல்துறையினைக் கொண்டு அகற்றியுள்ளது.
தியாகி திலீபனை நினைவுமூகூருதல் என்பது, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை நினைவுகூரும் செயல் என இன்று செவ்வாய்கிழமை யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா அரச கட்டமைப்பின் இத்தகையை தடைகளை உடைக்கும் வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென்பதனையே மேற்படிச் சம்பவங்கள் மீண்டும்
வெளிக்காட்டி நிற்பததாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற தியாகி தீலீபனின் முழக்கம், இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு
பின்னரும் மக்கள் எழுச்சியனதும், மக்கள் போராட்டத்தினதும் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது என தெரிவித்துள்ளது.
பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரப்பு செய்துள்ள சிறிலங்கா அரச கட்டமைப்பானது, அபிவிருத்தி, இனநல்லிணக்கம் என்ற பெயரில் தமிழத்
தேசியத்தினை நீக்கம் செய்ய முனைவதோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து நிரந்தர அடிமைகளாக
வைத்திருக்கும் செயலிலே ஈடுபட்டு வருகின்றது. சிறிலங்காவின் நீதித்துறையினாலோ அல்லது அதன் கட்டமைப்புக்கள் ஊடாகவோ தமிழர் தேசம் இதனை எதிர்த்துப் போராடிவிட முடியாது.
மக்கள் போராட்டத்தின் ஊடாகவே சிறிலங்காவின் அனைத்து தடைகளையும் உடைக்க முடியும் என்ற நிலையினையே
விடுதலைப்பசியோடு தியாகி தீலிபனின் இருந்த இன்றைய முதன்நாள் நினைவுகள் உணர்த்தி நிற்கின்றது என நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
பதாதைகள் ஏந்திய பெண் பொலிஸார் நீக்கம்
பதாதைகள் ஏந்திய பெண் பொலிஸார் நீக்கம்
வீதி ஒழுங்குச் சட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் பதாதைகளை வீதிகளில் காட்சிப்படுத்திய பெண் பொலிஸார் அக்கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனால், போக்குவரத்து பிரிவின்
அதிகாரிகளுக்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பதாதைகளைக் காட்சிப்படுத்துவதற்கு, பெண் பொலிஸாரை பயன்படுத்தியமைத் தொடர்பில் சமூக
வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, அவர்கள் இந்த கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
காணி விவகாரம்: இராணுவ உயர் அதிகாரிகள் ஆஜர்
காணி விவகாரம்: இராணுவ உயர் அதிகாரிகள் ஆஜர்
ஹட்டன்-நுவரெலியா வீதி, கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலிருக்கும் காணியை அபகரித்தமை தொடர்பிலான விவகாரம் தொடர்பில், ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஆஜராகுமாறு
விடுக்கப்பட்ட நோட்டீஸ்க்கு அமைவாக, இராணுவ அதிகாரிகள் பலர், நீதிமன்றத்தில் நேற்று (15) ஆஜராகியிருந்தனர்.
இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, உள்ளிட்ட அப்படையணியின் கேர்ணல்கள் இருவரும் இன்னும் சில அதிகாரிகளும் நீதிமன்றத்தில்
ஆஜராகியிருந்தனர். அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சிலரும் ஆஜராகியிருந்தனர்.
மேற்படி விவகாரம் தொடர்பிலான வழக்கு, ஹட்டன்- மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜே. ட்ரொக்ஸி, முன்னிலையில், செப்டெம்பர் 3ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது,
செப்டெம்பர் 15ஆம் திகதியன்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டு, வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
கொழும்பு வணிக உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலுள்ள காணியை இராணுவத்தினர் கையகப்படுத்திவிட்டனர். அத்துடன்,
அக்காணியிலிருந்த சில கட்டடங்களையும் ஆக்கிரமித்துவிட்டனரென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் போது, தனிமைப்படுத்தப்பட்ட மய்யங்களாக மாற்றுவதற்காக, நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டது. ஜூலை மாதம் வரை
மட்டுமே தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்குமென அறிவிக்கப்பட்டது. அத்துடன், இராணுவ வீரர்களை அங்கு
நிலைநிறுத்தியது மற்றும் கட்டடங்களை இராணுவ முகாமாக மாற்றிவிட்டதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வணிக உயர் நீதிமன்றத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் வாடிக்கையாளர், 50 வருட காலத்துக்கு அந்த நிலத்தை வைத்திருக்கிறார் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, அந்த நிலத்தை அந்த வாடிக்கையாளரிடமே ஒப்படைக்குமாறு, மனுவின் ஊடாக கோரியிருந்தார்.
இந்த வழக்கில், இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 58 பேர், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவ்வாறான வழக்கொன்று இராணுவத்தினரால் இம்மாதிரியான நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த முடியாதென
இராணுவத்தின் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி ஜயகித் மாதுரன்ன, இலங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவு சட்டத்தரணிகள், திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதேவேளை, வழக்கின் பிரதிவாதிகளா குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர், திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்த எதிர்ப்பை,
எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறு கோரி, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு வழக்கை, ஹட்டன்- மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜே. ட்ரொக்ஸி ஒத்திவைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச் சபை அமர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச் சபை அமர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச்சபை அமர்வு நேற்று நியுயோர்க் நகரில் ஆரம்பமானது.
எதிர்காலச் சவால்களை வெற்றி கொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்த அமர்வின் தலைவர் வொல்க் பொஸ்கிர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக கொவிட்-19 போன்ற தொற்று நிலைமையில் இந்த எண்ணம் மிகவும் பலமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பல்நோக்கு செயல் திட்டமொன்று அவசியம் .என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த மாநாடு கடும் சட்டங்களுக்கு அமைய இடம்பெறுகிறது. இதனால், பல உலகத்
தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை. உலகத் தலைவர்கள் வீடியோ தொழில்நுட்பம் மூலம் இந்த அமர்வில் உரையாற்ற உள்ளனர்
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி நிர்மாணப்பணிகள் 2024ல் நிறைவு
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி நிர்மாணப்பணிகள் 2024ல் நிறைவு
பிரதான வீதிகளின் இருபுறமும் உள்ள நடைபாதைகளில் வாகனம் நிறுத்துவது முற்றாகத் தடை…
சிறிய பாலங்கள் கம்பிப் பாலங்கள்இ மரப் பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள்…
வீதிகளின் இருபுறமும் இரண்டு மில்லியன் மரக் கன்றுகளை நட திட்டம்….
ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024ல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும்.
போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்வுபுள் காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை
ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும்
வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று
(15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறிய பாலங்கள்இ மரப் பாலங்கள் மற்றும் கம்பிப் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களில் 8,000
கிலோமீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 400 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
வீதி நிர்மாணப் பணியின்போது பயன்படுத்தப்படும் மண், கல், மணல் போன்றவற்றை தேவையானளவு தயார்படுத்தும் பொறுப்பை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்குவதாக
ஜனாதிபதி தெரிவித்தார். வளங்களை வழங்குகின்றபோது அனுமதி அளிக்க வேண்டிய சுற்றாடல், வன ஜீவராசிகள், வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும்
மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடி முன் அனுமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதான நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நாட்டுவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
நிர்மாணப் பணிகளுக்கு தடைகள் மற்றும் தாமதங்கள் எந்த வகையிலும் ஏற்படுவதற்கு இடம் வைக்கக்கூடாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். வீதி நிர்மாணப் பணிகளை
கண்காணிக்கும் பொறுப்பு அரசாங்கத்தினதும் ஒப்பந்தக்கார்கள் இருதரப்பினர்களினாலும் நடைபெற வேண்டும். உப
ஒப்பந்தங்களை வழங்குவதற்கு ஒரு போதும் இடமளிக்காது இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அனைத்து பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள்இ சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது வாகனத் தரிப்பிடத்திற்கான இடவசதியை ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோஇ இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின்
செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு, பப்பாசி போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (15.09.2020) இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப்
பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த வருடம் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய கலந்துரையாடலிலும் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் பதில் அளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஏற்கனவே 6 விதமான பயிர் செய்கைகளுக்கு நஸ்டஈடு வழங்கும் ஏற்பாடுகள் மாத்திரம் விவசாய அமைச்சில்
காணப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைய, மேற்குறிப்பிட்ட பயிர் செய்கைகளுக்கும் இயற்கை
அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, எதிர்காலத்தில் குறிப்பிட்ட பயர்செய்கைகள் பாதிக்கப்படும் போது உடனடியாக நஸ்டஈடு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாய அமைச்சின் குறித்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன், அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட
பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு ஜனாதிபதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த அமைச்சரவையில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அம்பன் புயலால்
பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஸ்டஈடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றல்
நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றல்
நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில், நிகழ்வுகளுக்கு நேற்றைய தினம் நீதி மன்றம் தடை விதித்திருந்தது.
இதனையடுத்து நேற்று மாலை முதல் நல்லூரிலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் இருந்த திலீபனின் திருவுருவ படங்கள்,
பதாகைகள், கொடிகள் என்பன அகற்றப்பட்டு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், அவ்விடங்களுக்கு யாரும் சென்று வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு செய்தி சேகரிக்க சென்ற
ஊடக்வியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு பொலிஸிரால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







