Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நபரை வீதியில் போட்டு தககிய போலீஸ்
நபரை வீதியில் போட்டு தககிய போலீஸ்
போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் நாம் வினவியபோது கேகாலை பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படும் நிலையில், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்
ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல, மீயாங்கொல்ல காட்டு பகுதியிலிருந்து
அதிசக்தி வாய்ந்த 130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு மற்றும் நாட்டுத்துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்
தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து காகித ஆலை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ளவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை குண்டு செயலிழக்கச்
செய்யும் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன், கடந்த சில தினங்களாக இவ்வாறான கைவிடப்பட்ட
வெடி பொருட்களை வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் மீட்டு செயலிழக்கச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் மகிந்த வழிபாடு
திருப்பதியில் மகிந்த வழிபாடு
இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு திருப்பதி
தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த
பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள்
தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள்
இலங்கை கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வளர்க்க பட்ட மூவாயிரம் கோழிகள் தீயில் எரிந்து கருகின
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு
குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பாக கத்தோலிக்க மதகுருக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்புத் திட்டத்தை வகுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துமாறும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உளவுத் தகவல்களை சேகரித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
எப்படி கொலை செய்தேன் -போலீசாரை அலற விட்ட கொள்ளையன்
எப்படி கொலை செய்தேன் -போலீசாரை அலற விட்ட கொள்ளையன்
எஜமானியின் அணிந்துவரும் தங்க நகையை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என மட்டக்களப்பு நகர்
பார் வீதியில் எஜமானியை வெட்டி கொலை செய்த வேலைக்காரியான பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் நேற்று (21) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு நகரில் நகைக்கடை வர்த்தகரின் மனைவியை வேலைக்காரி பணத்துக்காக படுகொலை செய்து 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் மக்களிடையே பயத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வேலைக்காரியிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மைகள் தெரியவந்துள்ளது.
நகரின் நடுப்பதியில் அரசடி பகுதியில் உள்ள பார்வீதியில் அதிக சனநடாட்டம் உள்ள பகுதியில் மாடிக்கட்டிம் கொண்ட வீட்டில் களுவாஞ்சிக்குடியில் தங்க ஆபரண விற்பனை கடை நடாத்திவரும்
செவ்வராசா செல்வி என்றழைக்கப்படும் தயாவதி ஆகிய தம்பதிகளுக்கு 23 வயதுடைய பெண், 26 வயதுடைய ஆண் பிள்ளைகளான இரு பிள்ளைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வர்த்தகர் செல்வராசாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு கருவப்பங்கேணி ஒம்பிறோஸ் வீதியில் வசித்துவரும் 27 வயதுடைய ரவிகார்த்திகா என்ற பெண் ஒருவர் தினமும் காலையில்
வந்து மாலை வரை வீட்டில் மனைவிக்கு ஒத்துழைப்பாக சமையல் மற்றும் ஏனைய வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு வேலைக்கான சம்பளத்தையும் வழங்கி வந்துள்ளனர்.
குறித்த வேலைக்காரி பின்னர் மலேசியாவுக்கு வீட்டு வேலை வாய்ப்பு பெற்று அங்கு சென்று வேலை செய்துவந்த நிலையில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகிதால் அங்கிருந்து அவரை பொலிஸார் பிடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு வந்த அவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து கொண்டு பெற்றோருடன் அங்கு சென்று குடியிருந்து 8 மாதங்களாக வாழ்ந்து வந்த இவர் அடிக்கடி முன்னர் வேலை செய்த தனது எஜமானியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (20) வேலைக்காரி எஜமானியின் தங்க நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் காரணமாக தனது கணவரிடம் கல்லாற்றுக்கு
தனது 48 வயதுடைய ஏரம்பு ரவி என்ற தந்தையுடன் செல்வதாக தெரிவித்து தந்தையிடம் தனக்கு எஜமானியம்மா 85 ஆயிரம் ரூபா பணம் தரவேண்டும் அதனை வாங்கிவரவேண்டும் என
தந்தையிடம் பொய்கூறி 48 வயதுடைய தந்தையாரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தந்தையுடன் பஸ்வண்டியில் ஏறி மட்டக்களப்பு சினன் ஆஸ்பத்திரி சந்தியில் இறங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள கடை ஒன்றில் கோழிவெட்ட கத்தி ஒன்று தேவை என கோரி கத்தி ஒன்றை வாங்கி தனது தோல்பையில் வைத்துக்கொண்டு பார் வீதியிலுள்ள எஜமானியம்மாவின் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.
அங்கு முதலாளியின் கார் நிற்பதை கண்டு வீட்டுக்கு செல்லாமல் அங்கிருந்து கருவப்பங்கேணியிலுள்ள தந்தை தொழில் புரிந்துவரும் ஹோட்டல் முதலாளியை சந்திப்பதற்காக அங்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது வர்த்தகர் செல்வராசா அருகிலுள்ள கோவில் திருவிழா காரணமாக கடைக்கு மகனாரை அனுப்பிவிட்டு மனைவியான 48 வயதுடைய தயாவதி மற்றும் மகளுடன் கோவிக்கு சென்று
வழிபட்டுவிட்டு சுமார் 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து மனைவியார் கோவிலுக்கு செல்லும் போது முழு தங்க ஆபரணங்களை அணிந்து சென்ற நிலையில் அதோடு சமையலில் ஈடுபட்டுக்
கொண்டிருந்துள்ள நிலையில் வேலைக்காரியும் அவரது தந்தையும் அங்கு சென்றதையடுத்து அவர்களை வரவேற்று கலந்துரையாடிய நிலையில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு வேலைக்காரி அவரது தந்தையிடம் கூறினார்.
இதன் பின்னர் வர்த்தகர் செல்வராசா அவரது மகள் ஆகியோர் சாப்பிட்டு விட்டு வீட்டின் முதலாம் மாடியிலுள்ள அறையில் தூங்க சென்ற நிலையில் மகளும் சாப்பிட்டுவிட்டு வீட்டு மண்டபத்தில்
குசன் சோபாவில் அமர்ந்து கொண்டு கையடக்க தொலைபேசியில் இருந்த நிலையில் நித்திரை போயுள்ளார்.
அப்போது எஜமானியம்மா தனது கையால் வேலைக்காரி மற்றும் அவளின் தந்தை ஆகிய இருவருக்கும் உணவு வழங்கி அவர்கள் சாப்பிட்ட பின்னர் எஜமானியம்மாவுடன் கதைத்துக்
கொண்டிருந்த போது நேரம் மாலை சுமார் 4 மணியை நெருங்கி கொண்டிருந்த வேளை எஜமானியம்மாவும் வேலைக்காரியும் கதைத்துக் கொண்டிருந்ததையடுத்து அங்கிருந்து வேலைக்காரியின் தந்தையர் வீட்டின் வெளியிலுள்ள பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் முன்பதியில் இருந்த களஞ்சிய அறைக்கு எஜமானியம்மா சென்றுள்ளபோது அவரை வேலைக்காரி பின் தொடர்ந்து சென்று அறையினுள்
எஜமானியம்மாவை வெட்ட தனது தோல் பையில் வைத்திருந்த கைத்தியை எடுத்தபோது எஜமானியம்மா அதனை கண்டு வேலைக்காரியை தள்ளிய போது வேலைக்காரியின் கையில் கத்திபட்டதில் அவளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
எஜமானியம்மாவை பிடித்து தள்ளிவிட்டபோது அவர் கீழே தலைகுப்பற வீழ்ந்தபோது அங்கு இருந்த தேங்காயில் தலைஅடிப்பட்டு கீழேகிடந்த எஜமானியம்மா சத்தம் போடதவாறு கழுத்தை சுற்று மின்னல் வேகத்தில் கழுத்தை கத்தியால்; சுமார் 10 தடவை படபடவென வெட்டியுள்ளார்.
பின்னர் அவர் ஓடமுடியாதாவாறு முழங்கால்கள் இரண்டையும் வெட்டியதுடன் அவரின் கழுத்தில் இருந்த சுமார் 25 பவுண்தாலிக் கொடியை கழற்றியபோது தலைமுடி தாலியில் சிக்கியதையடுத்து
தலைமுடியை வெட்டி தாலிக் கொடியை எடுத்துக்கொண்ட பின்னர் கையில் அணிந்திருந்த காப்புக்களை கழற்ற அங்கிருந்த பலககட்டையில் கையை வைத்து கையின் மணிகட்டு பகுதியை கத்தியால் வெட்டி துண்டாக்கிவிட்டு காப்புக்களை கழற்றியுள்ளார்.
கைவிரலில் இருந்த மோதிரங்களையும் கழற்றிவிட்டு காதில் இருந்த தோட்டை கழற்ற காதை தோட்டுன் கத்தியால் அறுத்து எடுத்து கொண்டு 46 பவுண் தங்க ஆபரணங்களையும்
கொள்ளையிட்டு அதனை தோல்பையில் பையில் எடுத்து வைத்துகொண்டு கொண்டு கத்தியை அங்கு விட்டுவிட்டு அறையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் வெளியே சென்ற வேலைக்காரியின் தந்தையர் அங்கு சென்ற போது மகள் செய்த கொடூரத்தை கண்டு மகள்மீது தாக்கி என்ன செய்துள்ளாய் என இருவரும்
சண்டிபிடித்துக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தையடுத்து சோபாவில் நித்திரை யில் இருந்த எஜமானியின் மகள் விழித்தொழுந்து வந்தபோது அங்கு தாயார் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைகண்டு அதிர்ந்து கத்தியுள்ளார்.
இந்த கத்தல் சத்தம் கேட்டு முதல் மாடியில் படுத்திருந்த கணவர் பதற்றத்துடன் கீழ் இறங்கி வந்தபோது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டார்.
இதன்போது கொள்ளையடித்த நகைகளுடன் வேலைக்காரியும் அவளது தந்தையும் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடி வீதிக்கு சென்றபோது வீதியில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர்
அவர்களை பின்தொடர்ந்துடன் அங்கு கடைகளில் இருந்தவர்களும் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிபிடித்தனர் என பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸ்லி தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வேலைக்காரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திங்கட்கிழமை இரவு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடயப் பொருட்களை சேகரித்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான சிசிரிவி ஒளித் தொகுப்புக்கள் அடங்கிய விசிடி எனப்படும் வண்தட்டு போன்ற தடயப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வேலைக்காரி மற்றும் அவளது தந்தை ஆகிய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (21) ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சொத்து சேர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை
சொத்து சேர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை
சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்ப்பவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க, பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறானவர்கள் தொடர்பான நியாயமான சந்தேகங்கள் இருப்பின் மாத்திரம் 1917 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடத்தில் கோரியுள்ளனர்.
இந்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணிநேரமும் தகவல்களை வழங்க முடியும்.
எவ்வாறாயினும், தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக குறித்த இலக்கத்தினை தவறான முறையில் பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
இது எப்படி நடந்தது சந்திரிக்கா சொல்லுறாங்க
இது எப்படி நடந்தது சந்திரிக்கா சொல்லுறாங்க
17ஆம் திகதி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் செயற்பட்ட விதமானது சிறப்பாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,
மிகவும் அமைதியான முறையில் இந்த மாணவர்கள் தமது உணர்வுகளை வெளிபடுத்தியிருந்தனர் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் பலரும் பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தாலும் அன்று எமது நாட்டின் ஜனநாயகம் வெற்றிகொள்ளப்பட்டது என சுட்டிக்காட்டினார்.
அந்த இளைஞர், யுவதிகள் சிறந்த ஜனநாயக பண்புடன் அவர்களதும் இந்த நாட்டு மக்களினதும் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க துப்பாக்கியில்லாமல் குண்டு இல்லாமல், தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் மிகவும் கௌரவமான முறையில் செயற்பட்டுள்ளார்கள் என்றார்.
அரசாங்கம், அரசாங்கத்தின் பிரதானிகள் இது போன்ற தீர்மானங்களை எடுக்கும் போது, தம்மிடம் கேட்காமல் தம்மை இணைத்துக் கொள்ளாமல் எவரினதும் ஆலோசனையைப் பெறாமல் தவறான
தீர்மானத்தை எடுத்து அதனைச் செயற்படுத்தும் போது, விசேடமாக அத்தீர்மானத்தால் பாதிப்பை எதிர்நோக்குபவர்கள் தமது கருத்துகளை வெளியிட சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
எனவே, இந்த மாணவர்கள் அன்றைய தினம் ஜனநாயகத்தின் உயரிய நிலையை எடுத்துக்காட்டினர். தமது எதிர்ப்பை ஆங்காங்கே சென்று, பைத்தியகாரத்தனமாகக் காட்டாமல்
மிகவும் அமைதியாக பலமான எதிர்ப்பை வெளியிட்டனர். இதையே ஜனநாயகம் என கூறுகிறோம் என்று குறிப்பிட்டார்.
அந்த மாணவர்கள் யார் என தனக்கு தெரியாது. ஆனால் சிரேஷ்ட தலைவர் என்ற ரீதியில் தனது
கௌரவத்தை செலுத்துவதாகவும் யார் என்ன சொன்னாலும் அன்று அந்த மாணவர்கள் செயற்பட்ட விதம், 100 சதவீதம் சரியென்றார்.
இந்த மாணவர்களைப் போன்று, நாட்டை நேசிக்கும் ஏனைய இளைஞர்கள், முதியவர்கள் எந்த அரசாங்கத்தில் இவ்வாறு தவறு ஏற்படும் போதும், மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுங்கள் என்றார்
இலங்கைக்கு 150 உல்லாச பயணிகள் வருகை – அடித்து விடும் இலங்கை
இலங்கைக்கு 150 உல்லாச பயணிகள் வருகை – அடித்து விடும் இலங்கை
இலங்கையில் பரவி வரும் கொரானா காலத்திலில் ஒரு வருடத்தில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்
பயணிகள் வந்திருப்பதாக இலங்கை உல்லாசத்துறை தெரிவித்துள்ளது
இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்
இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்
இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாத அரசினால் தமிழர்கள் தொடர்ந்து அடக்க பட்டு ,அந்த
இனம் சொல்லெண்ணா துயரில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை சீனாவின் ஆக்கிரமிப்பும் ,அதிகாரமும் அந்த மண்ணில் மேலோங்கி நிற்கிறது
தமிழர் பகுதிகளை ஏப்பம் இட்டு உலக வல்லாதிக்க நாடாக தன்னை உருமாற்றி பயணிக்கும் சீனா ,தமிழர் மண்ணை நாசம் செய்து அதன் ஊடாக தமிழர்களை கொத்தடிமையாக்கி சரணாகதியாக்கும் நிலைக்கு சென்றுள்ளது
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பும் ,வள சுரண்டலும் ,பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும்
நிலையை இந்தியா மாற்றிட தவறினால் ,அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையான நிகழ்வு அரசியலாக மாற்றம் பெற்றுள்ளது
இவ்வேளை ஆளும் சிங்கள அரச பயங்கரவாத அரசு புரிந்த தமிழ் இனப் படு கொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது
அதற்கு ஏற்ப தமிழர்கள் தமது ஆளும் பலத்துடன் வாழ கூடிய தீர்வு ஒன்று வழங்க படும் என்பதும் ,அந்த ஆட்சியை சிறந்த நபர் ஒருவர் தலைமையில் வழிநடத்த கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற போகிறது ,
அது யார் அந்த நபர் ..? இவர் இப்பொழுது இந்தியா அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக மாற்றம் பெற்றுள்ளாரா
அப்டி என்றால் அவரை சீனா ,இலங்கை உயிரோடு விட்டு வைக்குமா ..?
அவர் கொலை செய்ய பட்டால் யார் அடுத்து வருவது என்ற தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதக கணிக்க தோன்றுகிறது
நாம் முன்னே கூறியது போன்று 2025 ஆம் ஆண்டு நேர்மறை மாற்றத்தை இலங்கை அரசியல்
நடத்தி முடிக்க போகிறது ,தற்போது அதற்கு ஏற்ப ஆளும் கோட்டா அரசை ஆடவிட்டு உலகம்
வேடிக்கை பார்க்கிறது ,விரைவில் பல்லு புடுங்க படும் நாட்கள்
ஆரம்பிக்க பட போகின்றது என்பதனை நிகழ்கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன
- வன்னி மைந்தன் –
- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது
- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு
- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா
- கண்டி இன்று இரவு முதல் ரந்தோலி பெரஹேராவிற்குத் தயாராகிறது
- யாழ்ப்பாணக் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கண் காயங்கள்
- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி
- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.
- கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை
- மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை
- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்
- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி
- ஸ்வீடன் பள்ளி மீது வாளுடன் தாக்குதல் நடத்திய நபர்: ஒருவர் பலி, மூவர் காயம்
- பாதாள உலக குழு நபர் கைது
- கிளிநொச்சியில் டிராக்டர் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது
பெண்கள் அறைக்குள் புகுந்தவர் மரணம்
பெண்கள் அறைக்குள் புகுந்தவர் மரணம்
மருதானை எஸ்.மகிந்த மாவத்தையில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டடத்தில் இருந்த பெண்கள் விடுதிக்குள் பதுங்கிச் சென்ற நிலையில், தவறி விழுந்து உயிரிழந்ததாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஏறாவூரைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பு பெண்கள் விடுதி எனவும், அனுமதியின்றி அடுக்குமாடி
குடியிருப்பிற்குள் நுழைந்த நபர், பாதுகாவலர் ஓடி வருவதைக் கண்ட நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் ஒமிக்ரான் நோயால் மூவர் பாதிப்பு
இலங்கையில் ஒமிக்ரான் நோயால் மூவர் பாதிப்பு
இலங்கையில் ஒமிக்ரான் நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இவ்வாறு அடையாளம் காண பட்டவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை
சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிசாரினால் நேற்று (21) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2,910 ஆகும். முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 2,640 ஆகும்.
இந்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் சுகாதார விதிமுறைகளை மீறிய 1,901 நபர்கள் எச்சரிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும்- டக்கிளஸ் கூவல்
எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும்- டக்கிளஸ் கூவல்
எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும்- டக்கிளஸ் கூவல்
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது
செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மயிலிட்டித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மயிலிட்டித் துறைமுக்திற்கான விஜயத்தினை நேற்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்படடுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர் பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனாக கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் இலங்கையின் கடல் வளத்தையும் பாதிக்கும் வகையில் எல்லை தாண்டி வந்து சட்ட விரோதத் தொழில் முறைகளில் ஈடுபடுகின்ற
இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும்
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற கடற்படையினருக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்து, ஆழ்கடல் மீன்பிடி போன்ற சட்ட ரீதியான தொழில்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும்
எனவும், அவ்வாறு பயன்படுத்த முடியாத படகுகளை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈட்டினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
‘மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாவது கட்டப் புனரமைப்பு தவறான நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையினால் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை.
இதன் காரணமாக இந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இந்தத் துறைமுகத்தினால் பூரணமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில்,
இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், பிரதேச மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.’ எனவும் தெரிவித்தார்.
14 வயது சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற பெண் கைது
14 வயது சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற பெண் கைது
14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, விபசாரத்துக்காக விற்பனைச் செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் சுகபோகமான வாழ்க்கையை நடத்திவந்த, அச்சிறுமியின் உறவுக்கார பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பொலிஸாருக்கு கிடைத்த மிக இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்த உறவுக்கார பெண், அச்சிறுமியை பலருக்கும் பணத்துக்கு விற்றுள்ளார்.
கிராண்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான அப்பெண், மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று, தான் தனியாக இருப்பதால், துணைக்கு சிறுமியை அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுமியை கிராண்பாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்று இவ்வாறு விபசாரத்துக்கு விற்றுள்ளார்.
இரண்டு, மூன்று நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க வைத்துக்கொள்வதாக, அச்சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு அழைத்துவரும் சந்தேகநபரான அப்பெண், பல்வேறான
வர்த்தகர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
12 வயதில் இருந்தே, அச்சிறுமியை இவ்வாறு இரண்டு வருடங்களாக, விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், பலரும் கைது
செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரான அப்பெண்ணுக்கு 32 வயதாகும். இறுதியாக சிறுமியுடன் மீட்கப்பட்ட சந்தேநபருக்கு 38 வயதாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாலிபனை தூக்கி சென்ற பட்டம் – யாழில் நடந்த பயங்கரம்
வாலிபனை தூக்கி சென்ற பட்டம் – யாழில் நடந்த பயங்கரம்
பட்டம் விட்ட இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்ற சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றது.
பருத்தித்துறை – புலோலி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில் பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் படத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர்.
அப்போது, இரண்டாவது பட்டத்தின் ‘முச்சை’ கயிற்றை பிடித்திருந்தவரும், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.
சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர்.
சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட கீழே விழுந்தார்.
இலங்கையில் பெட்ரோல் விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் பெட்ரோல் விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் பெட்ரோல் விலைகள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது
கடந்த இரவில் இருந்து லீட்டருக்கு இருபது ரூபாவுக்கு மேலாக அதிகரிக்க பட்டுள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இலங்கை பெற்று கொண்ட கடன் சுமையை மீள திருப்பி செலுத்த முடியாது திணறி வருகிறது
,இதனால் இந்த விலைகளில் மாறுதல்கள் ஏற்பட காரணம் என தெரிவிக்க படுகிறது
Accordingly,the price of a litre of Petrol (92 Octane) has been increased by Rs 20 (from Rs 157 to 177), Petrol (95 Octane) increased by Rs. 23 (from Rs 184 to 207),
Auto Diesel increased by Rs. 10 (from Rs 111 to 121), Super Diesel increased by Rs.15 (from Rs 144 to 159) while Kerosene increased by Rs. 10, (from Rs 77 to 87)
மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கையில் பல நாடுகளாக மோட்டார் சைக்கிள் திருடி விற்று வந்த கும்பல் ஒன்றினை
காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் ,இவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் ஊந்துருளி
,மேலும் அதனை பாகங்களாக்கி பிரித்து வைக்க பட்டிருந்த நிலையிலும் பலது மீட்க பட்டுள்ளது
கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தூக்கில் தொங்கும் மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள்
தூக்கில் தொங்கும் மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள்
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டு ஒன்றில் வசிக்கும் குடும்பஸ்தர் வீட்டு கதவு வாயிலில் தூக்கில் தொங்குவதை கண்ட அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 34 வயதுடைய பெரியசாமி நாகராஜன் என்பவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒருலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
ஒருலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடி
சென்றுள்ளனர் என வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது
இவர்களில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறு வீடுகளில் வேலை புரிந்திட சென்ற பெண்களில் பலர் படுகொலை செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது





















