செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த பெண் மரணம்

பொலிஸ் காவலில் இருந்த பெண் மரணம்

மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

போருப்பிட்டிய, வரல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்ப வன்முறை தொடர்பில் மொரவக்க பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி குறித்த பெண் நேற்று (28) மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்குச் அழைத்து சென்றுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் சுகவீனமடைந்துள்ளார்.

பின்னர் அம்பியூலன்ஸ் மூலம் மொரவக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனை இன்று (29) நடைபெறவுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    தள்ளாடும் இலங்கை ஒரு டொலர் – 450 ரூபா –

    தள்ளாடும் இலங்கை ஒரு டொலர் – 450 ரூபா –

    நாட்டில் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த வருட இறுதியில்

    அமெரிக்க டொலர் 450 ரூபாயை அடைவதை எவராலும் தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின் வணிக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா இதனை தெரிவித்துள்ளார். 

    அந்த வகையில் 230 ரூபாயில் இருந்த அமெரிக்க டொலர் தற்போது 300 ரூபாயாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

      Posted in இலங்கை செய்திகள்

      அடுத்து வரும் தேர்தலில் நாமே வெல்வோம் – மகிந்தா சூளுரை

      அடுத்து வரும் தேர்தலில் நாமே வெல்வோம் – மகிந்தா சூளுரை

      பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

      உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுன கட்டாயமாக வெற்றிப்பெறும்.

      ரணில் மற்றும் சஜித்துடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகள் எதுவுமே என்னிடத்தில் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

      இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கவில்லை எனத் தெரிவித்த
      பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அரசாங்கம் என்பது பொய்யாகும் என்றார்.

        Posted in இலங்கை செய்திகள்

        நண்பன் நீரில் மூழ்கி மரணிக்க – தப்பி ஓடிய நண்பர்கள்

        பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவனின் மரணம் தொடர்பில் மூன்று மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

        குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளதுடன், அவர் வீடு திரும்பாதமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27 ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

        நேற்று (28) குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

        குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், அவருடன் குளித்துக் கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

        மாணவன் காணாமல் போனது குறித்து யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்ற மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

        பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

        Posted in இலங்கை செய்திகள்

        வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு

        வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு

        இலங்கையில் ஆளும் அரசினால் வருமானம் குறைந்த மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபா வாழுங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது

        பணம் இன்றி பொருளாதாரத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் தமது, ஆட்சியினை தக்க வைத்து கொள்ள


        அரசு இவ்விதமான ஆசை ஊட்டும் நகர்வில் ஈடுபட்டு வருகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          இந்தியா – இலங்கைக்கு இடையில் 6 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

          இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

          இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.

          இதன்படி, இலங்கை டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின் நிலையத் திட்டங்களை

          நடைமுறைப்படுத்துதல்
          தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை மக்களுக்கு உதவுங்கள் – இந்தியாவிடம் மனோ வேண்டுதல்

            இலங்கை மக்களுக்கு உதவுங்கள் – இந்தியாவிடம் மனோ வேண்டுதல்

            நமது மக்கள் முழுமையான சம உரிமையுள்ள இலங்கை பிரஜைகளாக உதவுங்கள்
            -தமுகூ இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிப்பு
            இந்நாட்டில் இன்று குடியுரிமை பிரச்சினை சட்டப்படி தீர்க்கப்பட்டு விட்டாலும்கூட முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக நமது மக்கள்

            அனைவரும் மாறவில்லை. ஆகவே, இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர்

            ஜெய்சங்கரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்தது.
            கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம்,

            வே. ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் எம்பி, ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்திய தரப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர்

            சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

            இலங்கை மக்களுக்கு உதவுங்கள் – இந்தியாவிடம் மனோ வேண்டுதல்


            இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளதாவது,
            இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு

            அனுப்பும்படி தூதுவர் கோபால் பாக்லேவிடம் தந்திருந்த மலையக அபிலாசைகள் ஆவணம் தொடர்பில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விளக்கம் அளித்தார்.


            நிலவரம்பற்ற சமூக சபை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலதிக விபரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டார். மேலும் 13ம் திருத்தம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள மாகாணசபைகள் முழு நாட்டுக்கும் உரித்தான

            அதிகார பரவலாக்கல் இயந்திரம் என்பது வலியுறுத்தப்பட்டது. நாடு முழுக்க சிதறி வாழும் அனைத்து மலையக மக்களை கூட்டிணைக்கும் அதிகார

            பரவலாக்கல் இயந்திரமாக நிலவரம்பற்ற சமூக சபை செயற்படுவதை தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என்பது இந்திய வெளிவிவகார

            அமைச்சருக்கு எடுத்து கூறப்பட்டது. புதிய அரசியலமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள குழுவிடம் இந்த யோசனை சமர்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.


            இந்திய தரப்பில் மலையக மக்களுக்கு, குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், வீடமைப்பு ஆகிய துறைகளில் உதவிகளை இன்னமும் விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.

            உலகளாவிய ரீதியில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டிணைக்கப்படும் செயற்பாடுகளில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களை இன்னமும் முழுமையாக இணைத்துக்கொள்வது பற்றி வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.


            எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் போது முழு பட்டினியில் இருந்து இலங்கை மக்கள் இந்திய உதவியினால் காப்ப்பாற்றப்பட்டுள்ளனர்.

            இலங்கை மக்களுக்கு உதவுங்கள் – இந்தியாவிடம் மனோ வேண்டுதல்

            நன்றி. அதேவேளை நாட்டு மக்களுக்கு உணவளிக்க முடியாத அவமானத்தில் இருந்து இந்நாட்டு அரசாங்கமும் தற்காலிமாக காப்பாற்றப்பட்டுவிட்டது.

            இந்நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது. தொடர்ந்து வெளியில் இருந்து உணவு வர முடியாதே.

            நாம் எமக்குள் விரைவில் இவற்றுக்கு தீர்வு காணுவோம் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெளிவிவகார அமைச்சருக்கு மேலும் விளக்கம் அளித்தார்.

              Posted in இலங்கை செய்திகள்

              யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு

              யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு

              யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

              மானிப்பாய் – சுதுமலை, தெற்கைச் சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீதே நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

              குறித்த நபரின் வீட்டினுள், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழு அத்துமீறி நுழைந்து


              தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                பிரதமராகும் ரணில் -வீடு செல்லும் மகிந்தா

                பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

                நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

                அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை துறப்பார் என்றும் அதன்பின்னர், அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

                அதேபோல, தேசிய அரசாங்கமொன்றை நிறுவி, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கும் கலந்துரையாடப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் ரீதியில் மாற்றங்களை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,
                மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமையவே, அரசியல் மாற்றம் செய்யப்படவிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

                Posted in இலங்கை செய்திகள்

                கோட்டா தலைமையில் ,பிம்ஸ்ரெக் மாநாடு இன்று ஆரம்பம்

                கோட்டா தலைமையில் ,பிம்ஸ்ரெக் மாநாடு இன்று ஆரம்பம்

                இலங்கை அரசாங்கத்தின் ஊற்பாட்டின் கீழ் ஐந்தாவது பிம்ஸ்ரெக் மாநாடு இன்று (28) கொழும்பில் ஆரம்பமாகிறது.

                ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த மகாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதிவரையில் மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

                பிம்ஸ்ரெக் சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாடு மற்றும் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்ளாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

                இந்த மாநாட்டில் பிம்ஸ்ரெக் கொள்கைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதுடன் உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படும்.

                இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

                கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்ரக் மாநாட்டின் அமைச்சு மட்ட சந்திப்பிலும் அவர்
                பங்கேற்பார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                முல்லைத்தீவு வீராங்கனைக்கு ,இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கம்

                முல்லைத்தீவு வீராங்கனைக்கு ,இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கம்

                இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட யுவதி யோகராசா நிதர்சனா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

                INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நேற்று முன்தினம் (26), சென்னையில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணியினர் கலந்துகொண்டனர்.

                இலங்கை அணி வீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த T.சிறீதர்சன் T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை
                சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்.

                முல்லைத்தீவு வீராங்கனைக்கு ,இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கம்

                நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் மற்றும் ஒருவர் வெள்ளி பதக்கத்தையும் பெற்றனர்.

                முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் யோகராசா நிதர்சனா என்ற யுவதியே, தங்கப்பதக்கம் வென்று சாதனை
                படைத்து நாட்டிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

                  எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

                  அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெற வந்த 85 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                  கடந்த 26ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

                  உயிரிழந்தவர் அதுருகிரிய, போரே, கல்பொட்ட வீதியைச் சேர்ந்த எம். ஜினதாச பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                  வேனில் எரிபொருள் எடுக்க வந்த நபர் வரிசையில் மூன்றாவது நபராக நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அத்துருகிரிய பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                  உயிரிழந்தவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  சம்பவம் நடந்த போது பெட்ரோல் பங்கில் நெரிசல் ஏதும் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.

                  அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கல்முனையில் மயக்கமருந்து தெளித்து கொள்ளை

                  கல்முனையில் மயக்கமருந்து தெளித்து கொள்ளை

                  கல்முனையில் வீடொன்றுக்குள் நேற்றிரவு (27) புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்துக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

                  சம்பவத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                  மயக்கம் வருவதற்கான திராவகம் தெளிக்கப்பட்டே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                  இதில் வீட்டில் இருந்த நால்வரே பாதிக்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

                  நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை போன்ற காரணங்களால் பல பிரதேசங்களிலும்
                  அதிகமான திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்- நாமல்

                  அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்- நாமல்

                  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துப்படி அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள்

                  முன்னுதாரணமாக செயற்பட்டால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

                  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும்

                  தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையைய குறைக்குமாறு தெரிவித்திருந்தார்.

                  அப்படியானல் அவர்கள் முன்னுதாரணமாக தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தால் நான் பதவி விலகத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள்

                    இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 55 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                    மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று (27) காலை 08:47க்கு தரையிறங்கியது.


                    தீயணைப்பு வாகனங்கள் இரண்டு, தண்ணீரை பீச்சியடித்து முதலாவது விமானத்தை வர​வேற்றன.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மகிந்த குடும்பத்தை எதிர்க்கும் எவருடனும் இணைய தயார் பாட்டாளி

                      ராஜபக்ஷக்களுக்கு எதிராகச் செயற்படக்கூடிய எந்தவொரு அரசியற் கட்சிகளுடனும் செயற்படத் தயார் என 43ஆவது படையணின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு விடுத்துள்ளார்.

                      ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள் அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என ராஜபக்ஷக்களை எதிர்க்கும் எவருடனும் இணைந்து செயற்படத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                      தற்போது ஆட்சியில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்குப் பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது காலத்தின் தேவை. அதனால் பாரிய புதியக் கூட்டணி ஒன்றை

                      உருவாக்குவதற்கு நாம் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

                      ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, எங்களின் அழைப்பை ஏற்று 43ஆவது படையணி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதனாலேயே கடந்த

                      வெள்ளிக்கிழமை ஐ.தே.க.வினால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளோம். மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி


                      ஆகியக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்காலத்தில் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்தார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மின்னல் தாக்குதலில் சிக்கிக் 25 பேர் காயம்

                      மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின் சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளது

                      இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

                      மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளனர்.

                      மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின் சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளது

                      இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        பலமிழக்கும் கோட்டா – கட்சி தாவிட தயராகும் கட்சிகள்

                        பலமிழக்கும் கோட்டா – கட்சி தாவிட தயராகும் கட்சிகள்

                        இலங்கையில் நிகழ்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையே அடுத்து தற்போது ஆளும் அரசாங்கம்
                        ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது

                        மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது ,இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்


                        கட்சியும் அரசங்காத்தய் விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுளளதாக தெரிவித்துள்ளது

                        தொடர்ந்து நாடெங்கும் போராட்டங்களை எதிர்க்கட்சி நடத்திய வண்ணம் உள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கை வரும் இந்தியா வெளியுறவு மந்திரி

                          இலங்கை வரும் இந்தியா வெளியுறவு மந்திரி

                          இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ வியத்தினை மேற்கொண்டு வருகிறார்

                          இவர் இரண்டு நாள் இலங்கையில் தங்கி இருந்து உயர் மட்ட பேச்சுக்களில் ஈடுபடுவார் என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in இலங்கை செய்திகள்

                          பறங்கி அற்று – மணல் கொள்ளையர்கள் கைது

                          முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பறங்கியாற்று பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் சாரதிகள் நட்டாங்கண்டல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது

                          நட்டாங்கண்டல் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                          கைது செய்யப்பட்டுள்ள குறித்த இரு உழவு இயந்திரங்ளையும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகன சாரதி இருவரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                          முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்கு பொலிஸாரின் ஆதரவுடன் மணல் கொண்டு செல்லப்படுவதாக கடந்த மாத பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்களால் குற்றச்சாட்டுகள்

                          முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில்
                          ஈடுபடும் வாகனங்கள் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.