Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு காப்போம் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையிலுள்ள வயோதியக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14) திருகோணமலை விபுலானந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள நிருவாக உத்தியோகத்தர் (திருமதி) எஸ்.நவேந்திரராஜா, திருகோணமலை மகளிர் உதவி அறக்கட்டளைத் தலைவி (திருமதி) நாகேந்திரன் ஆஷா உள்ளிட்ட காப்போம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர், நிருவாக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருகோணமலையிலுள்ள வறிய வயோதிபமான 60 குடும்பங்களுக்கு தலா 2500.00
ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகளை இன்றைய நிகழ்வின் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
அபு அலா –
சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு
சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு
இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு பல பகுதிகளில் சாராய கடைகள் அடித்து பூட்ட மதுவாரி திணைக்களம் முடிவெடுத்துள்ளது .
மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியாக கழிக்கவும் ,குடி மகன்கள் தொல்லை இல்லாது அந்த நாளை கழிக்க இந்த நடவடிக்கை எடுக்க படுகிறது .
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
கடந்த 24ஆம் திகதி ரீயூனியன் தீவில் தரையிறங்கிய 46 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் 69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ளனர்.
இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் இன்று காலை தீவை சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பிலிருந்து சென்றவர்கள் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 46 பேர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
13 முதல் 53 வயதிற்குட்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் , மட்டக்களப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
விமானம் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 46 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே 69 பேருடன் சென்ற மற்றொரு படகு குறித்த தீவை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018 மார்ச் மற்றும் 2019 ஏப்ரலுக்கு இடையில், இலங்கையிலிருந்து 275 பேர் ரீயூனியனுக்கு சென்றுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து நான்கு கப்பல்கள் மொத்தம் 122 பயணிகளுடன் தீவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் கோரி விண்ணப்பித்த 397 புலம்பெயர்ந்தவர்களில் 121 பேர் பிரான்ஸுக்கு சொந்தமான தீவில் இருக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.
மனைவியை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவன்
மனைவியை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவன்
பொரளை, சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (13) இரவு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவன்
கொலையை செய்த நபர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் மரண விசாரணை இன்று (14)
நடைபெறவுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் 11 மாத சிசுவை கற்பழித்த பெரியப்பா
யாழில் 11 மாத சிசுவை கற்பழித்த பெரியப்பா
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பிறந்து 11 மாதமான பெண் சிசுவை அவரது பெரியப்ப கற்பழித்துள்ளார் .
கற்பழிப்பு குற்ற சாட்டில் பெரியப்ப கைது செய்யப்பட்டு நீதிமன்றின் முன் நிறுத்த பட்டுள்ளார் .
கிளைமோர் வெடிகுண்டு மீட்பு
கிளைமோர் வெடிகுண்டு மீட்பு
இலங்கை பகுதியில் கிளைமோர் வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன.
வெலிகந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வாழைமரத்துக்கு அடியில் ,புதைக்க பட்ட நிலையில் ,காணப்பட்ட குண்டு ,வெடிகுண்டு செயல் இழக்கும் படையினரால் மீட்க பட்டுள்ளது .
குறித்த குண்டு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள்
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டு மக்களின் நலன்சார்தவை அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டு மக்களின் நலன்சார்தவை அல்ல வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது.
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன என்றார்.
ரெஜினோல்ட் குரே காலமானார்
ரெஜினோல்ட் குரே காலமானார்
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்.
வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவு வண்டி மூலம் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு,
வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து
பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, இன்று காலை சிறுப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் சென்று மோதி விபத்துக்குள்ளாக்கி உள்ளது.
இதனால் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சுக்களில் கூட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்ட வேளையில் தேர்தலுக்குத் தேவையான
பணத்தைக் கொண்டுள்ளமையால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூhராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கமும் பொஹொட்டுவவும் சதி செய்வதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை
நிராகரித்த அமைச்சர், தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கோ பொஹொட்டுவாவுக்கோ இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
உடுகம்பலையில் அமைந்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அலுவலகத்தில் (12) வேட்புமனு கையொப்பமிடப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 19 ஆகும். இதன்படி 413 பிரதேசங்களுக்கான வேட்புமனுவில் 417 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது 11 மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்
கம்பஹா, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்கள் கைச்சாத்திடப்பட்டன. எதிர்வரும் சனிக்கிழமைக்குள் பொஹொட்டுவ தனது வேட்பாளர் நியமனப் பட்டியலை கையொப்பமிட்டு இறுதி செய்யவுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த திரு.பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது,
“பொஹொட்டுவ என்பது கிராம மட்டத்தில் வலுவான அடித்தளத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கட்சியாகும். இத்தேர்தலில், மற்ற அனைத்து அரசியல் கட்சிகளை விடவும் எதிர்கொள்ளக்கூடிய வலுவான அணி எங்களிடம் உள்ளது
. அந்த வேட்பாளர்கள் அனைவரும் கிராமங்களில் பணிபுரிந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனுபவமுள்ள, மக்களுக்கு சேவை யாற்றிய, உழைத்த ஒரு குழுவினர் இத்தேர்தலில் முன்னிறுத்தப் பட்டுள்ளனர்.
எங்கள் அணி வாய்ப்பேச்சு மட்டும் கொண்டவர்கள் அல்ல. இந்த தேர்தலில் போட்டியிடுவது ஆணவமும், பயனற்றவர்களும் அல்ல. வேலை செய்து காட்டியவர்கள் தான் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை. மிகவும் கடினமான காலங்களில் இதுபோன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம்.
அரசு என்ற முறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இரண்டு. அரசாங்கம் என்ற வகையில், இந்த பொருளாதார நெருக்கடியுடன் கூடிய அரசாங்க
ஊழியர்களின் சம்பளம், சுபீட்ச சலுகைகள் மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பிரச்சனைகளை நாங்கள் அறிவோம். இன்று பொருளாதாரம் ஓரளவுக்கு நிர்வகிக்கப்பட்டு
மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வரும் இவ்வேளையில் தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்கின்றனர்.
தேர்தலில் பணம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த காலங்களில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இல்லாமல் அரசாங்க ஊழியர்கள் தேர்தலுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டது.
அதற்கு தேர்தல் ஆணையாளர் பொறுப்பேற்கத் தயாராக இருந்தால், நாங்கள் தேர்தலைச் சந்திக்கத் தயார். ஒதுக்கீட்டில் சிக்கல் இருப்பதால், எங்கள் அமைச்சுக்களில் பல நிதிக் குறைப்புக்கள் செலவு குறைப்புக்கள் ஏற்பட்டதன்
பின்னணியில் இந்தத் தேர்தலைப் பற்றி பேசுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் பணம் இருப்பதால், வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.
தேர்தலுக்குத் தேவையான பணத்தைக் கண்டுபிடிப்பது அவர்களின் பொறுப்பு.
கட்சி என்ற வகையில் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.
யாழில் மீனவர்கள் போராட்டம்
யாழில் மீனவர்கள் போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீளல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளனர்.
குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது தொடர்ந்து பேரணியாக சென்று யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திலும்,
அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களை கையெழுத்துள்ளனர்.
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
இலங்கை கொழுப்பு தேவாலயங்களில் நடத்த பட்ட குண்டு தாக்குதலை தடுக்க தவறினார்கள் என்கின்ற குற்ற சாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
மைத்திரிக்கு 100 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் அரச புலனாய்வாளர் தலைவர் நிலந்த ஜேவர்த்தன 75 மில்லியன் ,முன்னாள் காவல்துறை அதிபர் பூஜித்த ஜேசுந்தர 75 மில்லியன் ,முன்னாள் பாதுகாப்பபு செயலர் கோமஸ்ரீ பெர்னாண்டோ 50மில்லியன் ,
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
முன்னாள் குற்ற புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் , இழப்பீடு வழங்க உத்தரவிட பட்டுள்ளது .
மேலும் காயமடைந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் ரூபா வழங்க வேண்டும் என உத்தரவிட பட்டுள்ளது .
இந்த குண்டு வெடிப்பில் 269 பேர் பலியாகியும் 500 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிட தக்கது .
கனடா தமிழர் காதை அடித்து கிழித்த பெண்
கனடா தமிழர் காதை அடித்து கிழித்த பெண்
யாழ்ப்பாணத்தில் கனடாவில் இருந்து சென்ற ஆண் ஒருவரது காதை அடித்து கிழித்துள்ளார் ,அங்கிருந்த பெண் ஒருவர் .
காரைநகர் கசூரினா பீச்சில் குளித்து கொண்டிருந்த கனடா நபர் போதையில் ,இளம் பெண் ஒருவரிடம் தகாத வார்த்தைகளை பேசி சீண்டியுள்ளார் .
ஆத்திரமுற்ற பெண் அவர் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை காத்திருந்து அவரது கன்னத்தில் ஓங்கி விட்ட அறையில் ,அவரது காது கிழிந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார் .
வீர மங்கைக்கு வாழ்த்துக்கள் என நெட்டிசன்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பறக்க விட்ட வண்ணம் உள்ளனர்.
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழக நிதி உதவி பொருட்களை இராணுவம் வழங்கியது
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழக நிதி உதவி பொருட்களை இராணுவம் வழங்கியது
ஊரியன்கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பரிசு
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வாகரை, ஊரியன்கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கு நிகழ்வு, ஊரியன்கட்டு பாடசாலை மண்டபத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் வை. மங்களதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கௌரவ அதிதிகளாக வாகரை பிரதேச 233 ஆவது படைப் பிரிவின் பிரிக்கேடியர் வசந்த கேவகே, நாவலடி கஜபா ரெஜிமன்ட படைப்பிரிவின் உயர் அதிகாரி லசந்த, கல்குடா வலயக் உளவளத் துறை உதவி கல்விப் பணிப்பாளர் விஷ்வ ஜித்தன் ஆகயோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுமார் 200 குடும்பங்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினர் இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
இலங்கையில் வெளிநாட்டு ஆடம்பர கப்பல் 785 பேருடன் தரிப்பு
இலங்கையில் வெளிநாட்டு ஆடம்பர கப்பல் 785 பேருடன் தரிப்பு
உலகில் மிக பெரும் ஆடம்பர பயணிகள் கப்பல் ஒன்று 785 பயணிகளுடன் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது .
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கையில் ,
இரண்டு நாட்கள் தரித்து நின்று தனது திசை நோக்கி பயணிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
இந்த நிலையில், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து மருதானை பகுதியில் வைத்து சந்தேக நபர் தப்பிச்செல்ல முயற்சித்தபோது, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளராக பணியாற்றிய,
ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது
வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது
இலங்கை இருபாலை பகுதியில் வீடு புகுந்து கணவன் மனைவிக்கு வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது செய்யப் பட்டுள்ளார் .
பாத்து நாட்களாக ரகசிய இடம் ஒன்றில் மறந்திருந்த பொழுது ,காவல்துறையினரால் குறித்த நபர் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
இவரது கோழிக்கூட்டுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் ,வாள் ஒன்றும் மீட்க பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணபடுகிறது .
துப்பாக்கி சூடு ஒருவர் படுகொலை
துப்பாக்கி சூடு ஒருவர் படுகொலை
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் ,குடும்பஸ்தர் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .
பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டு ,மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த நபர் மீது, பற்றைக்குள் மறைந்திருந்த நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளார் .
சடலம் மீட்க பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளது .
இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
போதையை ஒழிப்போம் – மாணவர்களை காப்போம்
போதையை ஒழிப்போம் – மாணவர்களை காப்போம்
பொத்துவில் ரோயல் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் “போதையை ஒழிப்போம் – மாணவர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில்
திருகோணமலை முதல் பொத்துவில் அருகம்பை வரையிலான தனி நபர் சைக்கிளோட்டம் இன்று (11) காலை 6.30 மணியளவில் கிழக்கு மாகாண சபை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சைக்கிள் ஓட்டத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
(திருமதி) ஜே.ஜே.முரளிதரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின்
பிரதிப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(அபு அலா)






























