திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

தந்தையை வெட்டிக் கொன்ற மகன்கள்

தந்தையை வெட்டிக் கொன்ற மகன்கள்

தந்தையின் துன்புறுத்தலைத் தாங்க முடியாத 3 பிள்ளைகள் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவி்க்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் கொடிகாமம் மிரிசுவில் பகுதியைச் சேர்ந்த 21, 20 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரர்கள் மூவரும் சேர்ந்து கொலையை செய்து இருப்பதாகவும் கொலை செய்யப்பட்ட 44 வயதுடைய அவர்களின் தந்தை, கராத்தே சிவா என அழைக்கப்படும் சிவசோதி சிவகுமார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்களிடம் பொலிஸார் விசாரணை நடாத்திய போது, சிறிது காலமாக தந்தையின் தொல்லை தாங்க முடியாததால் அவரை வெட்டிக் கொன்றதாக தெரிவித்துள்ளனர்.

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி

தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி

இன்று (02) காலை எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரத தண்டவாளத்தில் அமர்ந்திருந்த ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நபர், வாத்துவ மொல்லிகொட, சாந்த பற்றிக் வீதியில் வசித்து வந்த குணசிங்க சமந்த சந்திரகுமார சில்வா என்ற 36 வயதானவர் ஒரு பிள்ளையின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானையிலிருந்து மாத்தறை செல்லும் எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரதம் மொல்லிகொட பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை மோதியதால் அவர் உயிரிழந்ததுடன் சடலம் களுத்துறை வடக்கு புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்

பிச்சைக்கார வேடம் பூண்டு மட்டக்களப்பு நகரில் துவிச்சக்கரவண்டியை திருடிச் சென்றவர், வௌ்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான இவர், பொலிஸின் ஜஆர்சி பட்டியலில் உள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டுள்ளது. மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார் .

பாடசாலை மாணவன், நகரில் மத்திய வீதியிலுள்ள உணவு கடை ஒன்றின் முன்னால் துவிச்சக்கரவண்டியை மார்ச் 22ஆம் திகதி நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பிய போது 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான துவிச்சக்கரவண்டி திருட்டுபோயுள்ளது

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டடையடுத்து பொலிஸார் அந்த பகுதி வீதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்கள் மூலம் திருடனை தேடிவந்தனர். அதிலிருந்த காட்சிகளின் அடிப்படையிலே​யே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பில், ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, பொலிஸ் ஜஆர்சி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர் எனவும் தெரியவருகின்றது,

இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று சனிக்கிழமை(01) ஆஜர்படுத்திபோது எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

சரிந்த ராஜபக்ஸ கோட்டை வெறுக்கும் மக்கள் video
Posted in இலங்கை செய்திகள்

சரிந்த ராஜபக்ஸ கோட்டை வெறுக்கும் மக்கள் video

சரிந்த ராஜபக்ஸ கோட்டை வெறுக்கும் மக்கள் video

இன்றைய இலங்கையில் சரிந்த ராஜபக்ஸ கோட்டை,
வெறுக்கும் இலங்கை ,தமிழ்,சிங்கள ,முஸ்லீம் மக்கள் .
வெளியான புதிய மக்கள் கருத்து கணிப்பில் ராஜபக்ஸ
செல்வாக்கு சரிந்து கீழ் நிலைக்கு சென்றுள்ளது .

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ ,கோட்டபாய ராஜபக்ஸ ,
ஆகியோரும் பொது மக்களால் வெறுக்க படும் நபர்களாக மற்றம் பெற்றுள்ளனர்

இந்த புதிய கருத்து கணிப்பு மகிந்த குடும்ப அரசியல் முடிவுக்கு வந்துள்ளதாகவும்
தேர்தலில் பலத்த தோல்வியை சந்திப்பார்கள் என ,
பெறப்பட்ட கருத்தியல் விருப்பு தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மாபெரும் கண்டனப் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் மாபெரும் கண்டனப் போராட்டம்

வடக்கில் மாபெரும் கண்டனப் போராட்டம்

வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் யாழ்ப்பாணம் சங்கானைச் சந்தியில் இன்று காலை இப் போராட்டம் நடைபெற்றது.

இதன் போது வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து, கிண்ணியா எங்கள் சொத்து, நெடுந்தீவு எங்கள் சொத்து, கச்சதீவு எங்கள் சொத்து, அழிக்காதே அழிக்காதே தமிழினத்தை அழிக்காதே, தொல்லியல் திணைக்களமே வெளியேறு, வெளியேறு வெளியேறு படைகளே வெளியேறு, எங்கே எங்கே

வடக்கில் மாபெரும் கண்டனப் போராட்டம்

உறவுகள் எங்கே, தமிழர்களின் தீர்வு சுயாட்சியே, எடுப்பது பிச்சை அறுப்பது எங்களின் கழுத்தையா, நீக்கு நீக்கு பயங்கரவாத தடை சட்டத்தைநீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, வேணாலும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ல் தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

159 வருட பொலிஸ் வீரர் தினம்
Posted in இலங்கை செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மூவர் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மூவர் கைது

மிரிஹானயில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான – ஜூபிலிகணுவவிற்கு அருகில் நேற்று (31) மாலை போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, சமூக செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார , டானிஷ் அலி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஆடை தொழிற்சாலை நிர்வாகி மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

ஆடை தொழிற்சாலை நிர்வாகி மீது தாக்குதல்

ஆடை தொழிற்சாலை நிர்வாகி மீது தாக்குதல்

கட்டான பிரதேசத்தில் உள்ள ஒமான் நாட்டு ஆடை தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் கல்ஃபான் அல் ஒபைதானி என்பவர் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அவரது பங்களாவில் நேற்று முன்தினம் (10) இரவு 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது அவர் தங்கி இருந்த பங்களாவும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த கும்பல்களால் தாங்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவதாக ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆடை தொழிற்சாலை நிர்வாகி மீது தாக்குதல்

தாக்கப்பட்ட கல்பான் ஒபைதானி (55 வயது) தற்போது ஸ்ரீ ஜெயவர்தன புர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆடை தொழிற்சாலை காவலாளியும் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பில் பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒமான் அல் ஒபைடானி ஆடை பிரைவேட் லிமிடெட் என்பது ஓமானில் முன்னணி ஆடை தொழிற்சாலையான அலோபைடானி ஸ்டோரின் சகோதர நிறுவனங்களில் ஒன்றாகும்.


நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில் இவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஆளும் தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு அரசியல்வாதிகள் பலரும் கண்டித்துள்ளனர்.

கம்பஹ மாவட்ட இராஜாங்க அமைச்சர் ஒருவரின் சகோதரரே இந்த
சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக தெரிய வருகிறது.

Error: View 9293b2au4w may not exist
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது

கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது

மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை பகுதியில் நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் புதையில் தோண்ட முயற்சித்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது

வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அவரின் கீழ் கடமையாற்றும் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தேரர் ஒருவர் உட்பட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த குழுவினர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இராணுவத்திற்குரிய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் புதையல் கண்டறிவதற்காக பயன்படுத்துவதற்கு கொண்டுவந்த நவீன கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கரடினாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி
Posted in இலங்கை செய்திகள்

கல்வி முறையில் மாற்றம்

கல்வி முறையில் மாற்றம்

கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகள் தமது கல்வி முறையை எதிர்கால தொழில்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ள போதிலும், இலங்கை இன்னும் அவ்வாறு செய்யவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்

யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்

யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 43 வயதுடைய தந்தை ஒருவரை ,இரு மகன்கள் ,இணைந்து வெட்டி கொன்றுள்ள கொடிய சம்பவம் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தாயை பிரிந்து தனிமையில் வசித்து வந்த தந்தையின் ,குடிலுக்கு சென்ற இரு மகன் மற்றும் நண்பர் ஆகியோர் இணைந்து ,தந்தை மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .

இந்த வெட்டு தாக்குதலில் தந்தை சம்பவ இடத்தில பலியானார் .

தயைனை பிரிந்து வசித்து வரும் ,தந்தை தம்மை கொடுமை படுத்தி வந்த நிலையில் ,இந்த கொலை வெறி வெட்டு தாக்குதலை நடத்தியதாக மகன்கள் தெரிவித்துள்ளனர் .

யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் அண்ணன் ,தந்தையை வெட்டும் பொழுது தம்பிக்கு காயம் ஏற்பட்டுள்ளது .காயத்திற்கு உள்ளானவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .

அப்போது அவர்களிடம் விசாரித்த வைத்தியர்கள் ,கேள்விகளுக்கு முரண்பாடான பதில் வந்த நிலையில் போலீசாருக்கு தெரிய படுத்திய நிலையில் மேற்படி தந்தையை வெட்டு கொன்ற கொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது .


யாழில் தந்தையை வெட்டிய மகன்கள் 18.19.வயதுடையவ்ரகள் என்பது இங்கே கவனிக்க தக்கது .

எங்கே செல்கிறது யாழ்ப்பாணம் …?

4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்

4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வரும், பத்து வயது சிறுமி ஒருவர் ,மூவரால் நான்கு வருடங்களாக ,பாலியல் துஷ்பிரயோகம் செய்ய பட்டு வந்துள்ளார் .

சம்பவ தினம் அன்று ,பாடசாலைக்கு சென்ற மாணவி ,தனக்கு நிகழ்ந்த விடயத்தை ,தனது வகுப்பாசிரியரிடம் கூறி கதறியுள்ளார் .

உண்மை தன்மையை கண்டறிந்து விசாரணை நடத்திய டீச்சர் ,
சிறுவர் நன்னடத்தை பிரிவிற்கு தெரியப்படுத்தியுள்ளார் .

4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

விரைந்து வந்த போலீசார் துஷ்பிரயோகம் செய்ய பட்ட சிறுமியிடம், வாக்குமூலம் பெற்று ,அதிரடி வேட்டையில் இறங்கினர் .

குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 16 வயது சகோதரன் ,தாயின் இரண்டாவது கணவர் .மற்றும் உறவினரான 56 வயது நபர் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர் .

சிறுமிக்கு நிகழ்ந்த நான்கு வருட பாலியல் துஷ்பிரயோகம் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .

Error: View 9293b2au4w may not exist
அம்மன் ஆலயத்தை அடித்து நொறுக்கிய யானைகள்
Posted in இலங்கை செய்திகள்

அம்மன் ஆலயத்தை அடித்து நொறுக்கிய யானைகள்

அம்மன் ஆலயத்தை அடித்து நொறுக்கிய யானைகள்

அம்மன் ஆலயமான நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை ,யானைகள் அடித்து நொறுக்கிய சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .

கடந்த தினம் இரவு நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த ,ஐந்து யானைகள் ,அந்த ஆலய மதில்களை உடைத்து ,களஞ்சிய சாலையில் இருந்த அரிசியை எடுத்து உட்க்கொண்டுள்ளனர் .

மேலும் அந்த ஆலயத்தில் நின்ற மிக பெரும் மாமர கிளைகளை உடைத்து இருந்துள்ளது .

யானைகள் புரிந்த அட்டகாச தாக்குதலில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது .


காவலாளி அங்கிருந்த பொழுதும் யானைகளின் தாக்குதலின் பொழுது அவர் அச்ச முற்ற நிலையில் ,யானையை விரட்டது தன்னை பாதுகாத்து கொண்டார் என ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய குழு தெரிவித்துள்ளது .

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி

இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம்
குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும்
ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வியாழக்கிழமை (30) முற்பகல் நடைபெற்ற IMF மற்றும் அதற்கு
அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்
விடயத்தைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

டி.எஸ். சேனாநாயக்கவின் முன்மொழிவுகளுக்கு அமைய செயற்படாதது மற்றும் 1965 ஆம் ஆண்டு
ஷெனோய் அறிக்கையை அமுல்படுத்தாதது உட்பட அபிவிருத்தியை அடைவதற்கான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டதை நினைவுகூர்ந்தார்.

1978 இனப்பிரச்சினையால் நாட்டின் முன்னேற்றம் மந்தமடைந்ததாகவும், அதன் மூலம் நாட்டில்
மீண்டும் அபிவிருத்திக்கான அடித்தளத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்ததாகவும்
தெரிவித்தார்.

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி

பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளதாகவும், நாடு அதனை நோக்கிச் செல்வதுடன், விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன
ஏற்கனவே நாட்டின் வளங்களை அதிகம் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும்
பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவைப்படுவதாகவும் இங்கு ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

வெட்டுக்காயங்களுடன் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திடீரென தோன்றிய சிவலிங்கம்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென தோன்றிய சிவலிங்கம்

திடீரென தோன்றிய சிவலிங்கம்

திடீரென யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.

குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது.

குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவலிங்கம் காணப்படும் இடத்யிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

வரக்காபொல விபத்தில் ஒருவர் மரணம் | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்

விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்

விபத்தில் ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு ரஷ்ய பிரஜைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

மாத்தறை – கடவத்தை பகுதியில் இருந்து பயணித்த லொறி ஒன்றும், குறித்த குழுவினர் பயணித்த வேனும் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த வேன் சாரதி 25 வயதுடையவர் மற்றும் 59 வயதுடைய ரஷ்ய ஆண் ஒருவரும் ரஷ்ய பெண் ஒருவரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டிக் கொடுத்துள்ளனர்

உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டிக் கொடுத்துள்ளனர்

சோசலிசம், பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் தரப்புகள் அதிகாரத்துக்காக தங்கள் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான கட்சி என்ற வகையில்,
மனிதாபிமான முதலாளித்துவத்தை எப்போதும் நம்புவதாக தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் த புளு பிரின்ட் பொருளாதார மாநாடு புதன்கிழமை (29) காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

நமது நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை என்றும் இந்த கோட்பாட்டை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஓர் அரசாங்கத்தால் செல்வத்தை உருவாக்க முடியாது எனவும், சமூக சந்தைப் பொருளாதாரத்தை
மையமாகக் கொண்ட தேவை மற்றும் வழங்கலை அடிப்படையாகக் கொண்ட சந்தை சக்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியாண்மைகளுக்கு முன்னுரிமையளிப்பதே செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும் எனவும் தெரிவித்தார்.

உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டிக் கொடுத்துள்ளனர்

இந்த முதலாளித்துவம் ஒருசிலரை போஷிப்பதானதாகவே அல்லது நட்பு வட்டார முதலாளித்துவமாகவோ இருக்கக் கூடாது என்றும்,நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானதாக அது அமைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பவர்களிடம்
சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர வேறு வழிகள் உள்ளதா என்று கேட்க வேண்டியுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.

தாம் பார்ப்பது போல், சர்வதேச நாணய நிதியத்தை சரியாக கையாள்வதன் மூலம் நாடு முகம்கொடுக்கும் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள முடியும் என்றாலும், சர்வதேச நாணய
நிதியத்தை தமதமாக அணுகியதால் வலுவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை எட்ட முடியாது
போனதாக சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமை குறித்து
எதிர்க்கட்சியிடம் விமர்சனங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தா

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது

விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது

விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (31) பிற்பகல் திடீரென நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் தொடர்புபட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் - பெண் ஒருவர் வைத்தியசாலையில்
Posted in இலங்கை செய்திகள்

சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்

சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்

சாணக்கியன் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை (30) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு முன்னெடுத்த போராட்டம் காரணமாக மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இன்று காலை மாவட்ட செயலகத்தின், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே, முறுகல் நிலையேற்பட்டதுடன், மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு வாயில் கதவுகள் மூடப்பட்டன.

சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்

இதன்போது மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு மாவட்டச் செயலக கதவினை மறித்து பொதுமக்களும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வாகனேரி பகுதியில், சூரிய மின்கல மின்திட்டத்தினை அமைப்பதற்காக, விவசாய காணியை எடுக்க முனையும் செயற்பாட்டைக் கண்டித்தும், வாகரைப் பகுதியில், இல்மனைட் அகழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை நிறுத்தக்கோரியும், வாகரைப் பகுதியில், காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடாத்தாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினை நடாத்தி, காணி தொடர்பான தமக்கு சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதேநேரம், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை உள் நுழைவதற்கு அனுமதிக்காத நிலையில், பொலிஸாருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையும் காணக்ககூடியதாக இருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால்

வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான

நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக

No posts found.