இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள், இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் வான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .
லெபனான் எல்லையோரமாக இருந்து இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மற்றும் குடியேற்ற பகுதிகளை தாக்கும் நோக்குடன் பறந்து வந்த ,
ஹிஸ்புல்லா அமைப்பின் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் அயாண்டோம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .
இஸ்ரேல் எல்லைக்குள் இந்த விமானங்கள் நுழைந்த பொழுதும், அவை அபாய ஒலி எழுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது .
விமான தாக்குதல் செய்திகள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்கள்
சைரன்கள் ஒலியில் சிக்காத புதிய வகை விமானமாக இவை காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
அவ்வாறான கொடிய தாக்குதல் விமானங்களை வெற்றிகரமாக இஸ்ரேல் வான்படை தடுத்து சுட்டு வீழ்த்தியதால், சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் காசா போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து இதுவரை நங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற பாணியில் இஸ்ரேல் படைகள் தமது இழப்புக்களை கூறி வருகின்றனர் .
அவ்வாறன ஒரு கருத்தாகவே இந்த விமானம் சுட்டு வீழ்த்தல் ,செய்தியும் அமைய பெறலாம் என நம்ப படுகிறது .
- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது
- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு
- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்
- ஐரோப்பாவை சாடிய ஈரான்
- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்
- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி
- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்
- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை



















