தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. அகழ்வுப் பணியின் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் முன்னிலையில் இருந்தனர்.
தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியான பணி நாளை 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்
- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி
- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி
- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு
- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்
- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
















