ராக்கி சாவந்த்யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
யோகி பாபு
தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில், நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
புகார் மனு விவரம் வருமாறு:-
யோகி பாபு
நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும்
தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன.
முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்







