ரஷ்யா கடும் தாக்குதல் உக்கிரேனுக்கு இழப்பு
ரஷ்யா கடும் தாக்குதல் உக்கிரேனுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன .
இன்று அதிகாலை வேளையில் உக்கிரேன் மீது ரஸ்யா ராணுவம் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி கடும் ஏவுகணை தாக்குதலை இடைவிடாது நடத்தினர்.
இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்கள் மீது விழுந்து வெடித்ததில் நான்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் மேலும் பல காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காயமடைந்த 10 பேரில் சிறுவர்களும் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாடசாலைகள் மற்றும் மக்கள் வாழ்விடங்கள் என்பன தீயில் எரிகின்ற காட்சிகள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன.
இரண்டு ஆண்டுகள் கழிந்து இடம்பெற்று வரும் எந்த யுத்தத்தில் பலமாக பாதிப்படைந்து காணப்படுவதுடன் சொல்லெண்ணா துயரையும் இழப்புக்களையும் அந்த மக்கள் சந்தித்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.












