பிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு

Spread the love

பிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு கோப்பையை வென்ற ஆரிக்கு, போலீஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

பிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு
படக்குழுவினருடன் ஆரி


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். இந்நிலையில், நடிகர் ஆரி,

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு புதுப்படம் ஒன்றில்

நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அபின் இயக்கும் அந்தப் படத்தில் ஆரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து

கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

படக்குழுவினருடன் ஆரி

இதுதவிர ராஜ மித்ரன் இயக்கியுள்ள அலேகா, களிங்கன் இயக்கியுள்ள

பகவான் போன்ற படங்களில் ஆரி நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

Leave a Reply