பாலஸ்தீனம் 194 வைத்து நாடாக மலர்வு
பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு ,பாலஸ்தீனம் வரலாறு விடுதலை பெற்றது எப்படி..?
இலங்கை தனி நாடாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்த மாதிரி 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலும் தனிநாடாக அறிமுக ப்படுத்த பட்டது .
அன்றில் இருந்து பலஸ்தீன மக்களும், எமது ஈழ மக்கள் பெரும்பான்மை இனத்தினரிடமிருந்து நசுக்க பட்டு வந்ததைப் போலவே, நசுக்கப்பட்டு நாடு இல்லாமல் ஆக்க பட்டனர் .
நக்பா படுகொலை
நக்பா படுகொலை அகதியாக துரத்தியடிக்கப்பட்டனர். நீண்டகாலமாக் தொடர்ந்த இந்தச் சம்பவமானது பலத்த சொத்திழப்புகள் உயிரிழப்புக்களைச்சம்பவம் சந்தித்த வண்ணம் தொடர்ந்திருந்தது.
தற்போது ஏற்பட்ட இஸ்ரேல் அரசின் மிலேச்சத்தனமான தாக்குதலில். 36 000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் 76000 பேர்காயமடைந்தும் உள்ளனர்.
இது இரண்டாவது நக்பா இனப்படுகொலையாக உலக நாடுகளால் கருதப்பட்டது.
இஸ்ரேல் நெதன்யாகுவின் இனப்படுகொலை
அதன் எதிரொலியாகவே இஸ்ரேல் நெதன்யாகுவின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்ப்பாக ,பலஸ்தீன தேசம் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு உட்பட்ட நாடுகளான ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளால் தனிநாடக அறிவிக்க பட்டுள்ளது .
இதே போலவே இலங்கையில் சிங்கள பெரும்பான்மை இனத்தினரால் எவ்வித உரிமைகளும் மறுக்கப்பட்ட
பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு
நில வன்பறிப்பு’ இனச்சுத்திகரிப்பு என்று நசுக்கப்பட்டு 33 வருடங்களுக்கு மேலாக தனிநாடு கோரிப் போராடி இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பல இலட்சம் மக்களுக்கு மேல் உயிரிழப்புகளைச் சந்தித்தனர் .
தனிநாட்டுக் கோரிக்கை
முடக்கப்பட்ட ஈழமக்களுக்கு உலகநாடுகள் எதுவும் இன்னும் இறங்காமல் தனிநாட்டுக் கோரிக்கையை இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது
எப்படியாயினும் அமெரிக்காவின் கோரமுகத்தினைப் பிரதிபலிக்கும் நாடான இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் ,
சமாதானத்தை பிரதிபலிக்கும் நாடான நோர்வே எடுத்துள்ள இந்த முடிவு தெற்காசிய நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தங்களுக்கு நல்லதொரு முடிவைத் தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு
இது இலங்கையில் ஈழ மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புச் சம்பவத்தின் எதிரொலிப்பாகவும் ,ஈழ மக்களுக்கும் நல்லதொரு முடிவைத் தரும் என்று ஒரு நம்பிக்கையை உருவாக்கும் தீர்வாகவும் கருத முடிகின்றது.
மேலும் தளராத உறுதியுடன் போராடி வெற்றி பெற்று தனிநாட்டைப் பெற்றுக் கொண்ட ,பலஸ்தீன மக்களுக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எழுத்துருவாக்கம் – நிலா தமிழ் –












