தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்திகதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள்
புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த
ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது
- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்
- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு
- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை
- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு











