கொரோனா வைரஸ் தாக்குதல் -3117 பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. இதில் சீனாவில் மட்டும் 2,944
பேர் இறந்துள்ளதாக இந்நாட்டு தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்
அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா உள்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் இறந்து வந்த நிலையில், தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலி
எண்ணிக்கையும் சிறிது குறைந்துள்ளது. அதேநேரம், உலகளவில் 90,922 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,
இவர்களில் 80,151 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.







