கொரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது

Spread the love

கொரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது

கொரோனா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன்?
ரஜினிகாந்த்


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி

இருந்தார். இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி நடிகர் ரஜினிகாந்த், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது, அது மூன்றாம் நிலைக்கு

சென்றுவிடக் கூடாது. இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது மக்கள் உதாசீனப்படுத்தியதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ரஜினிகாந்த்

கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும். சுய ஊரடங்கின் போது மக்கள்

ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் நடமாடும் பகுதிகளில் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். என பேசியிருந்தார்.

இந்நிலையில், ரஜினி பதிவிட்ட வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. ஏனெனில் ‘மக்கள் நடமாடும் பகுதிகளில் 14 மணி

நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு

பிறப்பிக்கப்பட்டபோது மக்கள் அதை உதாசீனப்படுத்தியதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக ரஜினி கூறிய கருத்துகள்

ஆதாரமற்றதாக இருப்பதால் அந்த வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.

கொரோனா குறித்து ரஜினி
கொரோனா குறித்து ரஜினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *