கொரனோவால் ஜெர்மனியில் வருமானம் இன்றி தவிக்கும் இரண்டு லட்சம் விபச்சார பெண்கள்
யேர்மனியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியால்
அந்த நாட்டில் விலை மாதுகள் தொழில் இன்றி தவித்து வருகின்றனர் .
இதில் பல்லாயிரம் பேர் சொந்த தொழிலாக விபச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர் .
இப்பொழுது கொரனோ வைரஸ் நோயால் முழு லக்கடவுன் செய்ய பட்டுள்ள நிலையில் வருமானம் இன்றி வீதிகளில் ,வீடற்றவர்களாக உள்ளனர் .
இவர்களுக்கு உரிய உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளது
இவ்வாறு இந்த விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் ,ருமேனியா,போலந்து ,பல்கெரியா நாட்டு பெண்களே அதிகம் என அந்த செய்தி தெரிவிக்கிறது
மேலும் மூன்று மாதங்கள் இதேபோல நிலைமை நீடித்தால் இவர்கள் இறக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அந்த அபாயத்தில் இருந்து
அவர்களை காப்பாற்றும் படி சமூக பெண்கள் பாதுகாப்பு அமைப்பினரால் கோரிக்கைகள் முன் வைக்க பட்டுள்ளன
சமூக நீதியில் அனைவரும் மனிதர்கள் என்பதை மனிதம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நீதியாக உள்ளது .