எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்
எமது எதிரியின் யுத்த நோக்குகள் அணு குண்டாக உள்ளது என்கிறது உக்கிரேன் ஆளும் அரசு .
உக்கிரேனை முற்றாக அழிக்கும் நோக்குடன் ,எதிரியான ரசியா அணு குண்டுகளை பயன் படுத்தி, தாக்குதல் நடத்த திட்டம் போடுகிறது என்கிறார் உக்கிரேன் ஜனாதிபதி .
நான்கு வாரத்திற்குள் இழந்த 500 சதுரகிலோமீட்டர் பரப்பளவை ,மீட்டவாறு உக்கிரேன் இராணுவம் ,முன்னோக்கி நகரந்த வண்ணம் உள்ளது .
மீட்க பட்ட பகுதிகளை பலப்படுத்திய வண்ணம், உக்கிரேன் இராணுவம் முன்னேறி தாக்கி வருகிறது .
இதனால் எதிரிகள் தமது பாசறைகள் நோக்கி பின்வாங்கி ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர் .
மேலும் எதிரிகளின் பாசறைகளில் உள்ள ஆயுத தளபாடங்கள் என்பனவும் உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்டு வருகிறது .
எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்
எதிரியின் பலத்தையும் ,அவனது பலவீனத்தையும் துல்லியமாக கணக்கிட்டு ,எதிரிகளை விரட்டி தாக்குதல் நடத்தி வருவதாக உக்கிரேன் இராணுவம் வீர வசனங்கள் பேசியவாறு உள்ளது .
எதிரியின் பலம் அணுகுண்டுகளாக உள்ள பொழுது ,அவ்வாறான அணுக்குண்டு தாக்குதல் இடம்பெற்றால் ,அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக உக்கிரேன் சிந்திக்க ஆரம்பித்துள்ளது .
உக்கிரேன் இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவல்கள்,எதிரியான ரசியா இராணுவம் கெமிக்கல் ,மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் என எதிர் பார்க்கிறது .
அவ்வாறான இரசாயன ஆயுதங்கள் மூலமே உகிரேனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் ,அல்லது அடிபணிய வைக்கலாம் என்பது ரசியாவின் நிலைப்பாடாக உள்ளது என்கிறது உக்கிரேன் .
எதிரியின் திடீர் பின்வாங்குதல் ,உக்கிரேன் இராணுவத்தினரை பொறிக்குள் தள்ளிவிடும் பேராபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது, என்கின்ற ஐயம் தற்போது உக்கிரேன் ஆளும் தரப்பிற்கும், இராணுவ மேல் மட்டங்களுக்கும் ஏற்பட்டுள்ளது .
இதனாலென்னவோ தற்போது உக்கிரேன் ஜனாதிபதி,
ரசியா அணுகுண்டு தாக்குதல்களை நடத்த போகிறது ,என்கின்ற செய்திகளை வேகமாக பரப்பி வருகிறார் .
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன









