உக்கிரேன் விமானத்தை தாக்கிய ஏவுகணை காட்சியை வெளியிட்ட வாலிபர் கைது

Spread the love

உக்கிரேன் விமானத்தை தாக்கிய ஏவுகணை காட்சியை வெளியிட்ட வாலிபர் கைது

ஈரான் – தலைநகர் டகரானில் உக்கிரேன் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய ஏவுகணை காட்சிகளை

அதே பகுதியில் உள்ள வாலிபர் ஒருவர் கை பேசியில் பதிவாக்கி சமூக வலைதளத்தில்
பதிவிட்டார் ,

அதுவே ஈரானுக்கு பெரும் நெருக்கடியை தருவித்தது ,இந்த பர பரப்பான சூழ் நிலையில் தற்போது ஈரானின் புரட்சி படையால் அவர் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார் .

இவ்வாறு கைது செய்ய பட்டவருக்கு மரண தண்டனை வழங்க படலாம் எனவும் ,இவரும் இந்த விமான தாக்குதலில்

ஈடுபட்டார் என தெரிவித்து இவருக்கு இந்த தண்டனை விதிக்க படலாம் என நம்ப படுகிறது

இவர் விளையாட்டாக இந்த காட்சியை பதிவாக்கி வெயிட்டாரா அல்லது ,திட்டமிட்டு செயல் பட்ட சதிகளின் ஊடக வெளியிட்டாரா எனபதும் ,வேறு ஏதும் அரசுக்கு

எதிரான அமைப்புக்களின் உறுப்பினரா என்பது தொடர்பாக முதல் கட்ட விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இந்த வாலிபன் குற்றம் புரிந்தார் என ஈரானின் வழமையான சட்டப்படி தூக்கு தண்டனை விதிக்க பட்ட்டால் அதுவே

ஈரான் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

இனி எவரும் இது போன்ற காட்சிகளை அவசரமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தால் இதுபோல வீணாக

உயிரிழக்க நேரிடும் என்ற அச்சத்தில் அவர்கள் அதனை வெளியிடாமல் இருக்கும் மிரட்டல் சம்பவமாக இது அமையலாம்

அதற்கு இவர் மீதுபல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் சுமத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு இவரது காணொளிகள் பெரும் உதவி புரிந்தன ,ஆனால் அவர்களினால் இவரை காப்பாற்ற முடியவில்லை

குறித்த வாலிபர் கைது செய்ய பட்ட நிலையில் அவரது குடும்பம் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ள நிலையில் அந்த கிரம பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது

முழுமையான் இராணுவ கண்காணிப்பில் அந்த கிராமம் வைக்க பட்டுள்ளதாம் ,எதுவும் எப்போதும் அங்கு நிகழும் வாய்ப்பு ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது

  • வன்னி மைந்தன் –
உக்கிரேன் விமானத்தை தாக்கிய
உக்கிரேன் விமானத்தை தாக்கிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *