ஈரானுடன் பேச பாகிஸ்தான் வந்தடைந்த அமெரிக்கா பேச்சு குழு
ஈரானுடன் பேச பாகிஸ்தான் வந்தடைந்த அமெரிக்கா பேச்சு குழு ,இஸ்லாமாபாத் வந்தடைந்த தூதுக்குழுக்களுக்கு பாகிஸ்தான் ‘ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை’ நடத்த அழைப்பு விடுத்துள்ளது
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கத் தூதுக்குழு வந்தடைந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பினரும் “ஆக்கப்பூர்வமான” பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என நம்பிக்கையும் அது வெளிப்படுத்தியுள்ளது.
மோதலுக்கு ஒரு தீர்வைக் காண வழிவகுக்கும் முயற்சிகளை இஸ்லாமாபாத் தொடரும் என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ்
முன்னதாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் மூத்த தூதர்களான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இஸ்லாமாபாத் வந்தடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நூர் கான் விமானப்படைத் தளத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்
ஆகியோரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் மற்றும் ராணுவத் தளபதி சையத் ஆசிம் முனீர் ஆகியோர் வரவேற்றனர்.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை









