இலங்கை வந்த பாகிஸ்தானியர் மூவருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2042 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது வரை 1678 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 826 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.