இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டிய கொரனோ நோயாளிகள்

Spread the love

இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டிய கொரனோ நோயாளிகள்

இன்று பிற்பகல் கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 314 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பேலியகொட மீன்விற்பனை சந்தை கொத்தணியைச்

சேர்ந்தவர்களாவர். 55 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தவர்கள்

என கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இன்றைய எண்ணிக்கையுடன் இலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின்

எண்ணிக்கை 10 ஆயிரத்து ஐந்தாக அதிகரித்துள்ளது. இவர்களில் 5,804 பேர்

தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 4 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ளனர்.

Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள்

10105 – உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

5804 – சிகிச்சை பெறும் நோயாளிகள்

314 – புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

4282 – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

Leave a Reply