நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்

Spread the love

நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்

நாளையுடன் (29) காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்களிகளின் கால எல்லை; மே மாதம் 31ஆம் திகதி

வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தள்ளார்.

இருப்பினும் பொதுவான அலுவல்களுக்கான அவசரகால அனுமதிப்பத்திரம் புதிதாக பெற்றுக் கொள்வது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்

      இன்று கொழும்பில் நடைபெற்ற செயதியாளர்களுடனான சந்திப்பில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்

      ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் தற்பொழுது ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு

      தற்காலிகமாக நீக்கப்பட்டது. நேற்றைய தினம் (28) இந்த மாவட்டங்களின் நகரங்களுக்கு பொதுமக்களின் வருகை

      குறைவாகவே காணப்பட்டது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் வீதிகளில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிவது

      கட்டாயமாகும். இவ்வாறான பின்புலத்தில் முகக் கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டிருந்த பிள்ளையொன்று

      பொலிஸ் அதிகாரியொருவரினால் முகக் கவசத்தை அணிந்து கொள்வதற்காக தமது பணத்தை வழங்கும் அளவிற்கு கருணை

      உள்ளம் வெளிப்படுத்தியமை காணக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார்.

      ஏனைய மாவட்டமொன்றிலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் அத்தியாவசிய சேவை

        வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை கந்தளாய் அக்போபுர பாதுகாப்பு சாவடியில் மேற்கnhள்ளப்பகிறது அங்கு நபர்கள் கிருமி ஒழிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

        இருப்பினும் இவ்வாறு வந்த சில வாகனங்களின் சாரதிகளுக்கு அவர் குடியிருக்கும் பிரதேசத்தில் சுகாதார பரிசோதகரினால்

        வழங்கப்படும் சுகாதார அறிக்கை இல்லாததினால் திருப்பி அனுப்பப்பட்டார்.

        ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 07 மற்றும் 08

        குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அவ்வாறானோர் நாளைய தினம் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக எந்தவகையிலும்

        குறிப்பிட்ட இடங்களைத் தவிர பிற இடங்களுக்கு செல்வதற்கு இடமளிக்க மாட்டாது.


        கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் அதிகாலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும்.

        மிகவும் அனர்த்தமிக்க மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதில்

        இராணுவத்தின் உடனடி செயலணி அதிகாரிகள் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ள

        ஊரடங்கு
        ஊரடங்கு

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *