நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
மலர்களே❗
சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
கார்த்திகை மாத
காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
வான்மழை பெய்யும்
கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.
மங்கையரே❗
எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
வந்து குடிகொள்ளப் போவதில்லை.
தேசம்மீட்க உயிர்துறந்த
தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.
சாமிகளே❗
கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
பக்தர்கள் பூத்தட்டுகளில்
காத்திருக்கப் போவதில்லை.
உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
உடல்களைத் தழுவப்போகிறோம்.
தேனீக்களே❗
உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
மாவீரரின் விடுதலை
வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.
மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
ஆசைக்காக மலரவில்லை.
புனிதர் நாளின்
பூசைக்காக மலர்ந்துள்ளோம்.
காய்ந்து விழும்
காலத்துக்காக மலரவில்லை.
கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗
-பிறேமா(எழில்)-
- லெபனானில் உள்ள எட்டு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல்

- சர்வதேச சட்ட மீறல்கள் உறுப்பு நாடுகளுக்கு ஈரான் அழைப்பு

- இதய அறுவை சிகிச்சைகளுக்காக 10 000 பேர் காத்திருப்பு

- இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய போர் கப்பல்

- மூளைக்காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது சுகாதார அதிகாரிகள்

- தில்வின் சில்வாவால் எப்படி முடிவை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும்

- ஈரானுடனான போரின் போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ‘இரகசியமாகப் பயணம் செய்ததாக’ நெதன்யாகு

- புத்தளத்தில் 24 மணி நேரத்தில் 250 மி.மீ-க்கு மேல் அதிகபட்ச மழை

- பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

- சீனா அமெரிக்கா நேரடி பேச்சு

- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை

- ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி

- கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்

- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- டிரம்ப் சீனா பயணம்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை

- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா







