ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ

Spread the love

ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ

இலங்கை ஜனாதிபதி பதவி விலக கோரி வீதி இறங்கி போராடட்ம மக்கள் தற்போது ஜனாதிபதி மாளிகை உள்ளே புகுந்து இரண்டாவது நாளாக தமது தமது கட்டுப் பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகையை வைத்துள்ளனர்.

அதி நவீன வசதிகளுடன் ஆடம்பரமாக வசித்து வந்த ஜனாதிபதிகளின் வாழ்க்கையை இந்த விடயம் அம்பல படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் காட்சிகள்இதோ

மக்கள் ஜனாதிபதி அமரும் முக்கிய ஆசனங்களில் அமர்ந்து புகைப்படங்கள் காணொளிகளை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர் .

தொடர்ந்து ஆயிர கணக்கில் மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

ஜனாதிபதி கோட்டா மற்றும் ரணில் பதவி விலகும் வரை தாம் ஜனாதிபதி மாளிகை உள்ளே தரித்து நிற்போம் என்கிறது மக்கள் கூட்டம்.

தற்போது ஜனாதிபதி மாளிகை மக்கள் கண்காட்சி பூங்காவாக மாற்றம் பெற்றுள்ளது.

இங்கே ஜனாதிபதி மாளிகை குறித்த பல காணொளி காட்சிகள் வைரலாகி வருகிறது .

ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய போலவே அவரது ஆசனத்தில் அமர்ந்து மகிழும் வாலிபர்கள் கிண்டல் பேச்சுக்கள் கலக்கலாக வைரலாகி வருகிறது.

மக்கள் பணத்தில் ஜனாதிபதி மாளிகை ஆண்ட கோமாளி கோட்டாவின் கோட்டைக்குள் மக்கள் வெள்ளம் புகுந்துள்ளது.


இலங்கை வரலாற்றில் பதிய பட்ட புதிய வரலாறு .தனி பெரும் பான்மை மூலம் வென்றவர் என்ற பெயரை கொண்ட கோட்டா இன்று அதே சிங்கள மக்களினால் ஜனாதிபதி மாளிகையை விட்டு நாயை போல விரட்ட பட்ட வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது .

தமிழன் அழிந்த அதே மாதத்தில் ஆரம்பிக்க பட்ட ராஜபக்ச கூட்டத்தின் அவலம் இது .

அரசியல் வாதிகளிற்கு நல்ல பாடமாக அமைய பெற்றுள்ளது .இது போலவே தமிழ் தலைமைகளுக்கு நடக்கும் என்பது நம்ம அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் சிறப்பு .

மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்திட நினைக்கும் அரசியல்வாதிகளிற்கு மக்கள் இனித் தர தயாராகும் தண்டனைகள் எவ்வாறு அமையும் என்பதை இதன் ஊடக காண முடியும் .

ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் காட்சிகள்இதோ
ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *