சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா ராஜபக்ஷ மீளவும் இனவாதத்தை காக்கி இருக்கிறார்.
ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய பொழுது சமாதானம் நாட்டு நிலவுவதற்காகவும் இலங்கை ஐக்கியப்பட்டு இலங்கையாக வாழ்வதற்காகவும் இந்த போரை தான் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மறு தரப்பு அழிக்கப்படத்தான் வேண்டும் என்கிறார் அவர்.
தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால்
ஆகவே அவரது கூற்றின்படி அது சரியாக இப்பொழுது இருக்கலாம். அதேபோன்று நாளை தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால் நீங்களும் அழிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இன்று தமிழர் வீழ்த்தப்பட்டதாக கூறும் இந்த மகிழ்ச்சி நாளைக்கு உங்களுக்கு திருப்பி நடந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.
இலங்கையுடன் சேர்ந்திருந்து ,தமிழகத்தை அழித்த நாடுகள் இன்று போரில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.
வீழ்ந்த இனம் தமிழினம் நாளை எழுந்து நடக்கும் அப்பொழுது உங்கள் தேசம் விழுந்து கிடக்கும்.
காப்பார் யாரும் இன்றி கண் துடைப்பார் யாருமின்றி .விழுந்து அழுகின்ற பொழுது .உங்கள் வீரத்தின் விலாசங்கள் அப்பொழுது சந்தி சிரிக்கும்.
தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம்
இனவாதத்தை காக்கி ஒரு இனமான விடுதலையை நசுக்கி .ஒருங்கிணைந்த நாட்டுக்குள் .ஒன்றுபட்ட வாழ துடிக்கும் தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம் தோற்றுப் போகும் என்பதை வருங்காலங்கள் பறைசாற்றும் .
தமிழன் எழுந்து நடக்கின்ற எதிர்காலம் அவன் கண்ணெதிரே மிளிரும் .
அவர்களுடைய அசுர வளர்ச்சி கண்டு சிங்கள தேசம் தலை குனியும் நிலை ஏற்படும்.
சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும்
தமிழன் வீரமுள்ளவன் என்பதையும் ,மானமுள்ளவன் என்பதையும் ,அமைதியாக கடந்து சென்றான் என்கின்ற வரலாறுகள் மீளவும் உங்களை தட்டி நிமிர்த்தி கேள்வி கேட்கும் .
சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும் ,என்பதை மறந்துவிடாதீர்கள் இனவாதிகளே இனஅழிப்பு நாயகர்களே.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்









