கொரனோ தாக்குதல் ஐவர் உயிரிழப்பு – மொத்த மரணம் 204 ஆக உயர்வு
கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் ஐவர் (05) மரணமடைந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 204 ஆகும்.
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (31.12.2020) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
- தர்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர்.. களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் 2020 டிசம்பர் 28ஆம் திகதி மரணமானார்.
- மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோய் அதிகரித்தமையால் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமையுடன் கொவிட் 19 நோய் தொற்று நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர்;. அம்பான்பொல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என
- இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு (National Institute of Infectious Diseases (NIID) ) மாற்றப்பட்டுள்ளதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர்
- 31ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலையுடன் ஏற்பட்ட உக்கிரமான நுரையீரல் தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 05 பிரதேசத்தைச் செர்ந்த 61 வயதான பெண் ஒருவர். கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீட வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 நோய்
- தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு ( National Institute of Infectious Diseases (NIID)) மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020
- டிசம்பர் 31ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் ஈரல் தொற்று மற்றும் கொவிட்-19 நியூமோனியா நிலை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர்.. கலேவெல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் 30 ஆம் திகதி மரணமானார்.
- மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நீரிழிவு சிக்கல் நிலையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெல்மதுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் நபர். இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 2020 டிசம்பர் 30ஆம் திகதி மரணமானார்.
- மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று இரத்தம் நஞ்சானமை மற்றும் நுரையீரல் நோய் நிலைமை என
- தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






