மட்டக்களப்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

Spread the love

மட்டக்களப்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் சில கிராம

உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக அறிக்கை

கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் இத் தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்படுவதாக

கொவிட் – 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

  1. காத்தான்குடி பொலிஸ் பிரிவு
  2. கல்முனை பிரதேசத்தில் கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவு

 கல்முனை 1
 கல்முனை 1 C
 கல்முனை 1 E
 கல்முனை 2
 கல்முனை 2 A
 கல்முனை 2 B
 கல்முனை 3
 கல்முனை 3 A
 கல்முனை குடி 1 (KALMUNAI KUDI 1)
 கல்முனை குடி 2 (KALMUNAI KUDI 2)
 கல்முனை குடி 3 (மKALMUNAI KUDI3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *