எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா
எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா ,என்னைக் கொல்லுவேன் என்று சொன்னவர்களை நேரில் சென்று சந்திக்கும் துணிவு எனக்கு இருக்கிறது..
துரோகிகளை அரவணைத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை ஆனால் அவர்கள் அண்ணனின் பெயரை பாவித்தால் உன்னை கொள்வோம் என்று சொன்னதன் பிறகு கூட ஓடி ஒளித்து தெரிவதற்கு கோழை அல்ல நான்..
பிரதேச வாதம் என்பது ஒரு கொடிய நோய்…
ஒரு காலத்திலே எங்களுடைய எல்லா வெற்றிகளுக்கும் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் மட்டக்களப்பின் மைந்தர்கள்…
காலம் சதி செய்தது …..
நரிகள் சதி செய்தது…
எங்கள் தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள்… அண்ணனிடமே பிரிந்து நின்றார்கள் அப்போது அவருடைய மனது துடித்துப் போய் இருக்கும் அல்லவா..
எவ்வாறு எனது அண்ணனுக்கு உனக்கு துரோகம் செய்ய முடிந்தது என்று நேரிலேயே கேட்க ஆசைப்பட்டேன்..
அண்ணனுக்கு எதிராகவே நின்றார்கள்…
ஆனால் அவர்கள் போட்டிருந்த அதே உடுப்பு அண்ணன் உடலிலும் இருந்தது…
அவர்களையும் ஒரு முறை பார்க்கத் துடிக்கிறேன் கருணா அம்மன் பிள்ளையான் அவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் தயவு செய்து அனுப்பி வைக்கவும்….
அவர்கள் சுடுவோம் கொலவோம் என்று சொன்னதன் பிறகு கூட ஒழித்து ஓடுவதற்கு நான் ஒரு கோழை அல்ல.
அங்கே சென்று அவர்களே சந்திக்க எனக்கு துணிவு இருக்கிறது.
என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் அண்ணனால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்லவா?
முதுகில் சுட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்..
எல்லாரும் துரோகிகள் என்றார்கள்…
அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை..
எவனொருவன் அன்னமூட்டி வளர்த்தானோ அவனை அவனது நெஞ்சிலேயே சுட்டுப் பார்த்து செத்துவிட்டார்களா என்று உடலை பரிசோதித்து சொன்னார்கள்..
அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் துடிதுடித்து நின்று போனது..
நான் அவர்களுடன் நேரில் கதைக்கவில்லை..
கதைத்து விட்டு சொல்கிறேன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று ? வீணாக அங்கேயும் இங்கேயும் 5 லட்சங்கள் 10 லட்சங்கள் கொடுத்து என்னை சுடுவதை விட நேரில் வரும்போது நெஞ்சில் சுடலாம் அல்லவா..
இப்படிக்கு அர்ச்சுனா.
இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி







