உன்னை மறந்தது பிழை தானோ
இறைவா இறைவா நீ இருந்தால்
இன்றே எனக்கொரு பதிலிடுவாய்….
எதுவரை என்னை நீ வதைப்பாய்
என் கேள்விக்கு என்ன பதலிடுவாய்…?
ஒருமுறை நீயொரு வர மிடுவாய்
ஓராயிரம் ஆண்டுகள் நான் வாழ்வேன் …
இறப்பும் பிறப்பும் ஒருமுறை தான்
இதை எழுதி வைத்தவன் நீயே தான் …
எழுதி வைத்து படைத்தவனே
என் இன்னல் துடைப்பாய் என்று தான் ..?
கல்லாய் உள்ளாய் கடவுள் என்றால்
கரங்கள் நீட்டி பயனில்லை ….
மூவேளை வணங்கும் படி நிலையால்
முட்டாளாகி போனேன் யான் …
இறைவன் இல்லை என்றே தான்
இறைவா உன்னை மறந்து விட்டேன் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -25/12/2017
வன்னி மைந்தன் கவிதைகள்